Showing posts with label harassment. Show all posts
Showing posts with label harassment. Show all posts

கணவன்கள் ஏ.டி.எம்., மிஷின்களா? மனைவிகளுக்கு எதிராக போர்க்கொடி!

நவம்பர் 27,2009. செய்தி - தினமலர் (http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19275)

புதுடில்லி:"கணவன் என்பவன் மனைவிக்கு எப்போதும் பணம் கறக்கும் ஏ.டி.எம்., மிஷினா?' என்று ஆண்கள் உரிமை சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.கடந்த 19ம் தேதி உலக ஆண்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் டில்லியில் "இந்தியன் பேமிலி பவுன்டேஷன் (ஐ.எப்.எப்.,)' சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து ஆண்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி விட்டனர்; ஆண்கள் ஏ.டி.எம்., மிஷின்கள் அல்ல' என இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.டில்லியில் ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.எப்.எப்., நிறுவனர் பந்தி ஜெயின் குறிப் பிடுகையில், "கணவர் மீது பெண்கள் புகார் கொடுத்தால் 498ஏ பிரிவின் கீழ் ஆண்கள் தண்டிக்கப்படுகின்றனர். எந்த விசாரணையும் ஆண்களிடம் நடத்தப்படுவதில்லை. இந்த சட்டம் பெண்களுக்கு ஆதரவானது என்பதை விட மனைவிகளுக்கான சட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், மனைவிகள் புகார் கொடுத்ததும் கணவர் மட்டுமல்லாது, கணவரது தாய், சகோதரிகளும் கைது செய்யப்படுகின்றனர். 498ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் பெரும்பாலான புகார்கள் அடிப்படையில்லாதவை. நானும் எனது மனைவியால் பாதிக்கப்பட்டவன் தான். கணிசமான தொகையை ஜீவனாம்சமாக கொடுத்து வருகிறேன்' என்றார்.

பேரணியில் கலந்து கொண்ட ராகேஷ் ஜெய்ஸ்வால் குறிப்பிடுகையில், "என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது, ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக் கிறார். ஓராண்டில் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் அவர் ஜீவனாம்சம் கேட்டு விண்ணப்பித்திருப்பது நியாயமில்லாதது' என்றார்.

கமல் கபாடியா(59) என்பவர் குறிப்பிடுகையில், "என் மருமகள் என் மகன் மீதும் மனைவி மற்றும் என் மீதும் 23 குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் கொடுத்துள்ளார். இதில் ஒன்று கூட உண்மையில்லை. ஆனால், போலீசார் 498ஏ பிரிவை பயன்படுத்தி எங்களை தொல்லை செய்கின்றனர்' என்றார்.

'டிவி' தொடர் பார்க்க விடாததால் மனைவி விவாகரத்து

மும்பை : "எனக்கு பிடித்த "டிவி' தொடர்களை பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்; இதனால், எங்களுக்குள் தினமும் சண்டை ஏற்படுகிறது. இதை மனதில் வைத்து, பலவகையில் என்னை துன்புறுத்துகிறார்!' - இப்படி சொல்லி, குடும்ப கோர்ட்டில் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார் மனைவி. "திருமணத்தை முறிக்க விரும்பவில்லை; நான் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்' என்று கணவன் அப்பீல் செய்துள்ளார்.

செய்தி: தினமலர் - நவம்பர் 25,2009.
http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4542

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக இருக்கிறார் ஹர்ஷத்(34); இவர் மனைவி சீமா (31). சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்; திருமணம் ஆகி எட்டாண்டு ஆகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. "என் கணவர் என்னை பலவகையில் கொடுமைப்படுத்துகிறார். எனக்கு பிடித்தமான "டிவி' தொடர்களை பார்க்க அனுமதிப்பதில்லை. இது தான் சண்டைகளுக்கு காரணம். அதனால், எனக்கு சரியான பாதுகாப்பு அளிப்பதில்லை. நள்ளிரவில் தனியாக ஆட்டோவில் பயணிக்க வைக்கிறார். இது போன்ற சித்ரவதைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை' என்று குடும்ப நல கோர்ட்டில் மனு செய்தார் சீமா. வழக்கை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் கணவன் ஹர்ஷத் அப்பீல் செய்தார்.


"இந்திய சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம் திருமண பந்தம். அதை சாதாரணமாக முறிக்க முடியாது. "எந்த ஆதாரமும் இல்லாமல், என் மனைவி என் மீது சொன்னதை வைத்து விவாகரத்து கொடுத்திருப்பது சரியல்ல; திருமண முறிவு தொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் பல முறை சுட்டிக்காட்டிய கருத்துக்களை குடும்ப நல கோர்ட் காற்றில் பறக்க விட்டு, இப்படி விவாகரத்து அளித்துள்ளது. "எனக்கு திருமண முறிவுவேண்டாம். அதில் விருப்பமில்லை. என் குழந்தையை நான் வளர்க்க அனுமதிக்க வேண்டும்' என்று அப்பீல் மனுவில் அவர் கூறியுள்ளார்.

=====

பார்த்தீர்களா, பார்த்தீர்களா இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் அபலைப் பெண்கள் படும் அவலத்தை!

தனக்குப் பிடித்த டி.வி சேனலைப் பார்க்க இயலவில்லை. சரி, அந்தப் பெண்மணி தான் பெற்ற குழந்தையைக்கூட கவனிக்காமல் பொழுதுக்கும் டி.வி சீரியல்களைப் பர்த்துக் கொண்டிருந்திருக்கலாம், அதை கணவன் கண்டித்திருக்கலாம் - இப்படியெல்லாம் நீங்கள் நினைத்தால் அதற்கு உங்கள் ஆணாதிக்க மனப்பான்மைதான் காரணம்.

நல்ல வேளை, இந்தப் பெண்மணி விவாகரத்தோடு நிறுத்தி விட்டார். வேறு சில பெண்குலத் திலகங்கள் இன்னேரம் சட்டப் புத்தகத்தின் இண்டு இடுக்குகளில் உள்ள அத்தனை சட்டப் பிரிவுகளையும் கையிலெடுத்து கேசு மேல் கேசாக கணவன் மற்றும் அவனது பெற்றோர் மீது போட்டு நடுத்தெருவில் நிறுத்தியிருப்பார்கள்.

சரி, நீதி(!)மன்றங்கள் அவற்றுக்குச் செவி சாய்க்குமா என்றுதானே கேட்கிறீர்கள். ஹும். உங்களுக்கு நாட்டு நடப்பே தெரியாது போலிருக்கிறது!!

உலக ஆண்கள் நாள் தர்ணா

இன்று உலக ஆண்கள் தினம் சென்னையில் அகில இந்திய ஆண்கள் நலச் சங்கம் (AIMWA)மற்றும் ஆண்கள் உரிமை பாதுகாப்புச் சங்கம் இவற்றின் ஆதரவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோரிக்கைகளைக் கொண்ட கையேடுகள் நகரத்தில் பல இடங்களில் வினியோகிக்கப் பட்டன. பின்னர் "மெமோரியல் ஹால்" எதிரில் தர்ணா மற்றும் கோஷமிடுதலும் நடைபெற்றது. அவற்றின் முழு விவரங்கள் படங்களுடன் நாளை வெளிவரும்.

இன்று வினியோகிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கையேட்டை இங்கு காணலாம்:



அகில இந்திய ஆண்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை இதன்கீழ் காணலாம். மனைவியின் கொடுமையாலும் வன்முறையாலும் பாதிக்கப்படும் ஆண்களும் அவர்களது பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு இலவச உதவி பெறலாம்.

முக்கிய அறிவிப்பு:

இவர்கள் அனைவரும் இது போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களின் தவறான பயன்பாட்டாலும் பொய் வழக்குகளாலும் கெடுமதி கொண்ட மனைவிகளின் கைகளில் சிக்கி பாதிக்கப்பட்ட தன்னார்வலர்கள். வக்கீல்களல்ல!

ருசி கண்ட பூனை திரிக்கும் கயிறு!

பாதிரியார் கற்பழித்ததாக போலீசில் பெண் புகார்
நவம்பர் 18,2009. தினமலர்

திருச்சி : பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண் (!), திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை நேற்று அளித்த புகார் மனு விவரம்:

சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகளான நான், சில ஆண்டுக்கு முன், சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். வரதட்சணை விவகாரம் தொடர்பாக கணவரை பிரிந்து வாழ்ந்தேன்.

திருச்சி செவன்த் டே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார் ("அடிக்கடி" கற்பழிக்கும்போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதிருக்கட்டும் இவர் பாஷையில் "கற்பு" என்றால் என்ன அர்த்தம்? பதில்: இப்படித்தான் புகார் எழுதணும். அப்பத்தான் ரேப் செக்ஷன் சேர்க்கலாம்!).

வேறு ஒருவருக்கு என்னை திருமணம் (என்ன ஆச்சு முதல் புருஷன்? விவாகரத்து ஆச்சா இல்லையா?) செய்து வைத்த பாதிரியார், அதன்பிறகும் கட்டாய உறவை தொடர்ந்தார் (அடடா! இந்தப்பெண் பாவைக்குத் தெரியாமலெயே தொடர்ந்தாரா! அதெப்படி "கட்டாய உறவை" தொடர்ந்து செய்ய முடியும்? அதாவது, இவருக்கு அந்தப் பாதிரியாரின் உதவி தேவையாயிருந்த வரையில் அது நல்ல உறவு. வேலை முடிந்தவுடன் கட்டாய உறவு. உடனே போலீஸில் புகார். என்னய்யா "கற்பு" இது! ).

இதன் விளைவால் கர்ப்பம் தரித்த நிலையில், பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதன் பிறகும், பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை (எவ்வளவு நாளா நடக்குதாம்?). இதனால், கணவருடன் அங்கிருந்து வெளியேறியதோடு, பாதிரியாரின் செயல் குறித்து ஓசூரில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகியிடம் புகார் கொடுத்தேன். ஆத்திரமடைந்த பாதிரியார், அடியாட்கள் உதவியுடன் என்னை அடித்து துன்புறுத்தினார். கட்டாயப்படுத்தி கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்து வரும் பாதிரியார் சுதாகர் மற்றும் அவருக்கு உறுதுணையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார் (ஏன் இப்ப புகார்? உள் கதை என்ன?).

பூங்கோதையின் புகார் குறித்து, திருச்சி மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மன்னிக்க முடியாத குற்றம்!

ஆஞ்சனேயரை வணங்கிவிட்டு தன் அருமை மகனுடன் சிரித்துக்கொண்டு நிற்கும் இந்த அம்மையாருக்கு வயது சுமார் 60 இருக்கும். ஆனால் அவர்கள் முகத்தில் நீங்கள் காணும் மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. ஏன்? என்னதான் நடந்தது?

பெங்களூரில் வசிக்கும் இவர் வீட்டுக் கதவு ஒருநாள் நள்ளிரவில் திடீரென்று தட்டப்பட்டது. அதிரடியாக உள்ளே நுழைந்தனர் சென்னையைச் சேர்ந்த சுமார் பதினோரு போலீசார். அவர்கள் இவரது முடியைப் பிடித்து அடித்து குண்டுக் கட்டாக அவர்கள் வந்த வண்டியில் தூக்கிப் போட்டு, பலநூறு கிலோமீட்டர் தூரம் இரவோடு இரவாக பொட்டலம் கட்டி இழுத்து வந்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

ஏன் இந்த அவசரம்? அவர் என்ன உலகம் முழுதும் தேடப்படும் ஒரு பயங்கரவாதியா? எங்காவது குண்டு வைத்தாரா?

ஐயோ, உங்களுக்கு என்ன தெரியும் - அந்த அம்மையார் சாதாரண குற்றத்தையா செய்திருக்கிறார்! கேட்டால் அதிர்ந்துபோய் அந்த நடவடிக்கை சரியானதுதான் என்பதை நீங்கள் உடனே ஒப்புக் கொள்வீர்கள். "எல்லாம் தெரிந்த" பெண்ணியவாத போலி அறிவுஜீவிகள் கூட அது சரிதான் என்பர்!

அந்த வயது முதிர்ந்த அம்மணியை அப்படி அடாவடியாகக் கைது செய்து இழுத்து வந்து சிறையிலடைக்காமல் மட்டும் இருந்திருந்தால் நம் நாட்டின் பாதுகாப்பு என்ன ஆகியிருக்கும், சட்டம், ஒழுங்கு என்ன கதியாகியிருக்கும், நினைத்துப் பாருங்கள்!

அப்படி அந்தப் பெண்மணி செய்ததாகச் சாட்டப் பட்டிருக்கும் குற்றம்தான் என்ன?

நம் நாட்டில் புகுந்து நம் நாட்டு அப்பாவி மக்களை இஷ்டப்படி சுட்டுப் பொசுக்கிவிட்டு, தற்போது நம் வரிப்பணத்தில் (சுட்டி) ஜெயிலில் சுக வாழ்க்கையை அனுபவித்து வரும் அஜ்மல் கசாப் போன்று தீவிரவாதம் ஏதாவது செய்தாரா?

சர்க்காருக்குச் சொந்தமான நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலத்தை கபளிகரம் செய்து ஏப்பம் விட்டாரா?

இன்னொருவர் நிலத்தை அபகரிக்க அதன் சொந்தக்காரரை மிரட்டினாரா?

2000 கோடி ஹவாலா மோசடி செய்தாரா?

57 கோடி ரூபாய் பி.எஃப் (PF) மோசடி செய்தாரா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்காரர்கள் குற்றம் சாட்டும் (சுட்டி) 60,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தாரா?

இதெல்லாம் செய்திருந்தால்தான் பரவாயில்லையே. சாதாரணக் குற்றம்தானே என்று அவரை சும்மா விட்டிருக்கலாமே, அல்லது ஆசுபத்திரியில் படுக்க வைத்து ஃபிலிம் காட்டியிருக்கலாமே!

அவர் இவற்றையெல்லாம் விட மிகக் கொடிய பாதகம் அல்லவா புரிந்திருக்கிறார்!

அவர் செய்துள்ள அக்குற்றத்தின் முழுப் பரிமாணத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றால் சமீபத்தில் நம் நாட்டின் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள அதிகாரபூர்வ சுற்றறிக்கையை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.

அந்த சுற்றறிக்கை அப்படி என்னதான் சொல்கிறது?

"IPC Sec 498A சட்டம் பரவலாக தவறாக பயன்படுத்தப் படுகிறது. ஆகையால் ஒரு மனைவி புகார் கொடுத்தவுடன் அதில் சுட்டிய மனிதர்களைக் கைது செய்யாதீர்கள்."

இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் (498A போன்று) 7 ஆண்டுகளுக்குக் குறைவாக தண்டனை விதிக்கப் பட்டிருக்கும் குற்றங்களின் அடிப்படையில் புகார் வந்தால் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தடை விதித்து ஒரு சட்ட மாற்றத்தை இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தினர் கொண்டுவந்தார்கள். காரணம், பல லட்சக் கணக்கானவர்கள் சிறுசிறு குற்றம் புரிந்தவர்களாக குற்றம் சாட்டப்பட்டதால் கைது செய்ய்யப்பட்டு, ஆண்டுக் கணக்கில் ஒரு தீர்வும் இல்லமல் சிறையில் வாடுகிறார்கள்; அதனால் தனி மனித சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது; சிறைகள் நிரம்பி வழிகின்றன; அரசுக்கு வெட்டிச் செலவும் ஆகிறது என்பதால் இதனைத் தடுக்க இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்திருத்தம் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால் இன்னமும் அந்த சட்டத் திருத்தம் ஒரு முறையான அரசு ஆணைமூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. காரணம்? வக்கீல்கள் தங்கள் வருமானம் போய்விடுமே என்று அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களாம் (சுட்டி). இப்படிச் சொல்வது யார்? உள்துறை அமைச்சர் திரு. சிதம்பரம் அவர்கள்தான்! (மேல் விவரங்கள் இங்கே)

சரி, இந்த அரசாணையை நடைமுறைப் படுத்த வேண்டிய அமைச்சகம் எது? மத்திய உள்துறை அமைச்சகம்தான். ஏன் இன்னமும் அதை சட்ட பூர்வமாக்காமல் நாடாளுமன்றத்தையே கேலிக் கூத்தாக ஆக்கிக் கொண்டிருகிறார்கள்? அரசின் கடமை மக்களின் நன்மையை கருத்தில் கொள்வதா அல்லது பொய்க்கேசுகள் மூலம் ஜாமீன் எடுப்பது, ஈரங்கி வாங்குவது போன்ற வகைகளில் கட்சிக்காரர்களின் தலையைத் தடவி சில வக்கீல்கள் சம்பாதிப்பதற்குத் துணை போவதா? நீங்கள் இந்தக் கேள்வியை அமைச்சராவதற்குமுன் வக்கீல் தொழில் செய்தவராகிய தற்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களைத்தான் கேட்கவேண்டும்! (அவருடைய மனைவி திருமதி. சிதம்பரம் அவர்களும் ஒரு வக்கீல்தான் என்பது இங்கு தொடர்பில்லாத விஷயம்!)

இப்போது இந்த சுற்றறிக்கை மூலம் திரு. சிதம்பரம் அமைச்சராக இருக்கும் உள்துறை அமைச்சகம் இந்தச் சட்டம் வெகுவாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது! சட்டத் திருத்ததை அமுல் செய்யாமல் வெறும் சுற்றறிக்கை விட்டுக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கண்டுள்ள மேல் விவரங்களைப் பார்ப்போம்:-

In a communication sent to the Chief Secretaries and DGPs of all states and the Administrations of the Union Territories on October 13, the MHA has cited misuse of the clause.

“In some cases, every member of the husband’s family has been arrested, irrespective of whether they had a role in inflicting cruelty on the married woman or not. In some cases, the provisions have been used to settle personal scores. Cases have been reported where momentary anger has resulted in invocation of Section 498A, which resulted in the arrest of the members of the family shutting down any possibility of reconciliation in future and total collapse of the marriage. Even where there is a divorce proceeding, the case under Section 498A continues to persist because of the offence being non-compoundable,” the letter says.

இந்த 498A சட்டத்தின் துஷ்பிரயோகத்தால் அத்தகைய பொய்க் கேசு போடும் பெண்களின் கதி கடைசியில் என்ன ஆகிறது என்ப்தைப் பற்றி இந்தக் கடிதம் என்ன சொல்கிறது என்ப்தைப் பார்த்தீர்கள் அல்லவா! தீயது விதைத்தால் நல்லதா விளையும்!

சரி. அரசே ஒப்புக் கொள்கிறது. இந்த சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்றும், அதனால் பெண்கள் நலனே பதிக்கப்படுகிறது என்றும். பிறகு இந்த சட்டத்தைத் திருத்துவதுதானே?

இந்தக் கேள்விக்கு அந்தக் கடிதமே பதில் சொல்கிறது பாருங்கள்:-

The MHA letter, incidentally, says that in light of judicial pronouncements, an attempt was made earlier to find a via media by amending Section 498A to make the offence compoundable. “However, this could not be pursued because of the opposition from women organisations,” the letter says.

இப்பொது புரிகிறதா, வில்லன்கள் யாரென்று?

ஒரு சட்டத்திருத்தத்தை பாரளுமன்றம் நிறைவேற்றியும் வக்கீல்களின் வருமானத்தைக் காப்பாற்றுவதற்காக நிறுத்தி வைத்துள்ளனர்.

இன்னொரு சட்டத் திருத்தம் கொண்டுவருவதை பெண்ணிய இயக்கங்கள் "தங்கள் வருமானம் போய்விடுமே" என்ற பயத்தில் எதிர்ப்பதால் நிறுத்தி வைத்துள்ளார்கள்!

மக்களைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை. It is evident that the government is playing into the hands of certain vested interests.

இந்த 498A சட்டம் முழுமையாக் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று இதற்கு முன்னமையே ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டுள்ளவர்கள் யார்யார்?
  1. நம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அவர்கள்
  2. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்கள்
  3. இதை சட்டபூர்வ பயங்கரவாதம் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரு.அர்ஜித் பசாயத் மற்றும் திரு.ஹெச்.கே.சீமா அவர்கள்
  4. ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி அவர்கள்

மற்றும் பல நீதிபதிகள், அரசியல்வாதிகள், மக்கள் நலத்தில் உண்மையான அக்கறை கொண்டோர்...

இதுதான் நம் நாட்டின் நிலைமை.

இது புரியாமல் பல ஜொள்ளுக் கிழங்கள் " ஐயகோ, பல அப்பாவி இளம் பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்தில் அபலைகளாக அலைகிறார்களே" என்று பிலாக்கணம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சட்டத் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் வரையில் மேலே நீங்கள் கண்ட படத்திலிருக்கும் வயதான அம்மமையார் போன்ற அப்பாவி முதியோர்களும், திருமணம் செய்து கொண்ட பாவத்திற்காக இளம் கணவர்களும், அவர்களின் சுற்றமும் சூழலும் ஒட்டு மொத்தமாகக் கைதாகி ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான்!

ஆம். அந்த அம்மையார் ஒரு ஆணைப் பெற்றெடுத்து அவனுக்கு திருமணமும் செய்வித்த மன்னிக்க முடியாத குற்றத்தைத்தான் செய்துள்ளார்! அவர் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டியவர்தான் என்பதை இப்போது ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா?!

அவர் அனுபவித்த கொடுமைகளைப் பட்டியலிட்டு காவல் துறைத் தலைவருக்கு வடித்துள்ள கடிதத்தின் மூலம் அந்த சோகக்கதையை அறியலாம். நெஞ்சை திடப்படுத்திக் கொண்டு இங்கிருந்து அதனை டவுன்லோடு செய்து வாசியுங்கள்.

உங்கள் மனத்தில் தற்போது எழப்போகும் கேள்விகள்:-

  • தேசிய பெண்கள் வாரியத்தின் நோக்கில் இந்த முதிய அம்மையார் பெண்ணினத்தில் சேர்ந்தவராகக் கருத்தப்பட மாட்டாரா?

  • அது போன்ற இயக்கங்கள் தவறு செய்யும் பெண்களுக்காகத் தானா?

  • ஆண் பிள்ளையைப் பெறுவதே இந்நாட்டில் பெருங்குற்றமா?

  • இதுபோல் ஒருதலைச் சார்பான சட்டங்களின் தவறான பயன்பாடு இன்னும் அதிகமாகப் பெருகி ஒரு கட்டத்தில் சமூகக் கிளர்ச்சி ஒன்று ஏற்படும் அபாயம் உள்ளதே, ஏன் ஒருவரும் இதற்கான தீர்வை செயல்படுத்த மறுக்கிறார்கள்?

  • இந்நாட்டு ஆண்களைப் பொறுத்தவரை திருமணம் என்பதே பாம்புப் புற்றில் கைவிடுவது போன்று ஆகிவிட்டதே; சீக்கிறமே ஆண்சிசுக் கொலைகள் நடக்கத் தொடங்கிவிடுமா?"


பதில் உங்கள் கையில்!

பெருகுது 498A அறுவடை, ரொம்புது கல்லா!

கீழ்க்கண்ட புகார்களின் நடைமுறைக்கு ஒவ்வாத "டெம்பிளேட்" தன்மையையும், கற்பனை வளத்தையும், வெளிநாடுகளில் இதுபோன்ற பொய் வழக்கு ஜோடனைகளின் பருப்பு வேகாது என்பதால் அங்கு நடந்தவைக்கு நம்மூரில் வந்து புகார் கொடுக்கும் அவலத்தையும் காணுங்கள். இங்குதானே "ஐயோ பாவம், அபலைப் பெண்கள்" என்று கண்ணீர் விட்டுக் கதறி உருக வைத்து, "உன்னுடன் வாழாத மனைவி கேட்கும் ரொக்கத்தைக் கொடு, இல்லாவிடில் ஜெயிலுக்குப் போ" என்று உத்தரவுகள் பெற்று, ஆண்களை இலவச ஏ.டி.எம் மெஷீனாக மாற்றும் சடங்கு நடக்கும்!

தினந்தோறும் அறங்கேற்றப்படும் நம் புதுமைப் பெண்களின் புனிதத்தன்மையைக் கண்டு களித்து கலியாணம் செய்து கொண்டு வயதான பெற்றோருடன் கூட்டாக கைது செய்யப்பட்டு ஜெயிலுக்குப் போங்கள்!

1.
அருப்புக்கோட்டையில் இளம்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை; 4 பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டை, நவ.10 - 2009. தினத்தந்தி

அருப்புக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.

திருமணம்

அருப்புக்கோட்டை நல்லூர் முஸ்லிம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலிபாத் திமா (வயது 22). இவருக்கும் அஜீஸ்நகர் பஜீருல் ஹக் என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, மணமகள் வீட்டார் சார்பில் 10 பவுன் நகையும், 70 ஆயிரம் ரொக்கமும் தருவதாக பேசப்பட்டது. ஆனால் அப்போது 10 பவுன் நகையும், 16 ஆயிரம் ரொக்கமும் கொடுக்கப்பட் டது. மீதி ரொக்கப்பணத்தை 2 மாதம் கழித்து தருவதாக மணமகள் வீட்டார் சார்பில் பேசப்பட்டதாக தெரிகிறது.

கொடுமை

ஆனால் அதன்படி மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இத னால் மீதி பணத்தை வாங்கி வரும்படி செய்யது அலி பாத்திமாவை கணவர்பஜீருல் ஹக், அவரது தாயார் ஆயிஷா பீவி, அண்ணன் காட்டுபாவா, தம்பிரியாஸ் ஆகியோர் துன் புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செய்யது அலி பாத்திமா அருப்புக் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து

பஜீருல் ஹக் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

2.
வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்,அக்.28 - 2009. தினத்தந்தி

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வரதட்சணை கொடுமை

திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி வடக்குபாறைப்பட்டியை சேர்ந்தவர் கவிதா (வயது 24). இவருக்கும், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சங்கர் (30) என்பவருக்கும் இடையே கடந்த 3.12.2009-ந்தேதியன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 27 பவுன் தங்கநகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கபணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதற்கிடையே கவிதா கறுப்பாக இருப்பதாகவும், படிக்கவில்லை என்றும் கூறி சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது.

மேலும் கூடுதலாக 15 பவுன் தங்கநகை மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் பணம் கேட்டு வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கவிதா மனுதாக்கல் செய்தார்.

பெண் கைது

இந்த மனுவினை விசாரித்த மாஜிஸ்திரேட்டு உமாராணி, புகார் கூறிய சங்கர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதாதேவி புகார் கூறப்பட்ட சங்கர், அவரது தாயார் கமலா (57), உறவினர்கள் பாமா (38), பாக்கியலெட்சுமி (35), சுதர்கனா தேவி (46), ராஜேந்திரன் (46), ரகுநாதன் (40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த சுதர்கனாதேவியை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3.
தனி அறையில் அடைத்து கொடுமை: லண்டன் கணவர் மீது மனைவி புகார்

நவம்பர் 08,2009. தினமலர்

காரைக்குடி: வரதட்சணை கேட்டு தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பிரதீபாவுக்கும் (23), கல்லலை சேர்ந்த சண்முகம் மகன் ராமநாதனுக்கும் (29) கடந்த 2007 ல் திருமணம் நடந்தது.

கணவர் குடும்பத்தினர் லண்டனில் தொழில் செய்து வந்தனர். சில மாதங்களில் பிரதீபா அங்கு சென்றார்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு, அங்கு தனி அறையில் பிரதீபா அடைக்கப்பட்டார். கணவருடன் தொடர்பு இல்லாத நிலையில், பெற்றோரிடம் பேசவும் தடை விதித்தனர். அங்குள்ள உறவினர்கள் உதவியுடன் கடந்த டிசம்பரில் பிரதீபா நாடு திரும்பினார்.கணவருடன் சேர்த்து வைக்க கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தற்போது நிலுவையில் உள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி லண்டனில் இருந்து பிரதீபாவின் மாமனார் சண்முகம், மாமியார் வசந்தா நாடு திரும்பினர். அவர்களிடம் பிரதீபாவின் பெற்றோர் பேச்சு நடத்தினர்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்தால் மகனோடு சேர்ந்து வைப்பதாக கூறினர்.இதுகுறித்து காரைக்குடி மகளிர் போலீசில் பிரதீபா புகார் செய்தார்.கணவர் ராமநாதன்,அவரது பெற்றோர் மீது இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

4.
ஐதராபாத்தில் வரதட்சணை கொடுமை புகார்

கோவை : ஐதராபாத்தில் கணவர் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்ட பெண், நடவடிக்கை கோரி கோவை போலீசில் புகார் கொடுத்தார்.கோவைப்புதூர், சிறுவாணி நகரைச் சேர்ந்தவர் தேவா(32). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சுமலதா(28)வுக்கும் 2007ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் தேவா தனது குடும்பத்துடன் ஐதராபாத், குருமூர்த்தி லேன் பகுதியில் குடியேறினார்.சில நாட்களுக்கு முன், ஐதராபாத்திலிருந்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய சுமலதா, தன்னை கணவரும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசில் சுமலதா புகார் கொடுத்தார். அதில், கணவர் தேவா, மாமியார் பட்டம்மாள், மாமனார் ராஜகோபால் மற்றும் உறுவினர் ரோகிணி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார், சம்பவம் நடந்த இடம் ஐதராபாத் என்பதால், மேல் நடவடிக்கைக்காக, முதல் தகவல் அறிக்கையை ஐதராபாத் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

5.
வரதட்சணை கேட்டு மிரட்டல்:
பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்த போலி வக்கீல் கைது

சென்னை, அக்.25- 2009. செய்தி - தினத்தந்தி

பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்ததுடன், வரதட்சணை கேட்டு மிரட்டிய 'போலி' வக்கீல் கைது செய்யப்பட்டார்.

பெண் வக்கீல்

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மோசஸ். இவருடைய மகள் உஷா மோசஸ் (வயது 39). சென்னையில் வக்கீலாக வேலைபார்த்து வருகிறார். உஷா மோசஸ் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2004-ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் வக்கீல் ஒருவரிடம் ஜுனியராக வேலை பார்த்தேன். அப்போது மற்றொரு வக்கீல் ஒருவரின் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்த ஸ்ரீராமுலு என்ற பால் ஸ்ரீராம் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஸ்ரீ ராமுலு திருத்தணி கிருஷ்ணசமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்தவர். வக்கீல் தொழில் பார்த்து வருவதாக கூறினார். அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

மோசடி

அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமுலுவும் நானும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருத்தணியில் கிறிஸ்தவ முறைப்படி எங்களுடைய திருமணம் 14.9.2005 அன்று நடந்தது. அதன் பிறகு சென்னை வரத முத்தையப்பன் தெருவில் வசித்து வந்தோம். திருமணத்திற்கு பிறகுதான் அவர் போலி வக்கீல் என்பது தெரியவந்தது.

பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள ஸ்ரீராமுலு, ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படிக்க சேர்ந்ததுடன் சரி, பட்டம் எதுவும் வாங்கவில்லை. எந்த கோர்ட்டிலும் வாதாடவில்லை என்பது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து கேட்ட போது, என்னுடன் தங்குவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், எனக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதை காரணம் காட்டி, தன்னுடைய சகோதரி மகள் சரிதா என்பவரை 2-வது திருமணம் செய்யப்போவதாக ஸ்ரீராமுலு கூறினார்.

இந்த நிலையில், ஸ்ரீராமுலு சரிதாவை எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இது பற்றி அவரிடம் கேட்டதற்கு, என்னுடன் வாழ வேண்டும் என்றால் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உஷா மோசஸ் புகாரில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பெரியய்யா ஆகியோர் மேற்பார்வையில் கொத்தவால்சாவடி இன்ஸ்பெக்டர் ஹரிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஸ்ரீராமுலு மீது 406, 420, 467 பிரிவு 4, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் (இது எங்கிருந்து வந்தது!) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது

விசாரணையில் ஸ்ரீராமுலு திருத்தணியில் நடந்த அடிதடி வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்பதும், தன்னை போலீசார் தேடுகிறார்கள் என்பதை அறிந்தால் அவரை தலைமறைவாகி விடலாம் என்பதால் அவரை 'பொறி' வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஸ்ரீராமுலுவிடம் செல்போன் மூலம் உஷா மோசஸ் பேசினார்.

இனிமேல் சண்டை போடமாட்டேன் என்றும் கேட்ட வரதட்சணை பணத்தை தருவதாகவும், எனவே சென்னைக்கு வரவேண்டும் என்றும் ஸ்ரீராமுலுவிடம் கேட்டுக் கொண்டார். அவரது பேச்சை உண்மை என்று நம்பிய ஸ்ரீராமுலு நேற்று முன்தினம் சென்னை வந்த போது போலீசில் சிக்கிக் கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் போலி வக்கீல் என்று கூறி ஏமாற்றியதையும், வரதட்சணை கேட்டு மிரட்டியதையும், 2-வது திருமணம் செய்ததையும் ஒப்புக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

என்னை 'டார்ச்சர்' செய்யும் பெண்ணை என்ன செய்வது?

ஹலோ தோழியே ..! (தினமலர் 2-11-2009)

என்னை 'டார்ச்சர்' செய்யும் பெண்ணை என்ன செய்வது?

பெண்கள் தான் ஆண்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்வது தவறு; ஆண்கள் பலரும், பெண்களால் பாதிக்கப்படுகின்றனர் என்ற அர்த்தத்தில், பாதிக்கப்பட்ட வாசகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். இனி அவர்...

எனக்கு திருமணமாகி எட்டு மாதமாகிறது. நான் எம்.ஏ., எம்.பில்., முடித்துள்ளேன். பெண் பார்க்கும் போது, அவளது வெள்ளை நிறத்தில் மயங்கிய நான், மற்றவற்றை பற்றி விசாரிக்கத் தவறிவிட்டேன். பெண் டிகிரி படித்திருப்பதாக கூறினர். எனக்கு அப்பா, அம்மா கிடையாது. அதனால், என்னை எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் அவசர அவசரமாக தேதியை குறித்து திருமணம் செய்து வைத்தனர்.

முதலிரவிலேயே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவள் கன்னித்தன்மையோடு இல்லை. விசாரித்த போது, அவள் ஏற்கனவே திருமணமானவள் என்பது தெரியவந்தது. எட்டாவது மட்டுமே படித்து இருக்கிறாள். அவர்களது கிராமத்திலேயே ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவள் அவனை, "டார்ச்சர்' செய்து, அவனை பைத்தியக்காரனாக்கிவிட்டு ஓடி வந்துவிட்டாளாம். இதைப்பற்றி, திருமணத்துக்கு முன் யாரும் என்னிடம் எதுவும் கூறவில்லை.

இருந்தும், தாலி கட்டிய பாவத்திற்காக அவளோடு வாழ்ந்தேன். ஆனால், தற்போது, என்னையும், "டார்ச்சர்' செய்கிறாள். இவளைப் போன்ற பெண்களுடன், எந்த ஆணாலும் வாழமுடியாது. ஒவ்வொரு நாளும் நரக வேதனையாக உள்ளது. இனியும் இவளுடன் சேர்ந்து வாழமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

இப்படிப்பட்ட பெண்களும் இருக்கத்தானே செய்கின்றனர்? பின், ஏன் இந்த சமூகம் எதற்கெடுத்தாலும் ஆண்களையே குறை சொல்கிறது? இவளை நான் விவாகரத்து செய்வது முறைதானே? இதில் தவறொன்றும் இல்லையே! வழிகாட்டுங்கள் தோழிகளே' என்று, பெயர் வெளியிட விரும்பாத வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

என்ன தோழியே... இந்த வாசகருக்கு வழிகாட்ட விருப்பமா? எடுங்கள் பேனாவை! எழுதுங்கள் எங்களுக்கு...

ஹலோ தோழியே, தினமலர், 219, அண்ணா சாலை சென்னை 600 002.

ஆகா, இவளல்லவோ தெய்வீகப் பெண்!

நிச்சயமாக இந்தப் புதுமைப் பெண்ணுக்கு கோயில் எழுப்ப வேண்டும். ஏனெனில் நம் நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களின் உன்னத நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டிய கைங்கரியத்தை இவர் செய்துள்ளார். இவளை திருமண சீர்திருத்த இயக்கத்தின் தலைவியாக அமர்த்த நாம் பரிந்துரை செய்யலாம்!

தினமும் நாம் (குறைந்தது அரை டசன் கேசுகளாவது) செய்தித்தாள்களில் வாசிக்கும் செய்தி இதுபோல்தான் இருக்கும். அதாவது - ஒரு அப்பாவிப் பெண்ணைக் காதலித்து கைவிட்டு விட்டான் ஒரு போக்கிரி ஆண். அந்த அபலை காவல் நிலையத்தில் கண்ணீரும் கம்பலையுமாக புகார் கொடுத்தாள். அவளுக்கு ஆதரவாக பெண்கள் இயக்கத் தலைவியும் சென்றார். உடனே அந்த ஆணைக் கைது செய்து சிறையிலடைத்தார்கள்.

அந்தப் பெண் தன் பேட்டியில், "நான் ஒரு உன்னத தமிழ்ப்பெண். என்னைக் காதலித்த அந்த ஆணுடன்தான் நான் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவேன். அவனுடன் திருமணம் நடக்க அவனுடைய பெற்றோர்கள்தான் தடையாக உள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் காதலர் நான் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கிறார். அந்த நபர் என் நண்பர்தான். அவருடன் இரவில் நெடுநேரம் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருப்பேன். அதைப்போய் ஒரு குற்றமாகக் கருதி என் காதலர் என்னுடன் சண்டை போட்டார். அதனால்தான் புகார் கொடுத்தேன்" என்றார்.
- இப்படித்தான் இதுபோன்ற காமக் கதைகள் ஓடும். உடனே நம் பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும், "ஐயகோ, அந்தப் பெண்னை கைவிட்டுவிட்டானே காமாந்தகாரன், சண்டாளன், இவனை என்ன செய்தாலும் தகும்" என்று கும்மியடித்து கோலாட்டம் போடுவார்கள்.

சரி அந்த முட்டாள் ஆணின் மீது கேசு போட்டு கைது செய்கிறார்களே, அது எந்தக் குற்றப் பிரிவின் கீழ் என்று விசாரித்தால், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஏமாற்றல், கற்பழிப்பு, பெண்களை பொது இடத்தில் மானபங்கம் செய்தல் இதுபோன்று ஆண்களை ஆண்களாக அவர்கள் பிறந்தத்தற்காகவே குற்றவாளியாக்குவதற்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் 40-க்கும் அதிகமான சட்டங்களில் சிலவற்றைப் போட்டு ஊத்தி மூடி விடுவார்கள்.

ஆனால், அதேபோல் ஒரு பெண் ஒருவனைக் காதல் செய்து விட்டு இன்னொருவனோடு ஓடினால், அதுவும் ஒருவனோடு திருமணம் நிச்சயம் ஆனபிறகு அந்தத் திருமண நாளன்றும், அல்லது திருமணம் முடிந்த பின்பும் இன்னொருவனோடு ஓடினால் அந்தப் பெண்மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

ஒரு புண்ணாக்கும் முடியாது. அந்தக் கணவன் வாயில் விரல் போட்டு சப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!

சந்தேகமிருந்தால் "தேவதையைக் கண்டேன்" என்னும் திரைப் படத்தில் தனுஷ் பேசுவதை இந்த வலைப்பதிவில் பாருங்கள்.

ஆகையால் இளைஞர்களே, நீங்கள் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளுங்கள், இதோ இந்த உன்னதப் பெண்ணின் பண்பாடு செறிந்த நடவடிக்கையைக் கண்ட பெருமிதத்துடன்!!

செய்தி - தினமலர். அக்டோபர் 29,2009.

கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்.

திண்டுக்கல் : கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில் பார்த்ததும், அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நர்ஸ் வேலை பார்த்த உஷா தான் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார். (திருமணத்துக்கு முன்பே ஒருவனைக் காதலித்தவள் இன்னொருவனுடன் திருமணம் செய்து கொண்டு அவன் வாழ்க்கையை ஏன் கெடுக்கிறாள்? இதற்கு எல்லாம் தெரிந்த "டோண்டு" தான் பதில் சொல்ல வேண்டும்)

இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

சாமுவேல் தனது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று திருவாரூரில் காதலனுடன் தங்கியிருந்த உஷாவை அழைத்து வந்து கள்ளிமந்தையம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நேற்று உஷாவை திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில், கணவனுடன் செல்ல மறுத்த உஷா, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார்.

கோர்ட் முடிந்து வாசலுக்கு வந்த தாயைப் பார்த்ததும், இரு குழந்தைகளும் கதறி அழுதன. ""அம்மா நம்ம வீட்டுக்கு வாம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாலு பேரும் ஒன்றாக இருக்கலாம்'' என அழைத்தனர். இதனை கேட்டு கோர்ட் ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். ஆனாலும் உஷா தன் கணவனுடன் செல்ல மறுத்து விட்டார்.

"உஷா காதலனுடன் செல்வதற்காகவே என்னுடன் வர மறுக்கிறார்." அவரை அழைத்து வந்த காதலன் பிரகாஷ் கோர்ட்டிற்கு வந்திருப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.

உஷாவிடம் கேட்ட போது, "என் கணவர் என்னிடம் பணம் கேட்டு அடித்து தகராறு செய்ததால் நான் வெறுத்துப்போய் தாய் வீட்டிற்கு செல்கிறேன். (அட்ரா சக்கை! இதைச் சொன்னால்தானே கேள்வி கேட்கும் கணவனை 498A போட்டு பயமுறுத்தி, அடக்கி வைத்து கள்ளக் காதலுக்கும் சேர்த்து அவனிடமிருந்து மிரட்டிப் பணம் பறிக்க முடியும்! கணவனிடம் சேர்ந்து குடும்பம் நடத்த ஒப்பாமல் ஓடிப்போகும் மனைவிகள், கணவர்களிடமிருந்து பணம் பறிக்க 40+ வித சட்டங்கள் உள்ளன. நீதிபதிகளும், அவள் அதற்கு சட்டடப்படி தகுதியுள்ளவளா என்றெல்லாம் ஆராய்வதற்கு முன்னமையே, "முதலில் மனைவி கேட்ட பணத்தைக் கொடு" என்று தீர்ப்பு அளித்து வருகிறார்கள். பிறகென்ன, கொண்டாட்டம்தான்! கள்ளக் காதல் மனைவிகளுக்கு சட்டங்கள், போலீஸ், பெண்ணியவாதிகள், நீதிபதிகள் போன்றோர் உபயத்தினால் கணவன் காசில் தினந்தோறும் தீபாவளிதான்!. கேடுகெட்ட சமுதாயமய்யா இது!!) எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே காதலன் இருப்பது என் குடும்பத்தாருக்கும்,கணவன் குடும்பத்தாருக்கும் தெரியும். தற்போது காதலன் வேறு பெண்ணை மணந்து அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், அவருடன் செல்ல வாய்ப்பு இல்லை. நான் என் தாய் வீட்டில் தங்கப்போகிறேன்,'' என்றார். (ஆகா, இவளல்லவா, பாரதி கண்ட புதுமைப் பெண்! வாழ்க மனோரமாவின் இயக்கம்!)

=========================

"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, பெண்கள் ஆனந்த முழுச் சுதந்திரம் அடைந்து விட்டார்கள் என்று ..."

ஆண்களை அழிக்க இன்னொரு ஆயுதம்!

தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் எந்தக் குற்றத்தைப் புரிந்ததாக அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள் தெரியுமா? "தமிழ்நாடு பெண்களை செக்ஸ் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 1998" (Tamil Nadu Prohibition of Harassment of Women Act, 1998). நீங்களே சொல்லுங்கள், அவர் எந்தப் பெண்ணை செக்ஸ் கொடுமை செய்தார்?

இதில் நகைமுறண் என்ன தெரியுமா? இந்தச் சட்டம் போடப்பட்டது சரிகா ஷா என்னும் எதிராஜ் கல்லூரி மாணவி 1998-ல் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்து போனதன் பிறகு. அது போன்ற வெளிப்படையான தாக்குதல்கள் பெண்களுக்கு பொது இடங்களில் நடக்கக் கூடாது என்பதற்காகப் போடப்பட்ட கடுமையான சட்டம் அது. ஆனால் அன்று நிகழ்ந்தது போல் ஈவ்டீசிங் தாக்குதல்களுக்கு உண்மையிலேயே உட்படுத்தப்பட்ட அப்பாவிப் பெண்களுக்கு இந்தச் சட்டம் உதவுகிறதோ இல்லையோ, அரசியல் காரணங்களுக்காக சிலரைக் கைது செய்யவும், சில பெண்கள் ஆண்களைப் பழி வாங்குவதற்கு ஏதுவாகவும் தான் இது பயன்படுத்தப் படுகிறது.

ஏற்கனவே பெண்களுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளைத் தண்டிப்பதற்கு இ.பி.கோ 354, 509, 294 என்னும் சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. இவைகளைக் கொண்டு இத்தகைய குற்றங்களைப் புரிவோர்களைக் கடுமையாகத் தண்டிக்க இயலும். ஆனால் நம் நாட்டில் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கையிலெடுத்தால் போதும். உடனே அரசியல்வாதிகளும், பெண்ணியவாதிகளும், வக்கீல்களும், நீதிபதிகளும் சேர்ந்து "சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும்" என்று கூக்குரலிடுவார்கள். ஒரே இறைச்சலாக இருக்கும். உடனே ஒரு knee- jerk reaction கொடுத்து, ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கடுக்காக ஒரே வித குற்றங்கள் பெயரைச் சொல்லி மேன்மேலும் கடுமையாக்கப்பட்ட பல சட்டங்களை இயற்றி விடுவார்கள். இதுதான் நம் நாட்டில் இருக்கும் நடைமுறை. இதுபோன்ற ஆக்டபஸ் சட்டங்கள்தான், கெடுமதிப் பெண்களுக்கும், அவர்களை வழி நடத்தும் வக்கீல்களுக்கும் நல்ல அறுவடைக் களமாக அமைகிறது. இந்தச் சட்டத்தின் உட்கூறுகளைக் கவனியுங்கள்:

The Tamil Nadu Prohibition of Harassment of Women Act defines public sexual harassment as harassment by a man, including any indecent conduct, which could cause or causes intimidation, shame, fear or embarrassment, including the threat or actual use of force.

இச்சட்டத்தின் இன்னொரு கொடுங்கோன்மைப் பகுதி என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டவன் தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவுடனேயே (அதாவது ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே) அந்த ஆண் குற்றம் புரிந்தவனாகக் கருதப்படுவான். பிராசிக்யூஷன் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் அவன் அக்குற்றத்தை தான் செய்யவில்லை என்று அவன்தான் சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும் (the onus of proving innocence lies on those accused). இதுதான் ஆண்களுக்கு எதிரான பலவிதச் சட்டங்களின் அடிப்படைக் கட்டமைப்பு!

இப்போது இந்த தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமைச் சட்டத்தின் நடைமுறைப் பயன்பாட்டுக்கு வருவோம். இன்றைக்கு பொது இடங்களில் ஆண்களும் பெண்களும் கலந்துதான் நடமாட வேண்டியிருக்கிறது. லிஃப்ட், துணிக்கடை, சினிமா தியேட்டர், நடைபாதை, ஷாப்பிங் மால், மற்றும் அரசு அலுவலங்கள் இவற்றிலெல்லாம் அன்றாடம் ஆண்களும் பெண்களும் குறுகிய இடங்களில் செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது ஆணின் கை அருகிலிருக்கும் பெண்ணின் மேல் படும். உடனே அவள் அந்த ஆணின்மீது இந்த செக்ஸ் குற்றத்தை சுமத்தலாம். "அப்படியெல்லாம் பெண்கள் துணிந்து செக்ஸ் புகார் கொடுக்கத் தயங்கமட்டார்களா" என்று நீங்கள் ஐயப்பட்டால் உங்களுக்கு இந்தக் காலப் பெண்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று பொருள். அவர்கள் இன்றைக்கு எந்தவித பொய்ப் புகார் கொடுக்கவும் ரெடி. ஏனென்றால் அவர்களுக்கு அதனால் முன்காலம் போல் சமூகத்தில் கெட்ட பெயரோ அவமானமோ ஏற்படுவது இல்லை. மேலும் இக்காலப் பெண்கள் பெரிசுகளின் அயிப்பிராயங்களைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. அதுபோல் புகார் கொடுக்கும் பெண் ஒரு ஹீரோயினாக, ஆண்களை எதிர்த்துப் போராடத் துணிந்த வீராங்கனையாக கொண்டாடப் படுவார்!

சில நாட்களுக்கு முன் ஒரு இசையரங்கில் இரு நிகழ்ச்சிகளுக்குமிடையே எல்லோரும் கேண்டீனுக்கு எழுந்து செல்லும் போது, ஒரு கிழவனார் தட்டுத்தடுமாறி இரு பக்க இருக்கைகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார். எதிலோ கால் இடறித் தத்தளித்து தன் முன்னால் சென்று கொண்டிருந்த பெண்மணியின் (இவரும் நடுத்தர வயதுதான்) தோளில் கைவைத்து தாங்கி நின்று விட்டார். அவ்வளவுதான். அந்த பாப் தலைப் பெண்மணி திரும்பி அந்த கிழவனைப் பார்த்து கண்டபடி ஆங்கிலத்தில் உரத்த குரலில் ஏசத் தொடக்கி விட்டார். "உன்னை ஏழு சட்டப் பிரிவுகளில் உள்ளே தள்ளிவிடுவேன்" என்று மிரட்டவும் செய்தார். இதனால் அரண்டு போன கிழவர், "அம்மணீ, எனக்கு முடக்கு வாதம் உள்ளது. கீழே விழ இருந்தேன். என்னையறியாமல் உங்கள் மேல் கைவைத்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்" என்று கம்மிய குரலில் கெஞ்சுகிறார். ஊஹுங், அந்த மேட்டுக்குடிப் பெண்மணி விடுவதாக இல்லை. சுற்றிலும் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் இருந்தனர். அனைவரும் நமக்கெதுக்கு வம்பு என்று கம்மென்றிருந்தனர். அந்தக் கிழவனார் கூனிக் குறுகி தட்டுத் தடுமாறி வெளியே சென்றார். ஒருவர் கூட உதவவில்லை. இந்த நிலை உங்கள் ஒவ்வொருவருக்கும் நேரலாம். லிஃப்டில் அடைத்துக் கொண்டு செல்லும் நேரத்தில் ஒரு மூலையில் இருக்கும் தளத்தெரிவு பட்டனை அழுத்துவதற்காக நீங்கள் அவசரமாக கைநீட்டும் போது அங்கு நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மீது உங்கள் கரம் பட்டுவிடலாம். உடனே அவர் உங்கள் மீது இந்தச் சட்டத்தை எவிவிடும் சாத்தியம் உள்ளது. டேஞ்சர் ஐயா! ஆதலால் பொது இடங்களில் பெண்களைக் கண்டால் குறைந்த பட்சம் 10 அடியாவது இடைவெளி விட்டு நில்லுங்கள். உருப்படியாக வீடு வந்து சேரலாம்!

இப்போது நேற்றைய நிகழ்வுக்கு வருவோம். எப்படியெல்லாம் இந்தச் சட்டம் ஆண்களுக்கு எதிராக எய்யப்பட்டு ஆண்களை முழுதாக காயடித்து சமூகத்தில் இரண்டாம் தரப் பிரஜையாக மாற்றப் பயன் படுகிறது என்று பாருங்கள். திருமண நாளன்று இன்னொருவனுடன் ஓடும் புதுமைப் பெண்களைத் தண்டிக்க ஒரு சட்டமும் இல்லை. அந்த கணவனாகப் போகிறவன் மாலையும் கையுமாக "பே பே" என்று விழித்துக் கொண்டு நிற்கிறான். மணப்பெண்ணோ இன்னொருவனுடன் அன்று விடியற்காலையே "ட்ரியோ" என்று ஓடிவிட்டாள். போலீசார் பிடித்து வந்தால், "எனக்கு இவனுடன் போவதுதான் இஷ்டம்" என்கிறாள். அவளை விட்டு விடுகிறார்கள். அந்த ஆண் பட்ட அவமானம், தலை குனிவு இதெல்லாம் பற்றி சமூகத்திற்குக் கவலையில்லை. சட்டத்திலும் நிவாரணமில்லை. அத்துணை கேவலமான நிலைமை!

இந்த நாட்டில் ஒரு ஆண் பிறந்தவுடனேயே ஒரு கிரிமினல் குற்றவாளியாகிறான். அவனைப் பெற்றெடுத்த குற்றத்தை அவனுடைய பெற்றோர்களும் புரிகிறார்கள். அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு. It is only a question of time. சம்பிரதாயமான முறையில் குற்றம் பதிவு செய்யப்பட சில ஆண்டுகள் பிடிக்கலாம். அவ்வளவே!

இனி செய்தி:

சென்னை, அக்.28- 2009. தினத்தந்தி

நள்ளிரவில் ஜி.ஆர்.டி. நட்சத்திர ஓட்டல் அருகே நடுரோட்டில் காதலர்கள் இருவர் கடும் சண்டை போட்டபடி இருந்தனர். காதலர் காதலியை சரமாரியாக அடித்து உதைத்தார். காதலி கதறி அழுதார். இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டனர்.

போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் கலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும், எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அசோக்நகரில் வசிப்பதாகவும் கூறினார். அவருடன் வந்த வாலிபரின் பெயர் கார்த்தீஸ் (32) என்பதாகும். என்ஜினீயரிங் பட்டதாரியான கார்த்தீஸ் தியாகராயநகரில் கால்சென்டர் நடத்தி வருகிறார்.

கார்த்தீசும், கலாவும் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளனர். `அலைபாயுதே' சினிமா பாணியில் இருவரும் முதலில் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்து கலாவின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். கார்த்தீசின் தாயார் இதை கடுமையாக எதிர்த்தார். பின்னர் அவரும் திருமணத்துக்கு சம்மதித்தார். இருவரும் வெவ்வேறு சாதி என்றாலும் காதலில் இணைந்து ஊரறிய திருமணத்துக்கு தயாரானார்கள்.

இந்த நிலையில், கலாவை ஊரறிய திருமணம் செய்துகொள்ள கார்த்தீஸ் திடீரென்று மறுத்தார். இதற்கு நியாயம் கேட்க சென்றபோதுதான், கலாவுக்கும், கார்த்தீசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்தீஸ் கலாவை அடித்து உதைத்தது தெரியவந்தது. போலீசார் கார்த்தீசிடமும், கலாவிடமும் கவுன்சிலிங் மூலம் பேசினார்கள். கார்த்தீஸ் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கலா சொன்னார்.

ஆனால் கார்த்தீஸோ, படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி போல கலாதான் என்னை விரட்டி, விரட்டி காதலித்து ரகசிய திருமணத்தையும் என்னோடு நடத்திக்கொண்டார். நீலாம்பரி போன்ற குணம் கொண்ட அவரோடு நான் வாழமாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார். அப்படியானால் ஜெயிலுக்கு போகவேண்டும் என்று போலீசார் கூறினார்கள். ஜெயிலுக்கு போகவும் தயார், ஆனால் கலாவோடு வாழமாட்டேன் என்று கார்த்தீஸ் கூறினார்.

இதனால் போலீசார் வேறு வழியில்லாமல் கலாவிடம் புகார் வாங்கி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கார்த்தீசை நேற்று கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தும்வரை போலீசார் சமாதானம் பேசி பார்த்தனர்.

கலாவும், "கார்த்தீசை ஜெயிலுக்கு அனுப்புவது எனது நோக்கமல்ல என்றும், அவர்மீது அளவில்லாத காதல் கொண்டுள்ளேன், அவர்தான் என்றைக்கும் எனது கணவர், அவர் ஜெயிலுக்கு போய் திருந்தி வந்தால் நல்லபடியாக அவரோடு வாழ தயார்" என்றும் போலீசாரிடம் கூறினார்.

அதன்பிறகு வேறு வழியில்லாமல் கார்த்தீஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். கார்த்தீஸ் மீது போட்டுள்ள வழக்கு தற்செயலாக நடந்துவிட்டது என்றும், அது நிரந்தரம் அல்ல என்றும், கண்டிப்பாக அவரோடு வாழ்ந்தே தீருவேன் என்றும் கலா போலீசாரிடம் உறுதிபட கூறினார்.

=============

இப்போதெல்லாம் பல ஆண்கள் இதுபோன்ற பெண்களுடன் வாழ்வதைவிட சிறைவாசமே மேல் என்னும் முடிவை எடுக்கின்றனர். இதேபோல் தன்னுடன் வாழாத முன்னாள் மனைவிக்கு அநியாயமாக பணம் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தும் நீதிமன்ற ஆணைகளுக்கும் பணியாமல் சிறை செல்லவும் இக்காலக் கணவர்கள் தயாராக இருக்கின்றனர்!

வக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் ஓட்டம்!

இது புதுசு!

28 வயதான வக்கீலின் மனைவி 20 வயது வாலிபனான தனது கணவரின் கட்சிக்காரருடன் ஓடிப் போய்விட்டார்.

கும்பகோணம் கல்யாணராமன் தெருவில் வசிப்பவர் வக்கீல் பாலமுருகன். இவர் கும்பகோணம் பார் அசோசியேஷன் செயலராகவும், அஇஅதிமுக வக்கீல் அணிச் செயலராகவும் பதவி வகிக்கிறார்.

இவருடைய மனைவியின் பெயர் சரோஜினி (வயது 28). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இந்த வக்கீலின் வீட்டுக்கு மேலக்காவேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்னும் 20 வயது இளைஞர் ஒரு வழக்கு தொடர்பாக, கடந்த ஆறு மாத காலமாக அடிக்கடி வந்து சந்தித்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞருக்கும் வக்கீல் மனைவி சரோஜினிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

அந்த வக்கீலின் மனைவி சரோஜினி, சுப்பிரமணியன் என்னும் அந்த இளைஞருடன் ஓடிப்போய் விட்டாள் (மன்னிக்கவும், "விட்டார்". கள்ளக் காதலில் ஈடுபடும் பெண் குலத்திலகங்களை மரியாதையுடன் விளிக்கவேண்டும் அல்லவா!) என்று வக்கீல் கணவர் பாலமுருகன் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் கட்சிக்காரர் சுப்பிரமணியன் மீது, வக்கீல் மனைவியை கடத்திச் சென்றதாக வழக்குப் பதிவு செய்து அந்த ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். கள்ளக்காதல் (adultery), இழுத்துக் கொண்டு ஓடுதல் (elopement) இதுபோன்ற புகார்களின் மேல் அதில் சம்பந்தப் பட்டுள்ள ஆண் மேல்தான் வழக்குப் பதிவு செய்யமுடியும். கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கு முழுதாக சட்டங்களிலிருந்து விதிவிலக்கு அளிப்பட்டுள்ளது நம் நாட்டில்.

உங்கள் மனைவி உங்கள் கண்ணெதிரிலேயே இன்னொருவனுடன் செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் கூட அந்த ஆணுக்கு எதிராகத்தான் நீங்கள் வழக்கு தொடுக்கலாமேயன்றி உங்கள் மனைவியின்மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்க இயலாது; அதற்கு இந்திய சட்டங்களில் இடமில்லை. சந்தேகமிருந்தால் சட்டம் தெரிந்த யாரையாவது கேட்டுத் தெளிவு பெறுங்கள். மேலும் அதைக் காரணம் காட்டி விவாகரத்து கூட பெற முடியாது. மனைவி சொல்வதைத்தான் நீதிபதிகள் நம்புவார்கள். "நான் பத்தினித் தெய்வம். என் கணவர் ஒரு சந்தேகப் பிராணி. என்மேல் அபாண்டமாக பழி சுமத்துகிறார். இந்த அபலையின் பரிதாப நிலையைப் பாருங்கள்" என்று நீதிபதியின் முன் கண்ணீர் சிந்தி ஒரு டிராமா போடுவாள். அவவ்ளவுதான். அப்படியே உருகி அவள் கேட்டபடி தீர்ப்பு வழங்குவார்கள். உடனே பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும் சேர்ந்து கோரசாக "ஐயோ பாவம், அந்த அபலைப் பெண். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எத்தகைய கொடுமைகளுக்கு அவள் ஆளாகிறாள்" என்று கட்டிப் பிடித்து அழுவார்கள். அவ்வளவுதான். கணவனின் புகார் அம்பேல்!

அப்படியே கணவனுக்கு வீரம் வந்து கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியிடம் அவன் அதுபற்றி கேள்வி கேட்டால், அவள் உடனே 498A, D.V. Act, Sec 125 of CrPC போன்ற ஆயுதங்களைக் கையிலெடுத்து உங்களையும், உங்கள் வயதான பெற்றோரையும் கைது செய்ய வைத்து, உங்களுக்குச் சொந்தமான வீடு, பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்தி விடுவாள்!

எதிர்வரும் காலம் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு மிகச் சிரமமான காலம் தான்!

அது சரி. இதுபோன்ற வக்கீல்களும் நீதிபதிகளும் சேர்ந்துதானே கணவனிடம் பணத்தைப் பிடுங்கி ஓடிப்போன மனைவியிடம் கொடுக்க வைக்கிறார்கள்!

இப்போது வக்கீலின் முறை ஆகி விட்டது. அடுத்தது யார்?

(செய்தி: Deccan Chronicle)

நீதிக்கு முரணான சட்டத்தின் மூன்றாண்டு நிறைவு!

ஆம். இந்த நூற்றாண்டில் முட்டாள்தனத்தின் சிகரமாக விளங்குவது "பெண்கள் வன்முறைத் தடுப்புச் சட்டம்" (The Protection Of Women From Domestic Violence Act - "D.V. Act"). பெண்களைக் காப்பாற்றும் ஒரு புனிதமான நோக்கில் இயற்றப் பட்டதாக அதன் பெயரைப் பார்த்தவுடன் தோன்றும் இந்தச் சட்டம் உண்மையில் பெண்களைக் கொடுமை செய்து தங்களுக்குச் சொந்தமான இருப்பிடத்தையே கெடுமதியினருக்கு தாரை வார்த்துவிட்டு நடுத்தெருவில் நிற்க வைக்கும் ஒரு உன்னத(!)ச் சட்டம் என்பது அதன் பயன்பாட்டின் விளவுகளைப் பர்த்தால் தெளிவாக விளங்கும்!

இந்தக் கொடுங்கோன்மைச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு, திருமணமான இளைஞர்களையும் அவர்களைப் பெற்றெடுத்த பாவத்தைச் செய்த பெற்றோர்களையும் தன் சொத்து சுகம் அனைத்தையும் திமிர் பிடித்தலையும் பணக்காரப் பெண்களிடம் இழந்து, தற்கொலைக்குத் தள்ளும் செயலாக்கத்தைத் தொடங்கி இன்றோடு 3 ஆண்டுகள் நிறைகின்றன.

இந்த மூன்று ஆண்டுகளில் இந்த சட்டத்தைக் கையிலெடுத்து சில கெடுமதிப் பெண்களும் அவர்களின் அநியாயத்திற்குத் துணை போகும் வக்கீல்களும் நாசமாக்கிய குடும்பங்கள் அநேகம்.

இந்த சட்டத்தின் அதி உன்னதமான வரையறை என்ன தெரியுமா? "குடும்பத்தில் வன்முறையை கணவன் தான் செய்வான். அவன்மீதும், அவனுடைய ரத்த உறவுகள் மீதும் தான் இச்சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும்" என்பது! மனைவி எந்தவிதக் கொடுமை செய்தாலும் அதைக் கருத்தில் கொள்ள வாய்ப்பே கிடையாது இச்சட்டத்தில். ஏனெனில் வன்முறையில் பாதிக்கப்படுபவள் மனைவிதான் என்று அறுதியிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைவிட நடைமுறைக்குப் புறம்பான சட்டத்தை இயற்ற முடியுமா?

சரி, இந்தச் சட்டத்தை இதுபோல் இயற்றி அதைத் தீவிரமாக அமலாக்கம் செய்ததன் நோக்கம் என்ன? அவர்கள் பொதுவில் தம்பட்டம் அடிப்பது போல் நம் நாட்டு அபலைப் பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் குடும்ப வன்முறையிலிருந்து நிவாரணம் அளிப்பதற்காகவா? உண்மையில் குடிகாரப் புருஷன் கையால் அன்றாடம் வன்முறையைச் சந்திக்கும் அடிமட்டப் பெண்களுக்கு இதனால் நிவாரணம் கிட்டியுள்ளதா? அதெப்படிக் கிட்டும்? அவர்கள் வக்கீல்களுக்கு ஃபீசாக அள்ளி அள்ளிக் கொடுக்க முடியுமா? அவர்களுடைய கணவன்மார்களிடமிருந்து இந்தச் சட்டத்தை வைத்து கணிசமான துகையை கறக்க முடியுமா? அவர்களிடமிருப்பதோ குடிசை வீடுதான். கணவனுடைய பெற்றோரும் அன்றாடம் காய்ச்சியாக இருப்பார்கள். பிறகு அவர்களிடமிருந்து என்ன பெயரும்? அதனால் இந்த சட்டத்தின் டார்கெட் மத்தியதர மற்றும் உயர் மத்திய தர வகுப்பினர்தான். அந்தப் பாவம் செய்தவர்கள்தான் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டத்தால் பீடிக்கப்பட்டு கோர்ட்டு வராண்டாவில் லோலோவென்று அலைந்து கொண்டு தங்கள் பொன்னான இளமைக் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த D.V. Act சட்டத்தைப் பற்றிய சில விவரங்கள்:-

இந்தச் சட்டம் திருமணம் ஆன பெண்களுக்கு மட்டுமின்றி, "குடும்பம் போல்" சேர்ந்து இருக்கும் உள்ள அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும் - அது ஒருசில மணி நேரங்களேயானும் சரி! இந்த விளக்கத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்துள்ளார். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் பற்றி (M.Palani Vs Meenakshi) பிறிதொரு இடுகையில் பார்ப்போம்!

இது முழுக்க முழுக்க வக்கீல்களால் தயாரிக்கப்பட்டு அவர்களுடைய எண்ணப்பாங்கின்படி கட்டமைக்கப்பட்டது.

இது அமேரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் லாப நோக்கில் அமைக்கப்பட்டது.

இந்த சட்டத்தின் அடிப்படை அமைப்பின்படி ஒரு மனைவி (அல்லது சிறிது நேரம் ஒரு ஆணுடன் உறவு கொண்டு இருந்த பெண்) கணவன் மற்றும் கணவனின் ரத்த உறவுகள் எதைச் செய்தாலும், செய்யாமல் இருந்தாலும் அதை வன்முறையாகக் கருதி புகார் கொடுக்கலாம். அதாவது பேசினால் "பேசி வன்முறை செய்தான்" என்கலாம்; பேசாவிட்டால் "பேசாமல் கொடுமை செய்தான்" என்கலாம்! அந்தப் பெண் தண்ணி போட காசு கொடுக்கவில்லையென்றால் வன்முறை; இரவு ஏன் நேரம் கழித்து பார்ட்டிக்குப் போய் வருகிறாய் என்றால் வன்முறை; கண்டவனோடு உனக்கு என்ன உறவு என்று கெட்டால் வன்முறை; அவளுடைய "கருமேனியை சிவப்பாக்கும் கிரீமை" வாங்கி வரவில்லை யென்றால் அது பொருளாதாரம் சர்ந்த வன்முறை - இப்படி அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இதுபோல் பற்பல கேசுகள் இந்த மூன்றாண்டுகளில் பதியப்பட்டுள்ளன!

இதில் இன்னும் பல வேடிக்கைகள் உள்ளன. நீங்கள் ஒரு ஆணாகவோ, அல்லது உங்கள் வீட்டில் ஒரு ஆண்மகன் இருந்தாலோ இதைப் படிக்கப் படிக்க பகீரென்று இருக்கும்.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்வுகள் இரண்டு வகை:

1. புகார் கொடுத்த பெண்ணுக்கு உறைவிடம். அதாவது அந்தப் பெண்ணின் மேல்தான் தவறாக இருந்தாலும், அவள் பொய்ப் புகார் கொடுத்திருந்தாலும், அவள்தான் உங்கள் மீது வன்முறை செய்திருந்தாலும், அவள் புகார் கொடுத்தால் நீங்கள் உங்களுக்குச் சொந்தமான வீட்டிலிருந்து வெளியேறி, அதை அவளுக்கு தாரை வார்த்துவிட வேண்டும். இதைக் கேட்டால் உங்களுக்கு இது உண்மையாக இருக்குமோ என்ற நம்பிக்கையின்மை வருகிறது அல்லவா? இப்படித்தான் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புகள் அமைகின்றன. ஐயமிருந்தால் கூகிளில் தேடிப்பாருங்கள். அல்லது உங்களுக்குத் தெரிந்த வக்கீலிடம் கேட்டுப் பாருங்கள்!

2. "பணம்". ஆம் ஐயா! "பணம் கொடு, கணவனே, மனைவி கேட்ட பணம் கொடு" -இதுதான் இச்சட்டத்தின் தாரக மந்திரம்! "அவள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் சிறைக்குப் போ!"

"ஐயா, அவள்தான் ஒரு காரணமுமில்லாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் பொய்ப் புகார் கொடுத்திருக்கிறாள். கள்ளக் காதலுக்காகப் பணம் கேட்கிறாள்"

"அதெல்லாம் நான் கேட்கத் தயாரில்லை. இந்தச் சட்டப்படி மனைவி புகார் கொடுத்துள்ளார். அவள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடு"

"ஐயா, என்னை விட அவள் நான்கு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறாள். என்னையும் என் வயதான பெற்றோரையும் கொடுமைப் படுத்தி வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறாள்"

"அதற்கெல்லாம் இந்த சட்டத்தில் நிவாரணம் கிடையாது. அவள் கேட்கும் பணத்தை உடனே கொடுக்க வில்லையெனில் ஜெயிலுக்குப் போ!"

இதுதானய்யா இந்த்ச் சட்டத்தைக் கையிலெடுத்து நடக்கும் நீதி(!) மன்றத் தீர்ப்புகள்!

இன்னொரு முக்கிய முட்டாள்தனம்:

மனைவி (மற்றும் மனைவி போன்றவள்) பொய்ப் புகார் கொடுத்தால் அவள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று திட்டவட்டமாக இந்தச் சட்டத்தில் வரையறுத்துள்ளார்கள்! இதுபோல் அநியாயம் எங்காவது நடக்குமா?

மற்றொரு பொய்யான கட்டுக்கதை:

இதை சிவில் சட்டம் என்று பெயரிட்டுவிட்டு, கிரிமினல் கோர்ட்டில் பதிவு செய்து தீர்ப்புகள் அளிக்கப்படும்படி அமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற புனைசுருட்டு எந்த நாகரிகமடைந்த நாட்டிலும் நடக்காது!

இந்த கொடுங்கோன்மை சட்டத்தின் நடைமுறையை (case laws), மற்றும் அதன் தாக்கத்தை நீங்கள் முழுதாக அறிந்து கொண்டால் நம் நாட்டிற்கு ஆஃப்கானிய தாலிபான் ஆட்சி வந்தால் தேவலை என்று எண்ணத் தொடங்கினால் ஆச்சரியப் படுவதற்கில்லை!

சரி. இப்போது இந்தச் சட்டத்தில் சிறிதும் வன்முறையே செய்ய இயலா புனிதர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் நம் பெண் குலத்திலகங்களின் கைவண்ணங்கள் சிலவற்றைக் காணுங்கள்:

1.
வீட்டை காலி செய்ய சொன்ன வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் செய்த பெண் கைது

திருவண்ணாமலை, அக்.25- 2009. செய்தி - தினத்தந்தி

திருவண்ணாமலையில் வீட்டை காலிசெய்ய சொன்ன வீட்டு உரிமை யாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீட்டை காலி செய்ய

திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது60). இவருடைய வீட்டில் பழனி என்பவர் தனது மனைவியுடன் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

வீட்டு உரிமையாளரிடம் மாதவி அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பக்கத்தில் உள்ளவர்களிடம் மாதவனை பற்றி அவதூராக பேசியதாக தெரிகிறது. இதனால் வீட்டை காலிசெய்யும்படி மாதவன் கூறி உள்ளார்.

கொலை மிரட்டல்

இதனால் ஆத்திரம் அடைந்த தேவி காய்கறி வெட்டும் அரிவாள்மனையை எடுத்துவந்து மாதவனை கொலைசெய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் மாதவன் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2.
சூலத்தால் குத்தி குழந்தை கொலை : குடும்ப தகராறில் தாயும் தற்கொலை

அக்டோபர் 24, 2009. தினமலர்

சிறுபாக்கம் : குடும்பத் தகராறில், இரண்டு குழந்தைகளை சூலத்தால் குத்திக் கிழித்த தாய், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. நான்கு வயது சிறுவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த, டி.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதுரை. விவசாயி. இவரது மனைவி சுதா (28). இவர்களது மகள் பெரியநாயகி ( 11), நந்திமங்கலத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார். மகன்கள் சுதாகர் (4) சுபாஷ் (1) பெற்றோருடன் வசித்து வந்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன், கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு நந்திமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்ற சுதா, அங்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். கோமதுரை மாமனார் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்து, சுதாவை நேற்று முன்தினம் அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சுதா, நேற்று காலை தனது மகன்கள் சுதாகர் (4) சுபாஷ் (1) இருவரையும், அதே ஊரில் உள்ள குரவனார்கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு, சாமி முன் நட்டு வைத்திருந்த சூலத்தை பிடுங்கி இரண்டு குழந்தைகளின் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த இரண்டு குழந்தைகளும், துடிதுடித்து கதறினர். சுதா அருகில் இருந்த கருவேலம் மரத்தில் தனது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தபோது, படுகாயமடைந்த குழந்தை சுபாஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான். சிறுவன் சுதாகர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். சிறுவனை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பெற்ற தாயே குழந்தைகளை சூலத்தால் குத்தி, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், டி.புடையூர் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

3.
கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி; நகைகள் கொள்ளை
என்ஜினீயர் மனைவியின் 7 மாத கர்ப்பிணி தோழி கைது
பரபரப்பு வாக்குமூலம்

சென்னை, அக்.23- 2009. தினத்தந்தி

சென்னையில் என்ஜினீயர் மனைவியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற அவரது கர்ப்பிணி தோழி கைது செய்யப்பட்டார். அவர் கொள்ளையடித்து சென்ற நகைகளும் மீட்கப்பட்டது.

கொலை முயற்சி

சென்னை ஜாபர்கான்பேட்டை ஆர்.வி.நகர் 75-வது தெருவில் வசிப்பவர் சந்துரு என்ற ராஜகோபால் (வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள கம்ப்னிட்டர் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் சுபஸ்ரீ (25). இவர்களுக்கு 11/2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தினமும் ராஜகோபால் வேலைக்கு சென்றபிறகு வீட்டில் கை குழந்தையோடு சுபஸ்ரீ தனியாக இருப்பார். வேலைக்காரி வந்து வீட்டு வேலைகளை செய்வார்.

நேற்று முன்தினம் மாலையில் சுபஸ்ரீ தனியாக இருக்கும்போது அவரை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி நடந்தது. அவர் மயங்கி விழுந்து கிடந்தார். சுபஸ்ரீ அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் உள்ள 40 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த சுபஸ்ரீயை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த பிறகு சுபஸ்ரீ உயிர் பிழைத்துக்கொண்டார்.

குற்றவாளிகள் யார்?

இந்த கொலை முயற்சி மற்றும் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து கைது செய்யும்படி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இணை கமிஷனர் சக்திவேலு, துணை கமிஷனர் சம்பத்குமார் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் சம்பவ நடந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சுபஸ்ரீயின் வீட்டுக்கு தாடி வைத்த ஒருவர் உள்பட 3 ஆண்களும், சுடிதார் அணிந்திருந்த பெண் ஒருவரும் வந்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்ததாக தெரிய வந்தது. அவர்கள் யார்? என்று போலீசார் விசாரித்தனர். சுபஸ்ரீயின் செல்போனில் யார், யார் பேசியுள்ளனர் என்று ஆய்வு செய்யப்பட்டது.

பள்ளி தோழி

போலீசாரின் தீவிர விசாரணையில், சுபஸ்ரீயை கொல்ல முயற்சித்து அவரது நகைகளை கொள்ளையடித்தவர்கள் யார் என்று கண்டறியப்பட்டது. சுபஸ்ரீயின் வீட்டுக்கு வந்திருந்த சுடிதார் அணிந்த பெண்ணும், அவருடன் வந்திருந்த 3 ஆண்களும்தான் குற்றவாளிகள் என்று தெரிய வந்தது. சுடிதார் அணிந்த பெண்ணின் பெயர் முத்தரசி (27). அவருடன் தாடியுடன் வந்திருந்த வாலிபரின் பெயர் சரவணன் என்பதாகும். சரவணனும், முத்தரசியும் கணவன்-மனைவி ஆவார்கள். திருவேற்காட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.

முத்தரசி, சுபஸ்ரீயின் பள்ளி தோழி ஆவார். அவரை நேற்று காலையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், சுபஸ்ரீயை கொல்ல முயற்சித்து நகைகளை கொள்ளையடித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். கொள்ளைப்போன நகைகளின் ஒருபகுதி அவரிடமிருந்து மீட்கப்பட்டது. சுபஸ்ரீயை கொல்ல முயன்று நகைகளை கொள்ளையடித்தது ஏன்? என்று முத்தரசி போலீசில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஒன்றாக படித்தோம்

நானும், சுபஸ்ரீயும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். நெருக்கமான தோழிகளாக பழகினோம். 10-ம் வகுப்பில் சுபஸ்ரீ பெயிலாகி விட்டாள். இதனால் அவள் படிப்பை நிறுத்திவிட்டாள். நான் தொடர்ந்து படித்தேன்.

மதுரையில் உள்ள சட்ட கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது நான் சரியாக படிக்கவில்லை என்று குற்றம்சுமத்தி என்னை கல்லூரியில் இருந்து நீக்கிவிட்டார்கள். நான் சிறு, சிறு திருட்டு வேலைகள் செய்ததும் கல்லூரியில் இருந்து நீக்குவதற்கு இது ஒரு காரணமாகும். அதன்பிறகு எனது பெற்றோர் சரவணனுக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். சரவணன் 10-ம் வகுப்பு பெயிலானவர்.சென்னை துறைமுகத்தில் அவர் தற்காலிக ஊழியராக வேலை பார்த்தார். 6 மாதத்திற்கு முன்பு அந்த வேலை பறிபோய் விட்டது. இதனால் நாங்கள் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டோம். எனது நகைகளை அடகுவைத்து அதில் வந்த பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தினோம். இந்த நிலையில் நான் கர்ப்பமானேன். எனது கணவருக்கு வேலை தேடி பார்த்தும் வேலை கிடைக்கவில்லை.

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். இந்த நிலையில் சுபஸ்ரீயோடு எனக்கு மீண்டும் பழக்கம் தொடர ஆரம்பித்தது. ஒருமுறை அவரது வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். அப்போது அவர் வசதியாக வாழ்வதை தெரிந்து கொண்டேன். சுபஸ்ரீ வீட்டில் பகலில் தனியாக இருப்பதையும் அறிந்துகொண்டேன். சுபஸ்ரீயை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டோம். அதற்கான சமயம் பார்த்து காத்திருந்தோம்.

சீமந்த விழா

இந்த நிலையில் எனக்கு கர்ப்பம் 7 மாதம் ஆகிவிட்டது. சீமந்த விழா நடத்த முடிவு செய்திருந்தோம். சீமந்த விழாவுக்கு அழைப்பதுபோல சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று பின்னர் அவரை மிரட்டி பணம், நகைகளை பறிக்க முடிவு செய்தோம். திட்டமிட்டப்படி புதன்கிழமை அன்று காலை 11.30 மணிக்கு முதலில் சுபஸ்ரீ வீட்டுக்கு சென்றோம். நானும், எனது கணவரும் வீட்டுக்குள் சென்றோம். எங்களோடு வந்திருந்த கணவரின் நண்பர்கள் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டனர்.

நாங்கள் சென்றபோது வீட்டில் வேலைக்காரி இருந்தாள். சுபஸ்ரீயிடம் எனக்கு சீமந்த விழா நடத்தப்போகிறோம். அதற்கு நீ கண்டிப்பாக வரவேண்டும். என்னுடைய நகைகள் எல்லாம் அடகு வைக்கப்பட்டுள்ளது. எனவே சீமந்த விழாவில் அணிவதற்கு உன்னுடைய நகைகளை 2 நாட்கள் இரவலுக்கு தரவேண்டும் என்று கேட்டேன். அதற்கு சுபஸ்ரீ முதலில் மறுத்தாள். பின்னர் மாலையில் வந்தால் தருவதாக கூறினாள்.

பின்னர் நாங்கள் இருவரும் வந்துவிட்டோம். பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்றோம். அப்போது அவருடைய கணவர் வீட்டில் மதிய சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். கணவரிடம் சுபஸ்ரீ என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள். கணவர் வீட்டில் இருந்ததால் மாலை 4 மணிக்கு மீண்டும் வருவதாக சொல்லிவிட்டு வந்துவிட்டோம். மாலை 4 மணிக்கு மீண்டும் சென்றோம். அப்போது சுபஸ்ரீ மட்டும் தனியாக இருந்தாள். நானும், எனது கணவரும், கணவரின் நண்பர்கள் 2 பேரும் சுபஸ்ரீயோடு பேசிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு டீ போட்டுக்கொடுத்து உபசரித்தாள். சீமந்த விழாவில் அணிந்துகொள்ள காலையில் நகைகளை தருவதாக சொன்ன சுபஸ்ரீ மாலையில் நகைகளை தர மறுத்தாள். நான் அவளோடு எவ்வளவோ பேசிப்பார்த்தும் நகைகளை தரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

கழுத்தை நெரித்தோம்

இதனால் கோபம்கொண்ட நான், அவளை படுக்கை அறைக்கு இழுத்து சென்று கட்டிலில் தள்ளி அடித்து உதைத்தேன். நகைகளை தராவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினேன். சுபஸ்ரீ அதற்கும் பணியவில்லை. இதனால் நான் எனது துப்பட்டவால் அவளது கழுத்தை இறுக்கினேன். சத்தம்போடாமல் இருக்க எனது கணவர் சுபஸ்ரீயின் வாயை பொத்தினார். இதில் சுபஸ்ரீ மூச்சு பேச்சு இல்லாமல் அப்படியே சாய்ந்துவிட்டாள்.

அவள் இறந்துவிட்டாள் என்று கருதி அவள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம். அன்றையதினம் இரவு எனக்கு சீமந்த விழா நடந்தது. அப்போது சுபஸ்ரீயிடம் கொள்ளையடித்த நகைகளை நான் அணிந்துகொண்டேன். விழா முடிந்து எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது அதிகாலையில் போலீசார் என்னை பிடித்துவிட்டனர்.

இவ்வாறு முத்தரசி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

======================

இப்போதைக்கு இது போதும். மேன்மேலும் நூற்றுக் கணக்கில் வந்து கொண்டேயிருக்கும், மெல்லியலாளர்களாகிய பெண்குலங்களின் கொடூரமான வன்முறைத் தாண்டவங்களை மீண்டும் இன்னொரு இடுகையில் பார்ப்போம்!

தர்மம் கடைசியில்தான் வெல்லுமாம்!

நீலு சோப்ரா என்பவருக்கு வயது 80. அவருடைய மனைவி க்ரிஷன் சரூப்பின் வயது 76. இவர்கள் மீதும் இவர்களுடைய மகனான ராஜேஷ் மீதும், இவர்களுடைய மருமகள் 498A மற்றும் 406, 114 போன்ற சட்டப் பிரிவுகளிலும் புகார் கொடுத்து வழக்குத் தொடுத்திருந்தார். இது நடந்தது 1993-ல்.

இந்தப் புகார் பொய்யானது, இதில் துளிக்கூட உணமையில்லை என்று அந்தப் புகாரை தள்ளுபடி செய்யும்படி கோரி அவர்கள் வழக்குத் தொடுத்தனர்.

இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான நுணுக்கத்தை நீங்கள் அவதானிக்க வேண்டும் ஒரு மனைவி தன்னை கணவனும் அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களும் கொடுமைப்படுத்துவதாக ஒரு புகாரைக் கொடுத்தால் போதும். அதன் மேல் நடவடிக்கை எடுத்து வழக்கு நடத்துவது அரசின் பொறுப்பு. புகார் கொடுப்பதோடு சரி. மற்றச் சிலவு முழுதும் மக்களின் வரிப்பணத்தில்!

ஆனால் அந்தப் புகார் பொய்யானது என்றால் கணவன் தரப்பினர்தான் தன் சொந்தக் காசில் வழக்காடவேண்டும்!

சரி, இப்போது இந்தக் கிழவர்கள் கதைக்கு வருவோம்!

தங்கள் மேல் தொடுக்கப்பட்ட பொய் வழக்கை எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அவர்கள் கோரிக்கை கீழ்க் கோர்ட்டிலும் டில்லி உயர்நீதி மன்ரத்திலும் தள்ளுபடி செய்துவிட்டனர்.

அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்தப் போராட்டத்தினிடையே கணவன் ராஜேஷ் செத்தே போயிட்டான்!

ஆனால் அவனுடைய வயதான பெற்றோர் தொடர்ந்து போராடினர்.

உச்ச நீதி மன்றத்தில் நேற்றைய முன் தினம் (19-10-2009) அந்தப் பொய்ப் புகாரைத் தள்ளுபடி செய்து (quash) தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

தன் புடவைகளையும் நகைகளையும் அவர்கள் திருடி விட்டனர் என்றும் வரதட்சனைக் கொடுமை செய்தனர் என்று பொத்தம் பொதுவாக அந்த மருமகள் புகார் கொடுத்திருக்கிறாரேயன்றி, அந்தப் புகாரில் எந்தவொரு விவரமும் இல்லை. இதன் அடிப்படையில் செயல்படுவது நீதிக்கு விரோதமனது என்று கூறியிருக்கின்றனர். அந்த நீதிபதிகள்.

A bench of justices VS Sirpurkar and Deepak Verma said:

"Under such circumstances, it would be an abuse of the process of law to allow the prosecution to continue against the aged parents of Rajesh, the present appellants herein, on the basis of vague and general complaint which is silent about the precise acts of the appellants," the bench said while quashing the case registred nearly 16 years ago."

இதனிடையே 16 ஆண்டுகள் கழிந்து விட்டன!

இந்தப் பதினாறு ஆண்டுகளில் தன் மகனையும் இழந்த வயதான அந்தப் பெற்றோர்கள் எந்தப்பாடு பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்!

இந்தப் பதினாறு ஆண்டுகளுக்கு யார் பதில் சொல்வது?

தன் வேலையில் ஒரு அரசு அதிகாரி தவறு செய்தால் அவருக்கு தண்டனை உண்டல்லவா? நிதிபதிகளும் அரசு பணியாளர்கள் தானே? தவறான தீர்ப்பு வழங்கி இந்த வயதான தம்பதிகளை 16 ஆண்டுகள் அலைக்கழித்து தன் மகனுடைய சாவையும் அனுபவிக்கச் செய்த கீழக்கோர்ட்டு நிதிபதிகளுக்கு என்ன தண்டனை?

அதுபோல் பொய் வழக்கு போட்ட அந்த பெண்குலத் திலகத்திற்கு என்ன தண்டனை?

மக்களே, சிந்திப்பீர்!

"பெண்ணியவாதம் ஒரு தீவிரவாதம்"

"சட்டத்தின் மூலம் குடும்ப வாழ்வை தாங்கிக் காக்க இயலாது; அதை அழிக்கத்தான் இயலும்"

" இன்றைக்கு காந்திஜி உயிருடன் இருந்தால் அவரையும் குடும்ப வன்முறைச் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ளச் செய்திருப்பார்கள் நம் நாட்டின் பெண்னியவாதிகள்!"

செய்தி இங்கே.

மருமகள்கள் சித்திரவதையிலிருந்து மாமியார்களைக் காக்க ஒரு சங்கம்

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20, 2009. செய்தி: தட்ஸ்தமிழ்

ஹைதராபாத்: மருமகள்கள் சித்திரவதையிலிரு்நது தங்களைக் காத்துக் கொள்வதற்காக ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து தனிச் சங்கம் கண்டுள்ளனர்.

வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் முதலில் சிக்குவது கணவன்மார்கள்தான். அதற்கு அடுத்த டார்கெட் மாமியார்கள்.

ஆனால் வரதட்சணைக் கொடுமை சட்டத்தை பல பெண்கள் தவறாகப் பயன்படுத்தி கணவர்களையும், மாமியார்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சிறையில் தள்ளி விடுவதாக சமீப காலமாக புகார்கள் வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் சங்கம் தொடங்கப்பட்டது. மாநாடு கூட நடத்தினர்.

இந்த நிலையில் ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் அமைப்பாளர்களான பத்மஜா, உமா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சமீபகாலமாக மருமகள்களால் ஏராளமான மாமியார்கள் வீடுகளில் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். பல மாமியார்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு கூட கிடைப்பதில்லை.

மருமகள்கள் பலர் மாமியாரை கடுமையாக சித்ரவதை செய்து விட்டு போலீசில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் சிக்க வைத்து வருகிறார்கள்.

இந்த கொடுமைகளுக் கெல்லாம் முடிவு கட்டத்தான் நாங்கள் மாமியார் பாதுகாப்புச்சங்கத்தை தொடங்கி உள்ளோம்.

தற்போது 30 பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். விரைவில் ஆயிரம் பேர் வரை உறுப்பினராக சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

தங்களது பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பாக மாமியார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் இந்த சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அவை - 9704683163, 9573605415

===========

விரைவிலேயே இச்சங்கத்தின் கிளை தமிழ் நாட்டிலும் துவக்கப்பட இருக்கிறது. அது பற்றிய அறிவிப்பை எதிர்பாருங்கள்!

தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை

மகளை தன் கள்ளக் காதலனுக்கே மணம் முடித்து வைக்க முயன்ற தாயைத் தடுக்க முடியாததால் மணமுடைந்து தூக்கில் தொங்கினார் மகன். நெல்லை அருகே நாசரேத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது.

நாசரேத் ஜனகராஜ் தெருவை சேர்ந்தவர் கலைச் செல்வன். இவரது மனைவி செல்லத்தாய் என்ற ராணி. இவர்களுக்கு பாக்கியராஜ் என்றொரு மகன் உள்ளார். கலைச்செல்வனை விட்டு சில ஆண்டுகளுக்குமுன் பிரிந்தார் செல்லத்தாய். பின்னர் தங்கத்துரை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு லிசா, ஆஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையில் மனைவி வேறொருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த முதல் கணவர் கலைச்செல்வன் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.

அதன் பிறகு அவரது மகன் பாக்கியராஜ், தாயுடன் இருக்கப் பிடிக்காமல் மதுரையில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். 2 மாதத்திற்கு முன்புதான் பாக்கியராஜ் மீண்டும் ஊர் திரும்பினார்.

ஊரில் தனது தாய்க்கு பஞ்சாயத்து கவுன்சிலர் உள்பட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அப்படி கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவர் செல்லத்தாயின் மகள் லிசாவை தனக்கு திருமணம் செய்து தர கேட்டுள்ளார். அதற்கு செல்லதாயும் சம்மதித்துள்ளார்.

இதற்கு பாக்கியராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படவே தங்கை லிசா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த பாக்கியராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நாசரேத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
(செய்தி - தட்ஸ்தமிழ்)

==============
இப்போது கள்ளக் காதலையும் அதனைக் கண்டிக்கும் கணவன், தான் பெற்ற குழந்தைகள் மற்றும் பெற்றோரைக் கொலை செய்வதையும் நியாயப் படுத்தி பேசுவது பல பெண்ணியவாதிகளுக்கு ஒரு ஃபேஷனாகப் போய்விட்டது.

அனைத்து கணவன்மார்களும் தத்தம் மனைவிகளை செக்ஸில் முழு திருப்தி செய்ய லாயக்கற்று ஆண்மை போதாதவர்களாக இருக்கிறார்களே, என்ன செய்வது? கள்ளக் காதலர்களைத் தேடித்தானே அவள் ஓடவேண்டியிருக்கிறது. பாவம், அந்தப் பெண்கள்! அவளுடைய செக்ஸ் வேட்கை அடங்குவதுதானே குடும்ப வாழ்வின் உன்னத லட்சியம்! பெரியவர்களைப் பேணுதல், குழந்தைகளின் எதிர்காலம், கணவனின் நல் வாழ்வு, சமூகத்தில் மதிப்பான வாழ்க்கை - இதெல்லாம் முக்கியமா என்ன? செக்ஸில் விதவிதமான அனுபவங்களைப் பெறுவதுதானே முக்கியம்! அதிலும் திருட்டு செக்ஸ் என்றால் அதில்தான் “கிக்” இருக்கிறது அல்லவா? அதனால் கள்ளக் காதலைத் தாக்கும் மனப்பான்மையை எதிர்த்து மனோரமா தொடங்கியிருக்கும் இயக்கம் பாராட்டத் தக்கதுதான், இல்லையா!

இப்போதே ஆண்கள் எல்லோரும் ஆண்மையற்றவர்கள் என்பதுபோல் அவர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் “ஆண்மை” என்பதன் அளவுகோல் என்ன என்பதை அவர்கள் இன்னும் வரையறுக்கவில்லை!!

ஒரே ஆணிடம் ஒரு பெண் ஒரு நாள் திருப்தியடையாமல் இருக்கலாம், வேறொரு நாள் மாறுபட்ட சூழ்நிலையில் திருப்தியடையலாம். அதுபோல் ஒரே ஆண் ஒருவளுக்கு மிக இன்பம் கொடுப்பவனாகவும், இன்னொருவளுக்கு "turn on" உந்துதல் கொடுக்காதவனாக இருக்கலாம். இதெல்லாம் அந்தந்த நேரத்தில் அமைந்த உடல்நிலை, மன நிலை, சூழ்நிலை இவை போன்ற பற்பல கூறுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் சார்ந்த விஷயம். இதன் முழுப் பரிமாணங்களை அறியாமல், இந்த அம்மையார் இயக்கம் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நாட்டின் பாரம்பரிய குடும்ப வாழ்க்கை முறையை ஒழித்துக்கட்ட அவர் தன்னாலான கைங்கர்யத்தை செய்து கொண்டு வருகிறார் என்பது வருந்தத்தக்க விஷயம்.

ஏதோ ஒரு பெண்ணின் திருமணத்திற்குப் பின் கணவனுக்கு ஆண்மையில்லை என்பது தெரிய வந்ததாம், ”ஐயகோ, அந்தப் பெண்ணின் வாழ்க்கையே அஸ்தமனமாகி விட்டதே” என்று ஒப்பாரி வைக்கிறார் இந்த அம்மையார். ஆனால் சமீபத்தில் இதுபோன்று ஒரு பெண் தன் கணவன் ஆண்மையற்றவன், அதனால் அவன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறாரே, இதிலிருந்தே அவர்களது உள்நோக்கம் என்னவென்று புரிகிறதல்லவா? இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிப்பது மனோரமா போன்றோருக்கு அழகல்ல!

சரி. மேற்கணட நிகழ்வைப் பற்றி இதுபோன்ற பெண்ணியவாதிகளின் கருத்து என்னவாக இருக்கும்?
ஒருவேளை இப்படித்தான் இருக்குமோ:

அந்த தாயின் பாலியல் தேவைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லவா? கள்ளக் காதல் என்பது ஒரு பெண்ணின் பிறப்புரிமை. அவளை செக்ஸில் திருப்தி செய்ய கணவன் மட்டும் போதாது என்னும் நிலையில் எவனோடு வேண்டுமானாலும் கள்ள உறவு வைத்துக் கொண்டு தன் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவளுக்கு எல்லாவித உரிமையும் இருக்கிறது. அதுபோல் அவளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பூரண ஒத்துழைப்பு கொடுப்பது கணவன், குழந்தைகள், பெற்றோர் ஆகியோருடைய கடமையாகும்.

கள்ளக் காதலனை தன் பெண்ணுக்கே திருமணம் செய்து கொடுத்து ஒண்ணடி மண்ணடியாக இன்பம் துய்ப்பதில் என்ன தவறு? வேண்டுமானால் முறை வைத்துக் கொள்ளட்டுமே!
அந்தப் பெண் இதைப் பிடிக்காமல் ஓடிப்போனதும், கணவன் தற்கொலை செய்து கொண்டதும், தாயின் கள்ளக் காதல் லீலைகளைக் கண்டு பொறுக்காமல் மகன் தற்கொலை செய்து கொண்டதும் கண்டிக்கத்தக்கது. இல்லையா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பொங்கிப் பெருகுது 498A கேசுகள்!

தொடரட்டும் பொய் 498A கேசுகளின் அறுவடை!

கூடிய சீக்கிறமே இந்திய ஜனத்தொகையில் பாதி இத்தகைய கேசுகளில் சிக்கி அல்லாடும் காலம் வரும். அப்பொதுதான் இந்தியா முழு வளர்ச்சி அடைந்துவிட்டதாகக் கருத முடியும்!

================
1.

சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
சென்னை போலீஸ்காரர் மீது வழக்குபதிவு

உத்தமபாளையம்,செப்.29- 2009

சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக சென்னையில் பணிபுரியும் போலீஸ்காரர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போலீஸ்காரர்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரத்தில் தெற்கு தெருவில் வசித்து வருபவர் தெய்வ கணேசன்(வயது 36). இவர் சென்னையில் போலீஸ் காரராக பணிபுரிந்து வருகி றார். இவருக்கும் வெள்ளை யம்மாள்புரம் தெற்கு தெரு வினை சேர்ந்த பிரியதர் சிணி(22) என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது.

அப்போது 36 பவுன்தங்க நகையை வரதட்சணையாக பெண்வீட்டார் வழங்கி உள்ளனர். பின்னர் ஒரு ஆண்டு கூட்டுக்குடும்பமாக இருந்து விட்டு, அதன்பிறகு மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இருந்த போது, ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு ரூ.1 லட்சம் பணத்தை உனது பெற்றோரிடம் வாங்கிவா என்று தெய்வகணேசன் பிரியதர்சிணியிடம் கூறி அவரின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.

ஆனால் பிரியதர்சிணியின் பெற்றோர், திருமணத்திற்கு செலவு செய்து விட்டோம் பணம் இல்லை என்று சொன்னதால், திருமணத்தின் போது 100 பவுன் தங்க நகை பேசி போடவில்லை, 60 பவுன் நகையும், ரூ.40 ஆயிரம் பணமும் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று பிரியதர்சிணியை அவரது கணவர் தெய்வகணேசனும், மாமியார் லீலாவதி(55) ஆகியோர் தினமும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

வரதட்சணை கொடுமை புகார்

இதனை அடுத்து பிரியதர்சிணி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் தனது புகாரில், தனது கணவரும்,மாமியாரும் வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைப்படுத்தியதாகவும், என் மீது அவர்கள் மண் எண்ணையை ஊற்றி தீவைக்க முயற்சித்த போது, தப்பி வந்து போலீசில் புகார் அளிப்ப தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தெய்வகணேசன் மற்றும் லீலாவதியை தேடி வருகின்றனர்.
===============================

2.

காதலியிடம் வரதட்சணை கேட்ட வாலிபர் கைது

காரைக்குடி,செப்.27- 2009

காதலியிடம் வரதட்சணை கேட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி அமரகாரத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டன் ஊருக்கு வந்தபோது, அவருக்கும் அதே தெருவை சேர்ந்த ரேகா (23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர். கடந்த ஜுன் மாதம் இருவரும் திருமயத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் அவரவர் வீட்டிலேயே வசித்து வந்தனர்.

தனது தங்கைக்கு திருமணம் ஆனவுடன் உன்னை என் வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்று மணிகண்டன் கூறினாராம். இதற்கிடையில் ரேகா தன்னை அழைத்துச் செல்லும்படி மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதற்கு மணிகண்டன் 25பவுன்
தங்கநகை கொண்டு வந்தால்தான் அழைத்து செல்வேன் கூறியதாக தெரிகிறது.

இது குறித்து ரேகா காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.

===================

3.

காதலித்து திருமணம் செய்த 2 மாதத்தில் அழகு இல்லை எனக்கூறி, மனைவியிடம் வரதட்சணை கேட்ட கணவன் சித்ரவதை செய்ததாக கைது

கோவை,செப்.26- 2009

கோவையில் திருமணமான 2 மாதத்தில் அழகு இல்லை எனக்கூறி காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவனை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் தெற்கு உக்கடம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). பெயிண்டர். இவர் கோவை குனியமுத்தூர் பிள்ளையார்புரம் கஸ்தூரி கார்டனை சேர்ந்த காவேரியை (19) காதலித்தார். அவர் ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இருவரும் கடந்த இரு மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் துகொண்டனர். இருவரது காதலை விக்னேஷின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து இருவரும் பிள்ளையார் புரத்தில் உள்ள காவேரியின் வீட்டில் அவரது தாய், தங்கையுடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் விக்னேஷ் திடீரென மனைவி காவேரியிடம் `நீ அழகாக இல்லை. உன்னை காதலித்து திருமணம் செய்ததால் எந்த பயனும் இல்லை. அதனால் உன் அம்மாவிடம் கூறி மோட்டார் சைக்கிளை வரதட்சணையாக வாங்கி வரவேண்டும்'
என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது. மேலும் காவேரியை அவர் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அவரது தொந்தரவு தாங்கமுடியாமல் காவேரி வீட்டில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.
================

4.

இன்னொரு வழக்கு

கேரள மாநிலம் கோவில்கடவு ஸ்ரீ ஜெயலட்சுமி ஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜ். இவரது மகள் ஸ்ரீ ஜெயா. இவருக்கும் கோவை சுந்தராபுரம் இடையர்பாளையத்தை சேர்ந்த மூக்காண்டி மகன் ராஜா (32)வுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடந்தது. அப்போது பெண்வீட்டார் தரப்பில் ராஜாவுக்கு 75 பவுன் நகையும், ரூ.1 லட்சம் ரொக்கப்பணமும் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ராஜா தனது மனைவியிடம் ரூ.4 லட்சம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஸ்ரீ ஜெயாவின் கணவர் ராஜா, அவரது மாமியார் பிரமுயம்மாள், மைத்துணர் ராஜாரத்தினம், சுகுணா ஆகிய 4 பேர் மீது வரதட்சணை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
==============

5.

வரதட்சணைக் கொடுமை - மனைவியை துன்புறுத்தியதாக கன்னட பாடகர் கைது
திங்கள்கிழமை, செப்டம்பர் 28, 2009

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய பிரபல கன்னட பின்னணி பாடகர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.

இவருக்கும், பிரியதர்ஷினி என்பவருக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறி பிரிஷயதர்ஷினி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மேலும், கணவருடன், மாமியார், நாத்தனாரும் இவரை துன்புறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் பெங்களூர் பசவன்குடி மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்தார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் ஹேமந்தை கைது செய்தனர்.

கணவன் மனைவி பிரச்னையில் அயலாரைப் புகவிடாதே, பொய்க் கேசு போடாதே!


கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் நடுப்பிடாகையை சேர்ந்தவர் கண்ணன். இவர் ஒரு ஏழை கூலித் தொழிலாளியின் பெண் கோபிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆனவுடனேயே கண்னன் வீட்டார் அந்த கோபிகாவுக்கு சொத்து ஒன்றை எழுதி வைத்துள்ளனர்.

கர்ப்பமான கோபிகா 15 நாட்களிலேயே கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அதற்கு கண்ணனும் அவனுடைய பெற்றோரும் ஒப்புக் கொள்ளவில்லை.

அவர் காவல் நிலையத்திற்குச் சென்று தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் மீது புகார் கொடுத்தார் (அதுதான் 498A செக்ஷன்).

அதன்மேல் குடும்ப வன்முறைச் சட்டத்தின்படியும் ஒரு புகார் கொடுத்தார்.

இத்தனை கேசுகள் போட்டதால் கண்ணன் அவரை வீட்டில் சேர்க்கவில்லை.

உடனே அந்த கோபிகா மார்க்சிஸ்டு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, விஜயகாந்த் கட்சி போன்ற அரசியல் கட்சியினரைக் கூட்டு சேர்ந்துக் கொண்டு குழந்தையை கொளுத்தும் வெய்யிலில் போட்டு வாட்டி வதக்கி நடு ரோட்டில் போராட்டம் நடத்தினாள்.

கண்ணன் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருந்ததால் காவல் துறையினர் அவர்கள் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

உடனே கோபிகாவும் அவருக்கு ஆதரவாகத் திரண்டிருந்த அரசியவாதிகளும் பெரிய போராட்டத்தை அறிவித்து முதலமைச்சர் தலையிடவேண்டும் என்று கூக்குரலிட்டனர். காவல் துறை மீதும் புகார்களைக் கூறிவந்தனர். (ஆமாம் ஐயா, இத்தகைய அரசியவாதிகள் இளம் பெண்கள் பின்னால் போவார்கள், பணத்தின் பின்னே போவார்கள், ஓட்டின் பின்னே போவார்கள். பின்னே நியாயத்தின் பின்னேயா போவார்கள்?)

மேற்கணட விவரமெல்லாவற்றையும் அந்த கண்ணன் "கலைஞர் டிவி"யில் நேரிடையாக இரண்டு நாட்களுக்கு முன் கூறினார் - தன் மனைவி இன்னொருவனுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கும் சந்தேகம் உட்பட!

ஆனால் நேற்று காவல் துறை அதிகாரிகள் அந்த தம்பதிகள் இரண்டு பேரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சேர்ந்து வாழும்படி கூறி கண்ணனுடைய் பெற்றோரை விட்டுப் பிரிந்து தனிக் குடுத்தனம் போக அனுப்பியுள்ளனர்.

தினத்தந்தி செய்தியின்படி அந்த சேர்த்து வைக்கும் நடவடிக்கை குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், "கோபிகாவும் கண்ணனும் சேர்ந்து வாழ்வதற்கு அவர்களது குடும்பத்தினர்தான் தடையாக இருந்தனர். இதனால் அவர்களை தனிக்குடித்தனமாக சேர்ந்து வாழ அனுப்பி வைத்துள்ளோம்" என்றார். (http://www.dailythanthi.com/article.asp?NewsID=517199&disdate=9/29/2009)

இதுபற்றி நேற்றைய (29-09-2009) தினகரன் செய்தி இது:

அதிகாரிகள் சமரச முயற்சி வெற்றி 20 நாள் போராட்டம் முடிந்தது கணவரோடு சேர்ந்தார் கோபிகா.

நாகர்கோவில், செப்.29: குமரி மாவட்டம் கருங்கல் அடுத்த பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (25). இவருக்கும் இரணியல் பகுதியை சேர்ந்த கோபிகாவுக்கும் (23) ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர். கணவரோடு தன்னை சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் கோபிகா பல போராட்டங்களை நடத்தினார்.

கடந்த 7ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை கணவர் வீட்டு முன் தொடங்கினார். பல்வேறு அரசியல் கட்சிகளும் அவருக்கு ஆதரவளித்தன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரு தரப்பையும் பேச்சு வார்த்தைக்கு வரும்படி எஸ்.பி. சண்முகவேல் அழைத்தார். அதன்படி கோபிகா மற்றும் கண்ணன் தங்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களோடு வந்தனர். குடும்ப பிரச்னை என்பதால் கோபிகா, கண்ணனை தவிர வேறு யாரும் உள்ளே வர வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டனர். சரியாக 11 மணி அளவில் எஸ்.பி. அலுவலகத்துக்குள் கண்ணனும், கோபிகாவும் சென்றனர். எஸ்.பி. சண்முகவேல், பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. முருகவேல் ஆகியோர் அவர்களிடம் பேசினர்.

இருவருமே ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தொடக்கத்தில் பேசினர். நேரம் செல்ல, செல்ல பேச்சு வார்த்தையில் மாறுதல் ஏற்பட்டது. கணவருக்காக கோபிகாவும், கோபிகாவுக்காக கண்ணனும் பரிந்து பேசும் அளவுக்கு நிலை வந்தது. 3 மணி நேர பேச்சுக்கு பிறகு இருவரும் சிரித்தபடியே வெளியே வந்தனர்.

இது தொடர்பாக எஸ்.பி. சண்முகவேல் கூறியது:

கோபிகா, கண்ணன் இருவரும் சேர்ந்து விட்டனர். குடும்ப விவகாரத்தை இப்படி பெரிதாக்க கூடாது. விட்டு கொடுத்து செல்ல வேண்டும். கணவன், மனைவிக்குள் ஈகோ பிரச்சினை கூடாது என்று பல அறிவுரைகளை கூறினோம். குழந்தையின் நலனையும் பார்க்க வேண்டும் என்றோம். இந்த பேச்சு வார்த்தையில் பலனாக இருவரும் தங்களது தவறை உணர்ந்தனர். அவர்கள் இனி தங்கள் குழந்தையோடு புது வாழ்க்கையை தொடங்க போகிறார்கள் என்றார்.

வெளியே வந்த கோபிகா, ‘கணவரோடு சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

கண்ணன் கூறுகையில், ‘ஒரு சிலரின் தூண்டுதல்தான் இந்த பிரச்னைக்கு காரணம்’ என்றார்.

கருத்து யுத்தம் வீடியோ





காணுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்!

மருமகளுக்கு உரிமைகள் மட்டுமே, கடமையேதும் கிடையாது!

மருமகளிடம் வாடகை வசூலிக்க ஐகோர்ட் தடை
செப்டம்பர் 15,2009. தினமலர் செய்தி

புதுடில்லி: "தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசிக்கும் மருமகளிடம், கணவன் வீட்டார் வாடகை கேட்கக்கூடாது' என, கோர்ட் தெரிவித்துள்ளது.

டில்லியை சேர்ந்தவர் கவிதா; இவருக்கு இரண்டு குழந்தைகள். கணவர் இவருடன் வாழவில்லை.

எனினும், மாமனாருக்கு சொந் தமான மூன்றடுக்குமாடி முதல் தளத்தில், கவிதா வசித்து வந்தார். கணவன் உடன் இல்லாத நிலையில், கவிதாவிடம் வீட்டு வாடகை கேட்டு மாமனாரும், மாமியாரும் நச்சரித் தனர். இதை எதிர்த்து, கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார் கவிதா. இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், வீட்டுக்கு மாத வாடகையாக, 3, 250 ரூபாய் செலுத் தும் படி, கவிதாவுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கவிதா, டில்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பாஷின், "திருமணமானதும், பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண், அந்த வீட்டின் ஒரு அங்கத்தினராகி விடுகிறாள். கவிதாவுடன் அவர் கணவர் சேர்ந்து வாழாத போதும், புகுந்த வீட்டில் அவரும் ஒரு உறுப்பினர் தான். எனவே, அவரிடம் வாடகை வசூலிக்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளார்.

498A பொய்க்கேசு போட்டு சூறையாடிய பின் வாழ்க்கையைத் தொலைத்த பெண்கள்

அண்மையில் கோவையில் நடந்த இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டத்தைப் பற்றிய செய்திக் குறிப்பில் தினகரன் நாளிதழ் "தம்பதிகள் ஒற்றுமைக்கு விழிப்புணர்வு இயக்கம்" என்று தலைப்பிட்டிருந்தது.

இதைக்கண்ணுற்ற மூன்று பெண்மணிகள் இந்த அமைப்பின் முன்னணி உறுப்பினர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கோரினார்கள்.

அவர்கள் மூவருமே தங்கள் கணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் மீது 498A உட்பட என்னென்ன பொய்க் கேசுகள் போட முடியுமோ அவையெல்லாவற்றையும் வஞ்சனையில்லாமல் போட்டு, கைது செய்வித்து "உள்ளே தள்ளி", அதன்பின் கறக்க இயன்ற வரையில் பணத்தைக் கறந்தபின் விவாகரத்து பெற்றவர்கள். சட்டங்களின் ஓரவஞ்சனைத் தன்மையையும் தீர்ப்புகளின் ஒரு சார்பு மனப்பான்மையையும் கைக்கொண்டு தன் குழந்தைகளின் காப்புரிமையையும் கண்வன்மார்களிடமிருந்து பறித்து முழுதும் தனதாக்கிக் கொண்டவர்கள். அதில் இருவர் பெரிய தொகையொன்றை தத்தம் கண்வனிடமிருந்து பெற்றவர்கள். ஒருவர் மாதாமாதம் ஜீவனாம்சம் பெற்று வருபவர்.

சரி, அவர்களுடைய கோரிக்கைதான் என்ன?

மீண்டும் தங்கள் கணவன்மார்களிடம் சேர்த்து வாழ வைக்க வேண்டுமாம்! இது எப்படி இருக்கு!

காரணம்?

மூவருக்குமே வயது முப்பதுகளில். குழந்தைகள் வேறு. இளமை முறுக்கும் தோற்றமும் பறிபோய் விட்டன.

கல்யாணச் சந்தையில் விலை போகவில்லை. இவர்களது பொய் வழக்கு புராணம் தெரிந்தபின் எந்த மாங்காய் மடையன் இவர்களைச் சீந்துவான்!

மறுபடியும் அதே முட்டாள் கணவர்களைப் பீடித்து பேயாட்டலாம் என்று கனவு காண்கிறார்கள், அது நடக்கவே நடக்காது என்று தெரிந்தும்!

சமீபத்தில் நாங்கள் கூர்ந்து நோக்கிய பல 498A கேசுகளில் பொய்க் கேசு போட்ட பெண்குலத்திலகங்கள் வழக்கு நடக்கும்போதே வக்கீல்களிடமும், கோர்ட்டு வராண்டாக்களிலும் அலைந்து ஓரிரு ஆண்டுகளில் பத்து வயது கூடிய தோற்றம் பெற்று விடுகிறார்கள்.

சட்டங்கள் பொய் வழக்கு போட தங்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்ற நிலையைக் கைக்கொண்டு கண்வன் மற்றும் மாமியார், மாமனார், நாத்தனார் போன்றோரை எடுத்த எடுப்பில் கைது செய்வித்து ஆட்டம் காட்டலாம் என்ற வெறியில் காவல் நிலையத்திற்கும் கோர்ட்டுக்கும் படியேறுகிறார்கள். அடுத்து வக்கீல் காண்பிக்கும் இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டு பெரிய துகை ஒன்றை கணவனிடமிருந்து கறக்கிறார்கள். குழந்தைகளையும் தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று நீதிபதிகள் முன் கண்ணீர் சிந்தி தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெறுகிறார்கள்.

எல்லாம் ஆயிற்று. பிறகு?

பிறகு..??

வீட்டுக்கு வீடு 498A வழக்கு

இப்போதிருக்கும் நிலவரத்தைப் பார்க்கும்போது கூடிய சீக்கிறமே நம் நாட்டில் வீட்டிற்கு ஒரு 498A வழக்கு போடப்பட்டிருக்கும் நிலைமை ஏற்படும் என்று தோன்றுகிறது.

"எங்கள் வீட்டில் எல்லாமே பெண்கள்தானே! எங்கள் மேல் எப்படி அந்த வழக்கு போடமுடியும்?" என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். கீழ்க்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் பதில் "ஆமாம்" என்றிருந்தால் நிச்சயம் நீங்கள் 498A கேசுகளிலிருந்து தப்ப முடியாது:

  • உங்கள் நண்பர், உறவினர் யார் வீட்டிலாவது ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களா?
  • உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் எவரேனும் திருமணம் செய்து கொண்டுள்ளார்களா? அவரோடு நெருங்கிப் பழகி அவருடைய வீட்டிற்குச் சென்று வருவதுண்டா?
  • அக்கம் பக்கத்தில் எவர் வீட்டிலாவது குடும்பப் பூசல் ஏற்பட்டு அங்கு சென்று நீங்கள் எப்போதாவது அறிவுரையோ உதவியோ கொடுத்ததுண்டா?
  • எந்த மணமான பெண்ணிடமாவது ஏதாவது ஒரு காரணத்தினல் தகராறு ஏற்பட்டதுண்டா?
  • உங்கள் கீழ் பணிபுரியும் பெண் எவரிடமாவது கடுமையாக நடந்து கொண்டதுண்டா? அல்லது அவர்கள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளத் தவறியதுண்டா?

சரி, அவர்கள் கொடுக்கும் புகார் எப்படியிருக்கும்?

பதில்: எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அது அவர்களுடைய வக்கீலின் கற்பனைத் திறமை, இதுபோன்ற பொய் வழக்கு போட ஏதுவான சட்டங்களைப் பற்றிய அவருடைய அறிவு, புகாரில் கையெழுத்து போடும் புதுமைப் பெண்ணின் கீழ்த்தர மனப்பான்மையின் பாதாள நிலை இதைப் பொருத்து மாறும்.

மாதிரிக்கு இன்றைய தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தியை படியுங்கள்:-

பரமக்குடி,செப்.9-

மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட வெளிநாட்டு என்ஜினீயர் மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

என்ஜினீயர்

பரமக்குடி பவுண்டு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ஜெயஆனந்த்(வயது 33). இவர் நெதர்லாந்தில் என்ஜினீயராக உள்ளார். இவருக்கும் திருச்சி உறையூரைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவரது மகள் சங்கீதவாணிக்கும்(26) கடந்த 6.7.2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 60 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே வாலிபர் ஜெயஆனந்த் தனக்கு தகுதி யில்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று கூறி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்தாராம். இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் தம்பதிகள் நெதர்லாந்து சென்று விட்டனர். பின்னர் அங்கிருந்து சங்கீதவாணி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். (இந்தக் கூற்றுகளில் தெரிகின்ற முரண்பாடுகளைக் கவனியுங்கள்)

வழக்கு

இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அதனை கணவன் உள்பட அவரது வீட்டார் யாரும் பார்க்க வரவில்லையாம். மேலும் சங்கீதவாணி யின் நடத்தை குறித்து தவறாக பேசியதுடன் கூடுதலாக பணம் மற்றும் நகை கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த சங்கீதவாணி இதுகுறித்து பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் வெளிநாட்டு என்ஜினீயர் ஜெய ஆனந்த், இவரது தந்தை பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.