பெண்களையும் தண்டிக்க சட்ட திருத்தம் தேவை

"குடும்ப வன்முறையால் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் போலி புகார் கொடுக்கும் பெண்கள் மீது, நடவடிக்கை எடுக்க, சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, கேரள கோர்ட் ஆலோசனை வழங்கியுள்ளது.

கேரளாவை சேர்ந்த தம்பதிக்கு 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் சிறிது காலத்துக்கு, வெளி மாநிலத்தில் வசித்தனர். கேரளாவில் உள்ள தனியார் கல்லூரியில், கணவருக்கு விரிவுரையாளர் வேலை கிடைத்தபின் இருவரும் சொந்த மாநிலத்துக்கு திரும்பினர். 1998-ம் ஆண்டு, குழந்தை பிறப்பின்மை பிரச்னைக்கு மனைவி சிகிச்சை பெற்றார். இதன் பிறகு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 2002-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மனைவிக்கு வேலை கிடைத்தது. இதற்காக அவர் சென்னை சென்றார்.

இதன் பிறகு அந்த தம்பதிகளின் வாழ்க்கையில் சிக்கல் உருவானது. 2006-ம் ஆண்டு செப்டம்பரில் அலுவல் பணி காரணமாக மனைவி வெளியூர் சென்றார். உடன் அவரது கள்ளக் காதலனும் சென்றார். இருவரும் போட்ட கும்மாளம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவன உயர் அதிகாரி மொபைல் போனில் மெசேஜ்கள் அனுப்பி கணவருக்கு தெரியப்படுத்தினார்.

இது குறித்து மனைவியிடம், கணவர் விசாரிக்க, பிரச்னை வெடித்தது. அடுத்த நாளே மனைவி தாய் வீட்டுக்குச்ன்று விட்டார். மனைவியின் கள்ளக் காதலனிடம் கணவர் விசாரித்தார். பதிலுக்கு அந்தக் கள்ளக் காதலன் அவரை ஏளனம் செய்தார். இந்த சூழ்நிலையில், வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மனைவி வழக்கு தொடுத்தார். கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் செரியன் குரியகோஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. மொபைல் போனில் வந்த மெசேஜ்களை கணவர் ஆதாரமாக காட்டி, தன் மீது தவறு இல்லை என்பதை நிருபித்தார்.

அந்த மெசேஜ்களை படித்துப் பார்த்த மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார் போலியானது என்பதை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது. தனது கள்ள உறவை மறைப்பதற்காக மனைவி இது போல செய்து இருக்கிறார். குடும்ப வன்முறையால் கணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சட்டத்தின் கீழ் கணவர் மீது, போலி புகார் கொடுக்கப்படுகிறது. இந்த போக்கினால் இந்தச் சட்டமே கேலிக் கூத்தாகி விடுகிறது.

இதைத் தவிர்க்க, குடும்ப வன்முறை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த வழக்கில் கணவர் தான் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு உரிய நிவாரணம் அளிக்க சட்டத்தில் வழியில்லை. சட்டத்தை இயற்றுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கையை சிதைப்பவர்களுக்கு தண்டனை அளிக்க குடும்ப வன்முறை சட்டத்தில் வழி வகை இல்லை என்பது துரதிருஷ்டவசமானது.


இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது


1 மறுமொழி:

Anonymous said...

இவ்வழக்கு பொய் வழக்கு என்று கணவன்களால் நிருபிக்கப்பட்டாலும், தான் நிரபராதி என்று கணவன்களால் இவ்வழக்கிலிருந்து வெளிவரமுடியுமே தவிர, பொய் வழக்கு போட்ட பெண்ணிற்கு எந்த தண்டனையும் கிடையாது என்ற ஒரு தலைப்பட்சமான நீதி இந்திய நாட்டில்தான் உண்டு என்று சொல்ல முடியும்.

Tamilinian