கோபம் கொண்டு கணவன் பேசாவிட்டாலும் சட்டம் பாயும்

"மருமகளுக்கு மாமியார் சாப்பாடு தரவில்லை என்றால் கூட அதை வன்முறையாகக் கருதி, வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் மாமியார் மீது நடவடிக்கை எடுக்கலாம்,'' என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். சமூக நலத்துறை மற்றும் அண்ணா மேலாண்மை மையம் சார்பில், "குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டம்' பயிற்சி துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. அண்ணா மேலாண்மை மையத்தின் இயக்குனர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்றார். சமூக நலத்துறையின் இயக்குனர் மணிவாசன் பேசுகையில், "குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டத்தை தமிழக அரசு 2006ம் ஆண்டு கொண்டு வந்தது.

மனைவியை கணவர் அடித்தார் என்பதும் வன்முறை தான். மனதளவில் மனைவியை துன்புறுத்துவதும் வன்முறை தான். மாமனார், மாமியார் கொடுமையிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இச்சட்டம் வழிகாட்டுகிறது,'' என்றார்.

மாநில மகளிர் ஆணையத் தலைவி ராமாத்தாள் பேசுகையில், "மனைவியை அடிப்பதும், உதைப்பதும் வன்முறை தான். அதேபோல மனைவியிடம் கோபப்பட்டு அவருடன் நான்கு நாட்கள் பேசாமல், சாப்பிடாமல் சில கணவர்கள் இருப்பார்கள். இதுவும் வன்முறையாக எடுத்துக் கொள்ளப்படும்,'' என்றார்.

மனைவியிடம் கோபம் கொண்டு கணவன் பேசாமல் இருந்தால் அது வன்முறை. உடனே கணவனை கைது செய்யலாம். ஆனால் கண்வன் மீது கோபம் கொண்டு மனைவி பேசாமல் இருந்தாலோ உணவு இட மறுத்தாலோ அது குற்றமேயில்லை. என்ன நியாயமடா இது!

1 மறுமொழி:

')) said...

விட்டா ஆண்கள் கல்யாணம் பண்ணாம இருந்தாலே குற்றம்னு சொல்லுவானுங்க போலிருக்கே, என்ன கொடும ஸார்
ஆண்களே உஷார்!