என்ன தொடர்பு?

விதிஷா : சக மாணவிகளின் ஆத்திரத்தால், பள்ளி மாணவி கெரசின் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டாள்.

மத்தியப்பிரதேச மாநிலம் விதிஷா மாவட் டத்தில் உள்ள சத்வாடியா சராய் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந் துள்ளது.ஏழாவது படித்து வந்த மாணவி நிதி; பள்ளியில் சக மாணவிகள் இருவர் இந்த மாணவியுடன் சண்டை போட்டனர். சண்டை வலுத்தது. பள்ளியை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, சக மாணவிகள் இருவரும் பின்தொடர்ந்தனர். அவர்களுடன் இன்னொரு சீனியர் மாணவியும் உடன் சென்றார்.நிதியை வழிமறித்து மூவரும் சண்டை போட் டனர். ஒரு கட்டத்தில், நிதியை தாக்கினர். மாணவிகளில் ஒருவர் கையில் வைத்திருந்த மண்ணெண் ணெயை நிதி மீது ஊற்றினாள். இன்னொரு மாணவி, தீப்பெட்டியில் இருந்து குச்சியை உரசி, தீப்பற்ற வைத்தார். தீக்காயங்களுடன் இருந்த நிதியை அவளின் குடும்பத்தினர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிதி இறந்து விட்டார்.

--------------------

செய்தியை வாசித்துவிட்டீர்களா. உடனே ஒருவர் கேட்பார், இந்த செய்திக்கும் உங்கள் பதிவுக்கும் என்ன தொடர்பென்று!

உங்களுக்குத் தெரியுமா "The Protection Of Women From Domestic Violence Act, 2005" என்ற பெயரில் ஒரு சட்டம் இருக்கிறது என்று? அதனைச் சுருக்கமாக "குடுமப வன்முறைச் சட்டம்" என்று அழைக்கிறார்கள். அந்த சட்டத்தின் அடிப்படை வரையறைகளின்படி "வன்முறை" என்பது மனைவிக்கு கணவனால் செய்யப்பட்டதாக மனைவி கருதுவது மட்டுமே! மனைவி கணவனுக்குச் செய்யும் எந்த வன்முறையையும் இந்தச் சட்டம் கண்டு கொள்ளாது. கணவன் பாடு அம்போதான்!

மேலும், இந்தச் சட்டத்தில் அடிப்படையில் "தீங்கிழைக்கப்பட்ட" அல்லது "பாதிக்கப்பட்ட நபர்" (Aggrieved Person) என்றால் "திருமணமான ஒரு பெண்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

" 'aggrieved person' means any woman who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;"

(http://www.vakilno1.com/bareacts/Domestic-Violence/s3.htm)

இந்த இடத்தில் "respondent" - அதாவது பிரதிவாதி என்பவன் கணவன். அவன் கஷ்டப்பட்டு வாதாடி தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிக்க முயலவேண்டும். ஆனல் அது மிகக்கடினம். ஏனெனில் சட்டம் முழுதும் அவனுக்கு எதிராகவே இயற்றப்பட்டிருக்கிறது.

"குடுமப வன்முறை" என்பதற்கான definition இந்தச் சட்டத்தில் எப்படி வரையறுத்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்:

(a) harms or injures or endangers the health, safety, life, limb or well-being, whether mental or physical, of the aggrieved person or tends to do so and includes causing physical abuse, sexual abuse, verbal and emotional abuse and economic abuse; or
(b) harasses, harms, injures or endangers the aggrieved person with a view to coerce her or any other person related to her to meet any unlawful demand for any dowry or other property or valuable security; or
(c) has the effect of threatening the aggrieved person or any person related to her by any conduct mentioned in clause (a) or clause (b); or(d) otherwise injures or causes harm, whether physical or mental, to the aggrieved person.

http://www.vakilno1.com/bareacts/Domestic-Violence/s5.htm

இதற்கான விளக்கங்களைப் படித்தீர்களானால் இதன் பயங்கரம் விளங்கும். இந்த சட்டத்தின் அடிப்படையில் நிகழும் கொடுமைகளையும் இதன் விபரீதங்களையும் பற்றி உண்மைக் கதைகளுடன் பிரிதொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.

சரி. மேற்கண்ட விதிஷா நிகழ்வைப்பற்றிய செய்தியின் மூலம் நீங்கள் அறிவது என்ன?

பெண் என்பவள் கொலை உட்பட எத்தகைய கொடுமையான செயலையும் செய்யத் தயங்குபவள் அல்ல. ஆகையால் வன்முறை என்பது ஆண்களால் பெண்களுக்குக் கெதிராக நடப்பவைதான் என்னும் அடிப்படை கருதுகோள் எத்துனை தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்பதை அடிக்கோடிட்டுக் காண்பிப்பதற்காகத்தான். இந்தப் புனைவுகோளின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்கள் ஆண்குலத்துக்கும், நாளடைவில் நம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எப்படிப்பட்ட கேடுகளை விளைவிக்கப் போகின்றன என்பதை நினைத்தால் பயங்கரமாக உள்ளது என்பதுதான் நிஜம்.

இதை பொதுமக்கள் மனத்தில் கொண்டு, இத்தகைய ஒருதலைச் சார்புள்ள சட்டங்கள் அறவே நீக்கப்பட்டு, குடும்ப வாழ்வு முறையை தக்கவைக்கும் நோக்கத்தில் இருபாலருக்கும் பொதுவான சட்டங்கள் இயற்றப்படவேண்டும் (gender-neutral laws) என்று ஒருமித்த குரல் எழுப்பவேண்டும். இது நம் கடமை. இல்லையேல் எதிர்காலத்தில் நம் நாட்டில் தகப்பன் பெயர் தெரியாத ஒரு சமுதாயம் கட்டாயம் உருவாகும்!