முதல் காதலனுடன் திருமணம் நிச்சயம் ஆன மறு நொடியில் அவனுடைய நண்பனுடன் 'ஓட்டம்' பிடித்தாள் புதுமைப் பெண்.
நல்ல வேளை. முதல் காதலனின் தலை தப்பியது. திருமணம் மட்டும் நடந்து முடிந்திருந்தால் அவனைப் “போட்டுத் தள்ளியிருப்பாள்” அந்தப் புதுமைப் பெண்!
வாழ்க பெண்கள் முன்னேற்றம். வாழ்க மனோரமா, ராமாத்தாள், விஜயகாந்த் போன்ற பெண்ணியக் காப்பாளர்கள். வளர்க இது போன்ற தெய்வீகக் காதல்கள்!
சைதாப்பேட்டை : தந்தை இறந்து போன நாளன்று, நண்பருடன் ஓடிப்போன காதலியால் பரபரப்பு ஏற்பட்டது.
சைதாப்பேட்டை சுப்ரமணிய தெருவைச் சேர்ந்தவர் ஞான வினாயகம் (57). இவரது மகள் உமா மகேஸ்வரி(19). பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவருடன் வேலை பார்க்கும் சூப்பரவைசர் குமார் என்பவரை காதலித்தார்.
தனது காதலை தந்தையிடம் கூறினார். மகள் மீதுள்ள பாசத்தினால், அவரது காதலுக்கு ஞான வினாயகம் பச்சைக்கொடி காட்டினார். இந் நிலையில், கடந்த 26ம் தேதி, எதிர் பாராத விதமாக ஞான வினாயகம் இறந்துபோனார்.
அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற, அவரது உடலின் முன்னிலையிலேயே, உமாவுக்கும், குமாருக்கும் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. நிச்சயம் நடந்த சிறிது நேரத்திலேயே, குமார் அங்கிருக்க உமா மட்டும் மாயமானார்.
சைதாப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், உமா, குமாரின் நண்பரான பிரவீன்குமார் என்பவருடன் நெருங்கிப் பழகியதும், அவருடன் பெங்களூரு சென்றிருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து, அவரை பெங்களூருக்கு சென்ற தனிப்படை போலீசார் மீட்டனர்.
ஆகா! இதுவல்லவோ தெய்வீகக் காதல்!
குறிச்சொற்கள் lust, கள்ளக்காதல், சமூகம், செக்ஸ், மனோரமா, ராமாத்தாள், விஜயகாந்த்
சட்டையைக் கழற்றுவது போன்றதுதான் தாலியைக் கழற்றுவதும்!
ஆகா! இதுவல்லவோ, தெய்வீகக் காதல்!
காதலனிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, பெற்றோருடன் சென்ற பெண். சென்னையில் ருசிகர சம்பவம்
ராயபுரம், அக். 3- 2009 - தினத்தந்தி
"எங்களுக்குள் எந்த தவறும் நடக்க வில்லை'' என்று கூறிய பெண், காதலன் கட்டிய தாலியை அவரிடமே கழற்றி கொடுத்துவிட்டு, பெற்றோருடன் சென்று விட்டாள்.
சென்னையில் நடந்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் திலகா(வயது22), ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேவூபார்த்து வந்தார். தொலை தூர கல்வி மூலமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிப்பும் படித்து வந்தார்.
திலகா வேலை பார்த்த கம்பெனியில், வியாசர்பாடியை சேர்ந்த ஹாரி டிசல்வா (25) என்ற வாலிபரும் வேலை பார்த்தார். அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதல் பற்றி, திலகாவின் தந்தை சிதம்பரத்துக்கு தெரிய வந்தது. அவர் தனது மகளை கண்டித்தார்.
தாலி கட்டினார்
கடந்த 29-ந் தேதி வேலைக்கு சென்ற திலகா, வீடு திரும்ப வில்லை. அவர், தனது காதலனோடு வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார். அங்கு திலகா கழுத்தில் ஹாரி டிசல்வா தாலி கட்டினார். பின்னர் இருவரும் அறை எடுத்து தங்கினார்கள்.
இதற்கிடையில் சிதம்பரம் தனது மகளை காணவில்லை என்றும், கண்டு பிடித்து தருமாறும் கோரி, தண்டையார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சவரிநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
தாலியை கழற்றி விட்டேன்
நேற்று திடீர் என்று திலகா, தண்டையார் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
"நானும் ஹாரி டிசில்வாவும் காதலித்தது உண்மை. அவர் எனக்கு தாலி கட்டினார். ஆனால் எங்களுக்குள் எந்த தவறும் நடக்க வில்லை.
எனக்கு காதல் பிடிக்க வில்லை. என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் தவறு செய்து விட்டேன். எனவே, ஹாரி டிசில்வா கட்டிய தாலியை கழற்றி அவரிடமே கொடுத்து விட்டேன். இனி எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.''
இவ்வாறு திலகா கூறினார்.
பின்னர் திலகாவை, அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
தேவை ஒரு கள்ளக்காதல் பாதுகாப்பு இயக்கம்!
மனோரமாவும் கேப்டன் விஜயகாந்தும் தான் கவனிக்க வேண்டும்!
ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.3- 2009. செய்தி - தினத்தந்தி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பெருமாள்சேரி. இந்த பகுதியை சேர்ந்தவர் ராக்கப்பன் (வயது35). இவரது மனைவி பழனியம்மாள் (25). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் பகுதியை சேர்நத மாரிகுரு (29) என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இந்தக் கள்ளக்காதலால் பழனியம்மாள் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதற்கிடையில் மாரிகுரு (கள்ளக் காதலன்) தனது அக்கா மகள் தாமரைச் செல்வியை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பழனியம்மாள் உறவை துண்டித்துக் கொண்டார். இதனால் பழனியம்மாள் குடும்ப நடத்த பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பம் நடத்த பணம் கேட்டு மாரிகுரு வீட்டிற்கு பழனியம்மாள் வந்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாரிகுரு வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து பழனியம்மாள் மீது ஊற்றியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பழனியம்மாள் தனக்குதானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
இந்தசம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் சேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாரிகுருவை கைது செய்தார்.
குறிச்சொற்கள் lust, manorama, paramour, கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், சமூகம், மனோரமா, விஜயகாந்த்
லேட்டஸ்ட் கள்ளக்காதல் கொலை
அவனியாபுரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை, பெருங்குடியைச் சேர்ந்தவர் முருகேசன்(45); தள்ளுவண்டியில் ஜூஸ் கடை நடத்தினார்.
மனைவி செல்வி (29). இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜெய்ஹிந்புரம் சத்துணவு மையத்தில், செல்வி சமையல் உதவியாளராக உள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் அவனியாபுரம் அருகே கரிசல்குளத்தில் குடியிருந்தபோது, செல்விக்கும், கொத்தனார் சக்திவேல் (20) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது தெரிந்ததால் பெருங்குடியில் குடும்பத்துடன் முருகேசன் குடியேறினார். ஆனாலும், செல்வியின் கள்ளக்காதல் தொடர்ந்தது.
நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு முருகேசன் வீடு திரும்பினார். கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை. சந்தேகப்பட்டு கதவின் மேல் இருந்த பெரிய துவாரம் வழியே வீட்டிற்குள் குதித்தார். அங்கு, செல்வியுடன் சக்திவேல் இருந்ததைக் கண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"வெளியில் தெரிந்தால் அவமானம்' எனக்கருதி அவரை கொலை செய்ய செல்வியும், சக்திவேலுவும் முடிவு செய்தனர். தான் கொண்டு வந்த பட்டாக்கத்தியால், முருகேசனை பல இடங்களில் சக்திவேல் வெட்டினார். பின் கழுத்தை அறுத்து கொன்றார்.
உடலை, ஜூஸ் கடை தள்ளுவண்டியில் வைத்து சுடுகாட்டிற்கு கடத்தினர். ஆள்நடமாட்டம் இருந்ததால் நடுரோட்டில் நிறுத்திவிட்டு இருவரும் தப்பினர். இதுகுறித்து முருகேசன் தந்தை காந்திக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து செல்வி கொலை செய்திருக்கலாம் என்று அவர், போலீசில் புகார் செய்தார்.பரம்புபட்டி ரோட்டில் பதுங்கியிருந்த அவர்களை, திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.
வாக்குமூலத்தில், "கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை கொலை செய்ததாக' செல்வி தெரிவித்துள்ளார். அதே போல சக்திவேலுவும் தெரிவித்துள்ளார்.
தொடரும் கள்ளக்காதல் கொலைகள்:
சமீபகாலமாக கள்ளக்காதல் தொடர்பாக கொலைகள் நடப்பது அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், விளாத்திக்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுருபர ராமநாதன் சகோதரர் ராஜராஜனை, கள்ளக்காதலன் ஷாஜகானுடன் சேர்ந்து மனைவி கிருஷ்ணகுமாரி கொலை செய்தார்.
கடந்த 4ம் தேதி மதுரை யாகப்பா நகரில் சந்தேகத்தின் பேரில் மனைவி தமிழச்செல்வியை, ரவுடி பாண்டி கொலை செய்தார். ஜூலை 29ல் பொன்மேனியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன் கிருஷ்ணமூர்த்தியை, காதலனுடன் சேர்ந்து தாயார் மேரி கூறு கூறாக வெட்டி கொலை செய்தார். இந்த பட்டியலில் தற்போது செல்வியும், சக்திவேலுவும் சேர்ந்துள்ளனர்.
==============
கள்ளக்காதல் கொலைக்கு வக்காலத்து வாங்கும் ஆச்சி மனோரமாவும், கள்ளக் காதல் தெரியவந்ததால் வெளியேற்றப்பட்டு பிறகு கணவன் மீது 498A, DVAct போன்ற வழக்குகளைப் போட்டு ரவுசு பண்ணும் பெண்ணைத் தூண்டி விட்டு பாலிடிக்ஸ் செய்யும் விஜயகாந்த் போன்றவர்களும் தங்கள் குறுகிய சுயநலனுக்காக முனைந்து நின்று நம் நாட்டில் திருமணம், குடும்ப வாழ்வு, குழந்தைகள் நலன், பண்பாடு போன்ற அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்க முற்படுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிச்சொற்கள் 498a, lust, vijayakanth, கள்ளக்காதல், கொலை, சமூகம், மனோரமா, விஜயகாந்த், வெறி
திமுக முன்னாள் எம்.எல்.ஏயின் தம்பியை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி
முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி கொலையில் மனைவி, கள்ளக்காதலன் கைது. பரபரப்பு வாக்குமூலம்
விளாத்திகுளம், செப்.25- 2009. செய்தி - தினத்தந்தி, தினமலர்
முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் சங்கரராமு மகன் குட்டி என்ற ராஜராஜன் (வயது 40). விவசாயி.
இவருக்கு கிருஷ்ணகுமாரி (36) என்ற மனைவியும், கோகுல் (13) என்ற மகனும், ரம்யா (8) என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணகுமாரி சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் ராஜராஜன் கொலை தொடர்பாக அதே ஊரை சேர்ந்த ஷாஜகான் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான ஷாஜகான் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
எனது சொந்த ஊர் அரியநாயகிபுரம். எனக்கு திருமணம் ஆகவில்லை. 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எங்களது வீட்டின் பக்கத்திலேயே ராஜராஜனின் வீடு உள்ளது. எனவே அவரிடம் பழக்கம் இருந்ததால் அவரது வீட்டிற்கு சென்று அனைவரிடமும் அன்பாக பழகுவேன்.
கடந்த 2 மாதங்களாக ராஜராஜன் மனைவி கிருஷ்ணகுமாரிக்கும், எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஆனால் என்னை யாரும் சந்தேகப்படவில்லை. நான் சென்னையில் ஒரு பழைய இரும்புக்கடையில் வேலை செய்து வருகிறேன். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வேன்.
கடந்த மாதம் நான் சென்னையில் இருந்தபோது கிருஷ்ணகுமாரி, செல்போனில் என்னிடம், தனது கணவர் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறினார். இந்தநிலையில் கடந்த வாரம் நான் ரம்ஜான் கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்து இருந்தேன்.
அப்போது, தனது கணவரை கொலை செய்தால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்று கிருஷ்ணகுமாரி என்னிடம் கூறினார். இதனால் ரம்ஜான் பண்டிகை அன்று நான், ராஜராஜன் மற்றும் எனது நண்பர்கள் அலியாஸ், ராஜேந்திரன், காளிமுத்து, வேல்சாமி, முருகேசன் ஆகியோர் அரியநாயகிபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மது அருந்தினோம். பின்னர் அனைவரும் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தோம்.
அப்போது மற்றவர்களை அனுப்பிவிட்டு ராஜராஜனை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு வந்து மீண்டும் 2 பேரும் மது அருந்தினோம். இதனால் ராஜராஜன் அதிக போதையில் இருந்தார்.
அப்போது நான் அருகில் கிடந்த உருட்டைக்கட்டையால் ராஜராஜன் கழுத்தில் அடித்தேன். இதனால் படுகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே செத்தார்.
பின்னர் அவரிடம் இருந்த செல்போனை எடுத்து அதில் இருந்த சிம்கார்டை தனியாக கழற்றிக்கொண்டு வந்து கிருஷ்ணகுமாரியிடம், செல்போனையும், சிம்கார்டையும் கொடுத்துவிட்டு ராஜராஜனை கொலை செய்ததை கூறினேன். பிறகு கிருஷ்ணகுமாரியிடம் என்னுடைய ரத்தக்கறை படிந்த சட்டையை கொடுத்துவிட்டு வேறு சட்டை வாங்கி அணிந்து கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என்னை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்ததில் ராஜராஜனை நான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு ஷாஜகான் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.
இதையொட்டி கிருஷ்ணகுமாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் ஷாஜகான் வீட்டில் இருந்த கிருஷ்ணகுமாரியின் தற்போதுள்ள போட்டோ மற்றும் சின்ன வயதில் எடுத்த போட்டோக்களையும் கைப்பற்றினர். கிருஷ்ணகுமாரியிடம் இருந்து ராஜராஜனின் செல்போன், சிம்கார்டை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.
கோவையில் குடும்பப் பாதுகாப்பு இயக்கப் பொதுக்கூட்டம்
"இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம்" (SAVE INDIAN FAMILY FOUNDATION) வரும் சனிக்கிழமை வெள்ளிக்கிழமை அன்று (செப்டம்பர் (5) 4-ம் தேதி, 2009) கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பும், ஒரு பொதுக்கூட்டமும் நிகழ்த்த இருக்கிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவராலேயே "சட்டபூர்வ பயங்கரவாதம்" (Legal terrorism) என்று வர்ணிக்கப்பட்ட IPC 498A சட்டப்பிரிவு (வரதட்சணை கொடுமை சட்டம்), மற்றும் ஆண்களை மட்டும் குற்றவாளியாகக் கருதும் குடும்ப வன்முறைச் சட்டம் (D.V.Act) போன்ற பொய் வழக்குச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவதற்காகவும் மற்றும் திருமணத்தை எதிர் நோக்கியிருப்போருக்கும் இதுபோன்ற சட்டங்களைப் பற்றிய புரிதலை உணர்த்துவதற்காகவும் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.
நேரம்: காலை 11 மணி.
இடம்: பிரஸ் கிளப்,
5, மாநகராட்சி வணிக வளாகம்,
தண்டு மாரியம்மன் கோயில் எதிரில், அவிநாசி சாலை,
கோயம்புத்தூர் 641018
தொடர்புக்கு -- 9790019658
அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
இன்றைக்கு இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் அனைவரும் இதைப் பற்றிய பொது அறிவு இல்லாமல் இருந்ததால்தான் மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் திருமணத்தின் போது இப்படி ஆகுமென்றா எதிர் பார்த்தார்கள். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதற்காக அத்தகைய பொய்க் கேசுகள் போடாமல் இருக்கிறார்களா என்ன? நம் நாட்டில் ஆண்டுக்கு 76,000 பொய்க் கேசுகள் (498A) போடப்பட்டு ஒரு பாவமும் அறியாத வயதான தாய்மார்களும் இளம் பெண்களும் சின்னஞ்சிறு குழந்தைகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் 2% கேசுகள்தான் நிரூபிக்கப்படுகின்றன.
சட்டத்தில் ஓட்டை இருக்கலாம்; ஆனால் ஓட்டையே சட்டமானால்?
இந்த அறிவிப்பை பாதிக்கப்பட்டோருக்கும் தங்கள் நண்பர்களுக்கும் பரவலாக அனுப்பி வையுங்கள். நம்மாலான பொதுத் தொண்டு!
குறிச்சொற்கள் 498a, child custody, divorce, dv act, கயமை, சமூகம், பொய் வழக்கு, வரதட்சணை, வன்முறை, விவாகரத்து
முறை தவறிய காதலை மறைக்க மாணவி நடத்திய நாடகம்
ஜூலை 28,2009. செய்தி: தினமலர்
கோவை: பெரியப்பா மகனுடனான தவறான உறவை மறைக்க, பிளஸ் 2 மாணவி கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.
சேலம் மாவட்டம், மொரப்பூரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியின் 17 வயது மகள், கோவை, காந்திபுரத்தில் உறவினர் வீட்டில் தங்கி, சாய் பாபா காலனியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி பள்ளிக்கு சென்ற இவர், தலைமை ஆசிரியரிடம் திடுக் புகார் தெரிவித்தார். "நான் பள்ளி அருகே நடந்து வந்த போது, காரில் வந்த நான்கு பேர் கடத்திச் சென்று மானபங்கம் செய்தனர். பின்னர், கையில் கடிதத்தை திணித்துவிட்டு, மீண்டும் பள்ளி அருகே தள்ளிவிட்டு தப்பிவிட்டனர்' என தெரிவித்திருந்தார்.
அக்கடிதத்தில், ஆபாச வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்ததாகக் கூறப்பட்ட கடத்தல் சம்பவம், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
விசாரணையில் திருப்பம்:
சம்பவம் குறித்து அந்த மாணவி முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்ததால் போலீசார் குழப்பமடைந்தனர். உண்மை கண்டறிய மாநகர போலீஸ் துணைக் கமிஷனர் காமினி, இன்ஸ்பெக்டர் நேரு தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டது.
சம்பவம் நடப்பதற்கு முன் மாணவியுடன் மொபைல் போனில் பேசியதாகக் கூறப்பட்ட, மேட்டூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அவருக்கு தொடர்பில்லை என தெரிந்ததும் விடுவிக்கப்பட்டார்.
மாணவி மீது சந்தேகமடைந்த போலீசார், அவரது பள்ளி நோட்டு புத்தகங்களை கைப்பற்றி பார்வையிட்டனர். அதில், பல்வேறு விதமான மிரட்டல் கடிதங்கள், மாணவியின் கைப்பட எழுதப்பட்டிருந்தன. இது குறித்து விசாரித்த போது, கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.
போலீசாரிடம் மாணவி அளித்த வாக்குமூலம்:
எனது பெற்றோர், குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்துவிட்டனர். படிக்க வசதியில்லாமல் அவதிப்பட்ட என்னை, காந்திபுரத்தில் வசிக்கும் பெரியப்பா அழைத்து வந்து படிக்க வைக்கிறார். அவ்வீட்டில் தங்கியிருந்த போது அவரது மகன் அருண்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது; இருவரும் எல்லை மீறி நடந்து கொண்டோம். படிப்பில் ஆர்வம் குறைந்த நிலையில் தேர்வும் வந்தது. தேர்வில் பங்கேற்காமல் தவிர்க்க, நானும் அருண்குமாரும் கடத்தல் நாடகமாடினோம்.
போலீசாரையும், உறவினர்களையும் நம்ப வைக்க, கடத்தல்காரர்கள் எழுதியது போன்று போலி கடிதங்களையும் தயார் செய்து, அதில் ஒரு கடிதத்தை எடுத்துச் சென்றேன். நான் கடத்தப்பட்டு மானபங்கம் செய்யப்பட்டதாக, தலைமை ஆசிரியரிடம் கூறி அழுதேன். எனினும், போலீஸ் விசாரணையின் போது, பதிலளித்து தப்ப முடியாமல் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு மாணவி தெரிவித்தார்.
இதையடுத்து, அருண்குமார்(20) மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 (கற்பழிப்பு) வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர், டிப்ளமோ முடித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
வழக்கின் விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் நேரு கூறியதாவது: பிளஸ் 2 மாணவி, தவறான உறவை மறைக்கவும், தேர்வில் பங்கேற்காமல் தவிர்க்கவும் கடத்தல் நாடகமாடி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். சந்தேக நபர்களை ஒவ்வொருவராக அழைத்து காண்பித்த போதிலும், "இவன், அவனல்ல' என்றே பதிலளித்தார். எங்களுக்கு சந்தேகம் வலுக்கவே, நோட்டு புத்தகங்களை பார்வையிட்டோம்; நாடகம் அம்பலமானது. இவ்வாறு நேரு தெரிவித்தார்.
========================
உங்கள் சிந்தனைக்கு:-
இந்த அநியாயத்தைப் பாருங்கள். நடத்தை கெட்டு அண்ணனுடன் ஜல்சா செய்தவள் பெண். கடத்தல் பொய் நாடகமாடியது பெண். ஆனால் கைது செய்யப்பட்டது மட்டும் ஆண்! வேலிமேல் வேட்டி விழுந்தலும் வேலி வேட்டி மேல் விழுந்தாலும் கிழிந்து கந்தலாவது வேட்டி மட்டும்தான். இதுதான் இந்த சமூகத்தின் ஆணெதிர்ப்புச் சட்டங்களின் நடைமுறை!
ஆமாம், "கற்பழிப்பு" என்றால் என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!!
கள்ளக்காதலன் கதையும் கந்தல்தான்!
தாம்பரத்தில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினத்தை சேர்ந்த மோகன் என்பவரின் மகள் இளவரசி (வயது 25). இவரது கணவர் இஸ்ராத். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இளவரசி தாம்பரத்தில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த டிராவல்சுக்கு குரோம்பேட்டையை சேர்ந்த இன்சூரன்ஸ் ஏஜண்டான குருமூர்த்தி (வயது 29) அடிக்கடி வருவார். அப்போது இளவரசிக்கும், குருமூர்த்திக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதுபற்றி இளவரசியின் கணவர் இஸ்ராத் தட்டிக்கேட்டபோது குருமூர்த்தி அவரை அடித்து விரட்டிவிட்டு தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் இளவரசியுடன் வசித்து வந்தார்.
குருமூர்த்தி ஏற்கனவே தங்கலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டு சுபா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து அவருடன் குரோம்பேட்டையில் குடித்தனம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளன.
இந்த நிலையில், `பாலிசி' எடுக்க வருபவர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி இளவரசியை குருமூர்த்தி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த இளவரசி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் விசாரணையின் போது இளவரசியின் `டைரி' சிக்கியது. அதில், "நான் பத்தினியாக இருந்தேன் (ஆகா! பத்தினிகள்தான் எத்தனை விதம்!!). என்னை கெடுத்து விட்டாய், உடலால்தான் கெட்டுள்ளேன், உள்ளத்தால் கெடவில்லை. சுபா மீதுதான் உனக்கு பாசம் உள்ளது. உன்னைவிட என் கணவர் இஸ்ராத் எவ்வளவோ நல்லவர். உனக்கு குழந்தைகள் உள்ளன. என் பாவம் உன்னை சும்மாவிடாது'' என்று எழுதப்பட்டு இருந்தது.
கள்ளக்காதலன் கைது
இதைத்தொடர்ந்து, இளவரசியின் தற்கொலைக்கு காரணமான குருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
(செய்தி - தினமலர்)
பள்ளி மாணவிகளின் முழு விடுதலை
தற்போது இணையத்திலும், செல்ஃபோன்களிலும், சிடி மூலமாகவும் அதிகம் கண்டு களிக்கப்ப்டும் ஜிலுஜிலு காட்சிகள் பள்ளி மாணவிகள் தங்கள் யூனிஃபார்முடன் ஒரு பயமுமில்லாமல் உல்லாச ஜல்சாக்களில் ஈடுபடும் இயற்கை வீடியோக்கள்தான்! இவை தன்னிச்சையாக அவர்கள் இன்பம் துய்க்கும்போது மறைவிலிருந்து எடுக்கப்படுவதால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகிறது.
இத்தகைய பெண்கள் பல ஆண் பையன்களுடன் பகிரங்கமாக கலவையிலும் மற்றும் வாய்ப் புணர்வில் ஈடுபடும் காட்சிகளை பார்க்குகளிலும், பீச்சிலும், இன்னும் ஆளரவம் அதிகமில்லாத பாழடைந்த இடங்களிலும், வள்ளுவர் கோட்டம் போன்ற விஸ்தாரமான மண்டபங்களிலும் காணலாம்.
(இது போன்ற ”முழு விடுதலை” பெற்ற பெண்கள் ஒவ்வொருவரையும் ஒரு பைத்தியக்காரன் பிற்காலத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகிறான்! அவன் கதி என்ன!! இது போன்ற பெண் திலகங்கள்தான் மணமானவுடன் கணவனிடம் பணம் கறக்க 498A பொய்க் கேசு போடுவார்கள்!)
வேலூர் போன்ற ஊர்களில் இன்னொருவர் பார்க்கிறார்களே என்பதைப் பற்றிக்கூடக் கொஞ்சமும் கவலைப் படாமல் அவர்கள் பாட்டுக்கு ஜல்சாக்களில் ஈடுபடுவதைப் பற்றி பல பத்திரிக்கைகளில் எழுதியிருந்ததைப் படித்திருப்பீர்கள்.
இந்த லிஸ்டில் இப்போது விழுப்புரமும் சேர்ந்திருக்கிறது.
இந்தச் செய்தியை வாசியுங்கள் (நன்றி - தினமலர்):-
விழுப்புரம் பகுதியில் பள்ளிக்கு செல்வதாக கூறி ஊர் சுற்றும் மாணவிகள். பெற்றோர்களே உஷார்!
விழுப்புரம் நகரத்தை சுற்றி ஏராளமான நகர்கள் உருவாகியுள்ளன. இதற்கு காரணம் கிராமப்பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக விழுப்புரம் நகரத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் குடியேறியுள்ளது தான்.
விழுப்புரம் நகரத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளதால் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் தங்களது மகள்களை படிக்க வைக்க பஸ் மூலமாகவோ அல்லது சைக்கிள் மூலமாகவோ அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அவர்களின் மகள்கள் பள்ளிக்கு செல்கிறார்களா என்று தொடர்ந்து கண்காணிப்பது கிடையாது.
இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில மாணவிகள் பள்ளிக் கூடத்திற்கே செல்லாமல் விழுப்புரம் நகரங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகளிலும் உதாரணத்திற்கு மக்கள் நடமாட்டம் இன்றி போக்குவரத்து இன்றி சாலைகளான பானாம்பட்டு, காகுப்பம், பொய்யப்பாக்கம் மற்றும் விழுப்புரம் நகராட்சி பூங்கா போன்ற இடங்களில் பள்ளி சீருடையிலேயே மாணவிகள் சுற்றித் திரிவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
அதேபோல் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவிகளில் ஒரு சிலர் டியூசனுக்கு செல்வதாக கூறி டியூசனுக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.
இன்றைக்கு ஒரு சில மாணவிகளிடத்தில் செல் போன்கள் உள்ளது. செல்போன் இல்லாத மாணவிகளை பார்ப்பதே அரிதாக உள்ளது.அந்த செல்போன்களை அவர்களது பெற்றோர்கள் தான் வாங்கிக் கொடுத்தார்களா அல்லது வேறு யாராவது வாங்கி கொடுத்தார்களா என்பது தெரியவில்லை.
இப்படி பள்ளிக்கு, டியூசனுக்கு செல்லாமல் சுற்றித்திரியும் மாணவிகள் தங்களது வாழ்க்கையை பற்றி எண்ணிப் பார்க்காமலும் பெற்றோர்களை பற்றி சிறிதும் கவலைப்படாமலும் எல்லையை மீறி உலா வருகின்றனர்.
இதற்கு சாட்சியாக மேற்சொன்ன இடங்களில் மாணவிகளின் அந்த அத்துமீறிய காட்சிகளை காணலாம். ஆதலால் பெற்றோர்கள் தங்களது மகள்கள் தினமும் பள்ளிக்கு செல்கிறார்களா, டியூசனுக்கு செல்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டியது மிக முக்கியமாகும்.
ஒரு சில மாணவிகளின் பாதை மாற்றத்தினால் மற்ற மாணவிகளும் பாதை மாற நேரிடும். ஆதலால் ஒவ்வொரு பெற்றோரும் உஷாராக இருந்து தங்களின் மகள்களுக்கு நல்லதொரு அறிவுரையை கூறி அவர்களின் வாழ்க்கையை நெறிமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஒரு சில மாணவிகளின் நீண்ட நாள் கண்காணிப்புக்கு பின்னர் தான் இதை சுட்டிக்காட்டு கிறோம்).
மிஸ்டு கால் விளையாட்டு!
3 பெண் குழந்தைகளுடன் மாயமான பெண் எங்கே?
செல்போனில் `மிஸ்டுகால்' கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார்
சேலம், ஜுலை.24- 2009. செய்தி - தினத்தந்தி
3 குழந்தைகளுடன் காணாமல்போன பெண், செல்போனில் மிஸ்டுகால் கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார். அவரது தாய்மாமனிடம் விசாரிக்க போலீசார்
முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணப்பா `லே' அவுட் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தையல் தொழிலாளி. இவரது மனைவி உமா(வயது30). இந்த தம்பதிகளுக்கு ரம்யா(12), சூர்யா(12), தீபிகா(5) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ரம்யாவும், சூர்யாவும் இரட்டையர்கள்.
கடந்த 11-ந் தேதி தனது குழந்தைகளான ரம்யா, சூர்யா ஆகியோரை சேலம் அடுத்துள்ள அயோத்தியாபட்டணத்தில் உள்ள தனியார் கிறிஸ்டியன் பள்ளியில் 8-ம் வகுப்பு சேர்த்து விட்டு அங்கேயே விடுதியில் விடுவதற்காக உமா பஸ்சில் சேலம் வந்தார். உடன் இளைய மகள் தீபிகாவையும் அழைத்து வந்தார்.
சேலம் 5 ரோட்டில் பஸ்சில் வந்து இறங்கியதும், தனது கணவர் சுப்பிரமணியனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நல்லபடியாக பஸ்சில் வந்து சேர்ந்து விட்டோம். இனி நான் பள்ளியிலும், விடுதியிலும் ரம்யா, சூர்யா ஆகியோரை சேர்த்து
விட்டு தீபிகாவுடன் ஊருக்கு புறப்பட்டு வந்து விடுவேன் என உமா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி, உமா ஊர் திரும்பவில்லை. 2 குழந்தைகளை பள்ளியிலும் சேர்த்து விடவில்லை.
மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மாயமானது குறித்து சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் கணவர் சுப்பிரமணியன் புகார் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடிவந்தார்.
`மிஸ்டுகால்' விட்ட உமா
மாயமான உமா, மகள்கள் ரம்யா, சூர்யா, தீபிகா ஆகியோரை தேடி நாமக்கல், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு போலீசார் சென்று தேடுதல்வேட்டை நடத்தினார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் உமா, தனது கணவர் சுப்பிரமணியனின் செல்போனுக்கு,தன்னுடைய செல்போனில் இருந்து `மிஸ்டுகால்' விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அதே எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது நீண்ட `ரிங்' சென்றதே தவிர, அதை எடுத்து உமா பேச தயாராக வில்லை. மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள போலீசார் முயற்சித்தபோது செல்போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
ஏற்கனவே, சுப்பிரமணியன் கொடுத்த புகாரில், கிருஷ்ணகிரியை சேர்ந்த உமாவின் தாய்மாமன் சிவா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று போலீசார் கிருஷ்ணகிரி சென்று, தாய்மாமனிடம் விசாரிக்க திட்டமிட்டு
இருப்பதாக இன்ஸ்பெக்டர் துரை தெரிவித்தார்.
குறிச்சொற்கள் victims, ஆண்பாவம், கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, கொலைகாரி lust, சமூகம்
வாழைப்பழத்தில் விஷம் கலந்து கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்
”பெண்கள் எவ்வித வன்முறையிலும் ஈடுபட மாட்டார்கள். வன்முறை என்றால் அதை ஆண்தான் செய்வான். அதனால் குடும்ப வன்முறை வழக்குகளில் ஆண்கள்தான் குற்றவாளிகள். கணவனுக்கு எதிராக மனைவி தொடுக்கும் புகார் ஒன்றே போதும், வேறு சாட்சியங்கள் தேவையில்லை.” - இதுதான் இந்திய சட்டங்களின் மற்றும் அளிக்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படைக் கருத்தாக்கம்.
இந்தச் செய்தியை வாசித்து விட்டு அனைத்து பெண்களும் எவ்வளவு மென்மையானவர்கள்; அன்பே உருவானவர்கள், அவர்கள் எவ்வித வன்முறையையும் செய்யவே முனைய மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்:-
-----------------
பத்தனம்திட்டை,ஜுன்.24- 2009 . செய்தி - தினத்தந்தி
பச்சிளம் குழந்தைக்கு வாழைப்பழத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாயை, போலீசார் கைது செய்தனர்.
தாய்மையின் பெருமையை பறைசாற்றுவதற்காக `பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்று சொல்வது உண்டு. ஆனால் ஈன்றெடுத்த பிள்ளைகளையும் சுமையாக நினைக்கும் தாய்மார்கள் இருக்கத்தான் செய்வார்கள் போலும்.
அன்னையின் அரவணைப்பு இருக்க, எந்தவித அச்சமுமின்றி துள்ளி விளையாடிய ஒரு பச்சிளம் குழந்தைக்கு, பெற்ற தாயே விஷம் வைத்து கொன்ற சம்பவம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
பத்தனம்திட்டை மாவட்டம் பீருமேடு அருகே உள்ள ராஜமுடி காலனியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவருடைய மனைவி பாக்கியம் (வயது34). கணவன்-மனைவி இருவரும் கூலிவேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தன.
4-வதாக பிறந்த கார்த்திகா என்ற பெண் குழந்தைக்கு தற்போது 11/2 வயது ஆகிறது. படுசுட்டியான இந்தக்குழந்தை, நேற்று முன் தினம் இரவு தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அதன் வாயில் இருந்து திடீரென நுரை- நுரையாக வெளிவந்தது.
இதனால் பாக்கியம் கூச்சலிட்டு, பக்கத்து வீட்டுக் காரர்களை உதவிக்கு அழைத்தார். பின்னர் அவர்களின் துணையுடன் தனது குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அது இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் பீருமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பாக்கியம் தான் தனது குழந்தைக்கு பழத்தில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, நாடக மாடியது தெரியவந்தது.
இதையடுத்து பாக்கியத்தை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப வறுமை மற்றும் பெண் குழந்தை என்ற காரண த்தால் இந்த கொலைக்கு துணிந்ததாகவும், நாயை கொல்வதற்காக பக்கத்து வீட்டில் இருந்து வாங்கி வைத்திருந்த விஷ மருந்தை வாழைப்பழத்தில் கலந்து குழந்தைக்கு கொடுத்து கொன்றதாகவும், பாக்கியம் போலீசில் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது.
சாமியார் மோகம், தந்தையின் சோகம்
திருமணமான ஒரு சில நாட்களிலே கட்டிய கணவனை அம்போ என்று விட்டுவிட்டு ஏதோ ஒரு சாமியாரோடு சல்லாபம் செய்வதில் ஷோக்கு கண்டு ஓடிப்போகும் பல இளம் மனைவிகள் உள்ளனர். பிறகு அந்த சாமியாரின் போதனை மற்றும் செட்அப் படி நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டு, அந்த அப்பாவிக் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் மேல் 498A பொய் வழக்குப் போடும் அவலமும் நாள் தோறும் நடந்தேறுகிறது.
ஆகையால் திருமணத்தை நிச்சயம் செய்வதற்கு முன்னால் மணப்பெண் மற்றும் அவளுடைய குடும்பத்தினருக்கு ஏதேனும் சாமியார் பைத்தியம் உள்ளதா என்று விசாரியுங்கள். அவ்வாறு இருப்பதாக ஒரு இம்மியளவு ஐயம் தோன்றினாலும் எடுங்கள் ஓட்டம், அந்தப் பெண்ணை விட்டு! இல்லாவிடில் உங்கள் கதை கந்தல்தான்!
இனிவரும் செய்தியில் ஒரு பேஜாரான தந்தையின் குமுறலைக் காணுங்கள். பெண் மேஜராம், அதனால் அவள் இஷ்டப்படி ஒரு சாமியோடு சுற்றுவாளாம். அவளுடைய அப்பனுக்கு அதைக் கேட்க எந்த உரிமையும் கிடையாதாம். இதுதான் சட்டமாம். அவள் என்ன சுயம்புவாக மேஜர் நிலையில் உண்டானாளா? அவளை வளர்த்து ஆளாக்கி அவள் தன் வாழ்க்கையை செவ்வனே அமைத்துக் கொள்ளவேண்டும் என்று பாடுபடும் தந்தைக்கு அவளைத் தட்டிக் கேட்க எந்த உரிமையும் கிடையாதாம்.
இந்தக் காலப் பெண்கள் பலர் பெற்ற அப்பனுக்கும் பெப்பே, கட்டின புருஷனுக்கும் பெப்பே என்கிறார்கள்!
இனி செய்தி:-
-----------------
பழநி-கொடைக்கானல் ரோட்டில் பாபா ஆசிரமம் வைத்துள்ளவர் அசோக்ஜி(46); திருமணமானவர். கொடைக்கானலைச் சேர்ந்த செல்வம் மகள் சுதாவை கடத்தியதாக இவர் மீது வழக்குள்ளது. நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார்.எஸ்.பி.,யிடம் புகார்: மேஜரான நான் ஆசிரமத்தில் எனது விருப்பப்படி உள்ளேன். அங்கு வரும் எனது தந்தை செல்வம் என்னை மிரட்டுகிறார். உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என சுதா, மாவட்ட எஸ்.பி., பாரியிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரிக்க டி.எஸ்.பி., விஜயரகுநாதனுக்கு எஸ்.பி., உத்தரவிட்டார். இதன்படி சுதா, அவரது தந்தையிடம் டி.எஸ்.பி., விசாரணை நடத்தினார்.
சுதா கூறுகையில், "நான் ஆசிரமத்தில் தான் இருப்பேன். எனது தந்தை மிரட்டுவதற்கு ஆதாரம் தருமாறு டி.எஸ்.பி., கேட்டார். ஆதாரங்களுடன் அவரை சந்திப்பேன்' என்றார்.
செல்வம் கூறுகையில், "எனது மகளை அசோக்ஜி ஏமாற்றி ஆசிரமத்தில் வைத்துள்ளார். கல்லூரி செல்ல வேண்டிய அவரது வாழ்க்கையை சீரழித்து விட்டார். மேஜராகவே இருந்தாலும் திருமணமாகாத ஒரு பெண்ணை ஆசிரமத்தில் வைப்பது எப்படி நியாயம். எனது மகளை ஏதாவது காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் மனு செய்ய உள்ளேன்' என்றார் கண்ணீருடன்.
டி.எஸ்.பி., கூறுகையில், "தன்னை தந்தை மிரட்டவில்லை என சுதா எழுதித் தந்துள்ளார். புகாரை திரும்ப பெற்று கொண்டார். மேஜர் என்பதால் அவர் ஆசிரமத்தில் இருப்பதை நாங்கள் தடுக்க முடியாது. அவரது தந்தை செல்வத்திற்கும் ஆலோசனை தந்துள்ளோம்' என்றார்.
குறிச்சொற்கள் 498a, harassment, husbands, lust, misuse, ஆண்பாவம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, வெறி
பாவம் இந்தப் பெண்
நம் பாரம்பரிய மரபுகள் மீதும், நன்னடத்தை, பெற்றோர் மீது மதிப்பு போன்ற சிறப்பியல்புகள் மீதும் தற்காலப் பெண்களை நம்பிக்கை இழக்க வைத்து, மனம் போன போக்கில் வாழ்வதுதான் பெண்கள் முன்னேற்றம் என்று பெண்ணியவாதிகளும் ஊடகங்களும் ஓயாமல் செய்யும் மூளைச் சலவையால் நிகழ்ந்துள்ள அவலங்கள் ஏராளம். பாதிக்கப்பட்ட பெண்கள் அநேகம்.
இந்தச் செய்தியை வாசியுங்கள்:-
பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்கள். சென்னை விமான பணிப்பெண் கொலையில் மர்மம் நீடிக்கிறது. காதலன்-தோழிகளிடம் விசாரிக்க முடிவு
சென்னை, மே.26- 2009. செய்தி - தினத்தந்தி
சென்னையில் நடந்த விமான பணிப்பெண் கொலை வழக்கில் கொலையாளி யார்? என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவரது காதலன் மற்றும் தோழிகளிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை ஜெ.ஜெ.நகர் கோல்டன் ஜார்ஜ் நகரில் வசித்த விமான பணிப்பெண் நிதின்குமாரி பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தார். அழுகிய நிலையில் இருந்த அவரது பிணம் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. நிதின்குமாரி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? கொலையாளி யார்? என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியாத மர்மமாக உள்ளது.
இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க தனி போலீஸ் படை அமைத்து கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் பாண்டியன், உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு மற்றும் இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் தனி போலீஸ் படையினர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
இந்த வழக்கில் விடை தெரியாமல் இருக்கும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
விமான பணிப்பெண் நிதின்குமாரி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதியாக நம்பும் வகையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. நிதின்குமாரியின் பிணம் தலைகுப்புற கட்டிலுக்கும், சுவருக்கும் இடையே கிடந்துள்ளது. பிணத்தை மறைக்கும் வகையில் 2 சூட்கேஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.
நிதின்குமாரி தற்கொலை செய்திருந்தால் அவரது பிணம் கட்டிலுக்கும், சுவருக்கும் இடையே கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பிணத்தை சூட்கேஸ்களை வைத்து மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
எனவே, பிணம் கிடந்த நிலையை வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று னிகிக்கமுடிகிறது. அவரை கொலை செய்து பிணத்தை கட்டிலுக்கு அடியில் போட்டு சூட்கேஸ் பெட்டிகளால் கொலையாளி மறைத்துள்ளான். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது பிரேத பரிசோதனையில் தான் தெரிய வரும்.
பிரேத பரிசோதனையை டாக்டர் அன்புசெல்வம் நடத்தியுள்ளார். விமான பணிப் பெண்ணின் உடலில் பெரிய அளவில் காயங்கள் இல்லை. அவரது கழுத்து எழும்பும் முறியவில்லை. எனவே கழுத்தை நெறித்தோ, கொடூரமாக தாக்கியோ அவரை கொன்றதற்கான தடயங்கள் பிரேத பரிசோதனையில் கிடைக்கவில்லை.
நிதின்குமாரி இறந்து 76 மணி நேரம் கழித்துத்தான் பிணம் எடுக்கப்பட்டுள்ளது. பிணம் மிகவும் அழுகிவிட்டதால் மேலோட்டமாக உடலில் இருந்த தடயங்கள் மூலம் அவரது இறப்பு எப்படி நடந்தது என்று டாக்டரால் உறுதி செய்ய முடியவில்லை. நிதின்குமாரியின் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் உறுதியான முடிவுக்கு வரமுடியும். தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
கொலையாளி யாராக இருக்கலாம் என்று விசாரிக்கும்போது ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளது. நிதின்குமாரியின் தனிப்பட்ட லேப்-டாப் கம்ப்னிட்டர் கருவி, அவரது 2 செல்போன்கள் போன்றவற்றை தீவிரமாக ஆய்வு செய்துள்ளோம். லேப்-டாப்பில் உள்ள படங்களில் நிதின்குமாரி குறிப்பிட்ட ஆண் ஒருவரோடு நெருக்கமாக உள்ள படங்கள் உள்ளன.
அந்த ஆண் யார்? என்று விசாரித்தபோது அவர் நிதின்குமாரியின் காதலர் என்று தெரிய வந்துள்ளது. காதலர் பெயர் ராஜாத்சிங் என்று தெரிய வந்துள்ளது. அவரும் நிதின்குமாரியின் சொந்த ஊரான பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ராஜாத்சிங் மும்பையில் `லிபர்ட்டி ஆயில் மில்' என்ற பெயரில் மிகப்பெரிய ஆயில் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் பெரும் பணக்காரர் என்றும் தெரிய வந்துள்ளது. விமானத்தில் செல்லும்போது நிதின்குமாரியோடு பழக்கம் ஏற்பட்டு இருவரும் உயிருக்கு உயிராக காதலித்துள்ளனர்.
ராஜாத்சிங் கடந்த 10 மாதத்துக்கு முன்பு சென்னை வந்து நிதின்குமாரியோடு ஒரு வாரம் தங்கியிருந்து சென்றுள்ளார். ராஜாத்சிங்கை காதலிப்பதற்கு நிதின்குமாரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மும்பையில் இருக்கும் ராஜாத்சிங்கை சென்னை வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல, நிதின்குமாரியோடு ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் அவரது தோழிகளையும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.
நிதின்குமாரி வசித்த வாடகை வீட்டின் உரிமையாளர் பாஸ்கர் ராவையும் தீவிரமாக விசாரித்துள்ளோம். அவர் தனது வீட்டுக்கு கீழே மருந்து குடோன் வைத்துள்ளார். அங்கு நிறையபேர் பணிபுரிகிறார்கள். அவர்களிடமும் விசாரணை நடந்துள்ளது.
நிதின்குமாரி பயந்த சுபாவம் உள்ளவர். `எனக்கு தனியாக படுக்க பயமாக உள்ளது என்றும், நள்ளிரவில் யாரோ கதவை தட்டுகிறார்கள்' என்றும் வீட்டுக்காரர் பாஸ்கர் ராவிடம் நிதின்குமாரி கூறியுள்ளார்.
பல நாள் இரவில் பாஸ்கர் ராவ் வீட்டிலும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவரது வீட்டிலும் நிதின்குமாரி தூங்கியுள்ளார். அந்த பகுதியில் உள்ள சந்தேக நபர்கள் நிறையபேரை பிடித்து விசாரித்துவிட்டோம். நிதின்குமாரி பெரும்பாலும் பகலில் வீட்டில் இருப்பதில்லை. இரவில்தான் வீட்டுக்கு வருவார். வெளியிலும் அதிகமாக நடமாடமாட்டார். பெரும்பாலும் சாப்பாட்டை ஓட்டலிலேயே முடித்துவிடுவாராம். வீட்டில் நூடுல்ஸ் மட்டுமே சமைத்து சாப்பிடுவார் என்று சொல்லப்படுகிறது.
நிதின்குமாரியின் உடல் உறுப்புகளை ஆராய்ந்தபோது அவர் ஆண்களோடு செக்ஸ் உறவு வைத்ததற்கான தடயங்கள் உள்ளன. ஆனால் அவர் பலாத்காரமாக கற்பழிக்கப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் உடலில் இல்லை.
அவரது கர்ப்ப பையும் ஆராயப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் பெரும் பணக்காரர்கள் அவருக்கு அறிமுகமானவர்களாக இருக்கலாம். அந்த வகையில் யாருடனாவது நிதின்குமாரிக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி அவரது தோழிகளிடம் விசாரிக்க உள்ளோம்.
நிதின்குமாரி புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர். அவ்வப்போது மதுவும் அருந்துவார் என்று சொல்லப்படுகிறது. தவறான பழக்கவழக்கங்களால் அவருக்கு தவறான நபர்களோடு தொடர்பு இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் நிதின்குமாரி மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
நிதின்குமாரியின் தந்தை விஜயபிரசாத், தாயார் உஷா, தங்கை நிஸ்தா மற்றும் உறவினர்கள் சிலர் பீகாரிலிருந்து நேற்று சென்னை வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நிதின்குமாரி, ராஜாத்சிங்கை காதலித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
நிதின்குமாரியின் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். நேற்று மாலையில் பிணம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் நிதின்குமாரியின் பிணம் தகனம் செய்யப்பட்டது.
எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிதின்குமாரியின் பெற்றோர் தங்கியுள்ளனர். நிதின்குமாரியின் தந்தை சொந்த ஊரில் சிறிய கடை நடத்தி வருவதாகவும், பெரிய அளவில் வசதி படைத்தவர் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. நிதின்குமாரி பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். அழகாக இருந்ததால் அவருக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிப்பெண் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலை தற்காலிக வேலை என்றும் தெரிய வந்துள்ளது
தவறான கருத்தாக்கம்
அனைத்துப் பெண்களுமே மெனமையானவர்கள், வன்முறையே செய்யமாட்டார்கள் என்றும், அனைத்து ஆண்களும் கிரிமினல்கள், வன்முறையாளர்கள் என்னும் நேர்கோட்டு அனுமானத்தில் குடும்பச் சட்டங்கள் இயற்றப்பட்டு, நீதிபதிகளும் இத்தகைய தவாறான கருத்தியலின் அடிப்படையிலேயே தீர்ப்புகளை வழங்குகிறார்கள். இரு பாலரிடையே பாகுபடுத்தி ஒரு தலைச் சார்பு மனப்பான்மையில் இவை செயல்படுவதால் தற்போது குடும்ப வாழ்வு முறையே ஒட்டு மொத்தமாக அழிந்து போகும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தச் செய்தியை வாசியுங்கள்:-
”கடனை திருப்பிக் கேட்ட பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்ற பெண் கைது மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் சொந்த மகளையும் கொன்ற வெறிச்செயல் அம்பலம்”
கொல்லம், மே.5- 2009. செய்தி: தினத்தந்தி
கடனை திரும்பிக் கேட்ட பெண்ணின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த பக்கத்துவீட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.
மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவர் தனது சொந்த மகளையும் கொலை செய்திருந்த சம்பவம் விசாரணையில் அம்பலமானது.
கொல்லம் குழியம் செருமூடு பகுதியைச் சேர்ந்தவர் சிவன் குட்டி. இவருடைய மனைவி பிந்து (வயது35). இவரும் இதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா என்பவரின் மகள் அனுபமா (9) என்பவரும் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அவர்களின் பிணங்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், கொலை செய்யப் பட்ட சிறுமி அனுபமாவின் தாய் ஸ்ரீஜா (33) தான் 2 கொலைகளையும் செய்து உள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
பிந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் ஸ்ரீஜா ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடன் தொகையை பலமுறை திருப்பிக்கேட்டும் ஸ்ரீஜா கொடுக்க வில்லையாம். சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீஜா, பிந்துவின் கழுத்தில் சுரிதார் ஷால் மூலம் இறுக்கினார். அப்போது அவர் பலத்த சத்தம் போடவே, ஸ்ரீஜா அங்கிருந்த கத்தியை எடுத்து பிந்துவை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதையடுத்து ஸ்ரீஜா, ரத்தக்கரையை கழுவுவதற்காக அங்கிருந்த குளத்திற்கு சென்றார். இந்த நேரத்தில் அவரது மகள் அனுபமாவும் தனது தாயை பார்த்து அவருடன் சென்றாள். இதற்கிடையில் பிந்து கொலை செய்யப்பட்ட செய்தி பரவி ஊர் மக்கள் பெருந்திரளமாக ஓடி வந்தனர். அவர்களின் பார்வையில் சிக்காமல் இருக்க ஸ்ரீஜா அந்தக்குளத்தின் மதில் சுவரின் பின்னால் ஒளிந்தார். அப்போது அனுபமா தனது தாயிடம் சத்தமாக பேசினார். அவளது சத்தம்கேட்டு பொதுமக்கள் தன்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்த ஸ்ரீஜா தனது மகளை அந்தக்குளத்தில் தள்ளினார். இதில் அந்தச்சிறுமி நீரில் மூழ்கி இறந்தார். இதையடுத்து ஸ்ரீஜா அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீஜாவை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிச்சொற்கள் child custody, ஆண்பாவம், குடும்பம், கொலைகாரி, சட்டம், சமூகம், பொய் வழக்கு
ஒண்ணுந்தெரியாத பாப்பா உல்லாசமா இருந்தாளாம்!
திருமணம் செய்வதாக கூறி உல்லாசம்: காதலன் மீது போலீசில் இளம்பெண் புகார்
திருப்பதி, ஏப்.29- 2009 தினத்தந்தி
திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து தற்போது தலைமறைவான, காதலன் மீது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சொசைட்டி காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் சித்ரா (வயது 15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரய்யா என்பவரது மகன் சுரேஷ் (19) என்பவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர்.
காதலிக்கும்போது சுரேஷ், சித்ராவிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் சித்ரா கர்ப்பமானார். (அதாவது, சுரேஷ் மட்டும் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த “உல்லாசத்தில்” சித்ரா பங்கு பெறவில்லை, அப்படித்தானே? பிறகு எப்படி சித்ரா கர்ப்பமானார்!)
இதனால் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி, சுரேஷை, சித்ரா வற்புறுத்தி வந்தார். அதற்கு சுரேஷ், "நீ 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்ததும் திருமணம் செய்து கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சித்ராவுக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிந்தது. அதைத் தொடர்ந்து சுரேஷை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்பதற்காக, அவரது வீட்டிற்கு சித்ரா சென்றார். ஆனால் அவரை காணவில்லை. இதற்கிடையில் அவருக்கு நேற்று மதனப்பள்ளி அரசு
ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் இதுகுறித்து சித்ரா நேற்று மதனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், "நானும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்து விட்டார். (கற்பழிப்பு என்றால் என்ன ஐயா!)
இந்த நிலையில் சுரேஷை ஒரு வாரமாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து மதனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனர்.
குறிச்சொற்கள் harassment, lust, victims, ஆண்பாவம், கள்ளக்காதல், சமூகம், செக்ஸ், நீதி, பொய் வழக்கு, வெறி
பெண்ணியத்தின் முழு வெற்றி
”பெற்றோருக்காக தாய்மாமனை கைபிடித்தார்; காதலுக்காக காதலனிடம் கழுத்தை நீட்டினார்”
சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்த புரட்சிப் பெண் 2 தாலிகளையும் கையில் ஏந்தியபடி யாருடன் வாழ்வது என்று தவிப்பு!
சென்னை, ஏப்.7- 2009. செய்தி: தினத்தந்தி
சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்து இளம் பெண் ஒருவர் புரட்சி செய்துள்ளார். இப்போது 2 கணவர்கள் கட்டிய தாலிகளையும் கையில் ஏந்தியபடி யாருடன் வாழ்வது என்று தவித்தபடி உள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கீதா (வயது 26). இவரது தந்தை அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். சைதாப்பேட்டையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் ஒருவரோடு கீதாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தார்கள்.
இந்த நிலையில், பட்டாளத்தில் வசிக்கும் தாய்மாமனுக்கு கீதாவை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். தாய்மாமனை மணக்க கீதா சம்மதிக்கவில்லை. உடனே கீதாவின் தந்தை திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தூக்கில் தொங்கி உயிரைவிடுவேன் என்று பயமுறுத்தினார். இதனால் காதலை மறைத்துவிட்டு, தாய்மாமனை மணக்க கீதா சம்மதித்தார்.
கடந்த மாதம் 29-ந் தேதி அன்று கீதாவுக்கு தாய்மாமன் தாலி கட்டினார். திருமணம் முடிந்தவுடன் பட்டாளத்தில் வசிக்கும் தாய்மாமனோடு கீதா 5 நாட்கள் இல்லற வாழ்க்கை நடத்தினார். பின்னர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற கீதா திடீரென்று காணாமல் போய்விட்டார். தியாகராயநகருக்கு ஷாப்பிங் போய்விட்டு வருவதாக சென்ற அவர் மாயமாகிவிட்டார்.
இதுபற்றி கீதாவின் தாய்மாமன் ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார். ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கீதாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்று அசோக்நகர் போலீசில் புகார் கொடுத்தனர். அசோக்நகர் போலீசாரும் கீதாவை தேடினார்கள்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் கழுத்தில் மாலையுடன் தனது காதலனோடு கீதா திடீரென்று அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். தாய்மாமனை பிடிக்கவில்லை என்றும், எனவே அவர் கட்டிய 5 பவுன் தாலி சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு, காதலனோடு சென்றுவிட்டதாகவும், காஞ்சீபுரத்தில் கோவிலில் வைத்து காதலனோடு திருமணம் நடந்ததாகவும் கீதா போலீசாரிடம் திடுக்கிடும் தகவல்களை கூறினார். அவரது கழுத்தில் காதலன் கட்டிய மஞ்சள் கயிறு தாலியாக தொங்கியது.
இந்த தகவல் தெரிந்து கீதாவின் பெற்றோரும், முதல் கணவரான தாய்மாமனும் அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். தாய்மாமனிடம் அவர் கட்டிய 5 பவுன் தங்க தாலியை கீதா கொடுத்தார். `என்னை மன்னித்துவிடுங்கள், உள்ளத்தை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் கொடுக்க எனக்கு மனசு வரவில்லை. காதலனோடு வாழ அனுமதி கொடுங்கள்' என்று தாய்மாமனிடம் கீதா கெஞ்சினார்.
ஆனால், கீதாவை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்கமாட்டேன் என்று தாய்மாமன் பிடிவாதமாக கூறினார். திருமணம் என்பது ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஒருமுறை தான் வரவேண்டும். சட்டையை மாற்றுவதுபோல மனைவிகளை மாற்றும் பண்பாட்டில் நான் பிறக்கவில்லை. கீதாவோடு வாழ்வேன் அல்லது கடைசிவரை அவள் நினைவாகவே வாழ்க்கையை கழிப்பேன் என்று தாய்மாமன் கூறிவிட்டார்.
இந்த நிலையில், கீதாவின் காதலனும் கீதாவை விட்டு கொடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார். இந்த விசித்திர வழக்கை அசோக்நகர் உதவி கமிஷனர் சேது, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகாந்தா ஆகியோர் விசாரித்தார்கள். முதலில் தாலி கட்டிய தாய்மாமனுடன் அனுப்புவதா? அல்லது 2-வதாக கைபிடித்த காதலனோடு கீதாவை அனுப்பி வைப்பதா? என்பது புரியாமல் போலீசார் குழப்பம் அடைந்தனர்.
இந்த நிலையில், போலீசாரை மேலும் குழப்பும் வகையில் புதிய விவகாரம் ஒன்று வந்தது. கீதாவின் காதலனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணை அவரது பெற்றோர் நிச்சயம் செய்திருந்தனர். நிச்சயம் செய்த பெண் வீட்டாரும் தகவல் தெரிந்து அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்கள். அவர்கள் கீதாவின் காதலனுக்கு உரிமை கொண்டாடினார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தமாட்டோம் என்று அவர்களும் பிடிவாதம் பிடித்தனர்.
புதிய விவகாரம் போலீசாருக்கு மேலும் தலைவலியை கொடுத்தது. இந்த புதிய புயல் கீதாவை நிலைகுலைய வைத்தது. ஒருபக்கம் தாய்மாமன், இன்னொரு பக்கம் காதல் கணவன், காதல் கணவனுக்கோ நிச்சயிக்கப்பட்ட பெண் உரிமை கொண்டாடும் நிலை இப்படி முக்கோண குழப்பத்தில் கீதா திணறினார். நேற்று முன்தினம் இந்த பிரச்சினை பற்றி அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் விடிய, விடிய விசாரணை நடந்தது.
இறுதியில் போலீசார் அனைவரிடமும் கவுன்சிலிங் மூலம் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். தற்சமயம் கீதாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பது என்றும், 2 தாலிகளையும் அவரிடம் கொடுத்துவிடுவது என்றும், ஒரு வாரம் நிதானமாக யோசித்து, யாருடன் வாழ்வது என்பதை கீதா முடிவு செய்யட்டும் என்றும் போலீசார் ஒரு தீர்வை சொன்னார்கள்.
இதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர். கீதா அவரது பெற்றோரோடு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையில், கீதாவின் காதலனை தனியாக அழைத்து போலீசார் ஆலோசனை வழங்கினார்கள். நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொண்டால் அந்த பெண்ணுக்கும் வாழ்வு கிடைக்கும், கீதாவும் அவரது தாய்மாமனோடு சந்தோஷமாக வாழ்வார். எனவே, யோசித்து நல்ல முடிவை எடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்கள். காதலனும் ஒரு வாரத்தில் யோசித்து நல்ல முடிவை சொல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்ற சொல்படி கீதாவின் திருமண வாழ்க்கை எந்த கணவரோடு என்பதை விரைவில் காலம் முடிவு செய்யும் என்று போலீசார் எதிர்பார்த்தபடி உள்ளனர்.
----------------------
நிச்சயம் அந்தத் தாய்மான் மேல் வரதட்சணை கேட்டான் என்று 498A கேசு போடப்பட்டு அவர் உள்ளே தள்ளப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. பாவம் அய்யா அந்தப் பரிதாப தாய்மாமன்!
கழுத்துக்கு இரண்டு மூன்று பேரைத் திருமணம் செய்து கொண்டு தமிழகப் பெண்கள் முழு விடுதலை அடைந்து விட்டார்கள் என்று கும்மியடிப்போம்!
இது உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கப் போகிறது!
உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? மணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதா? அல்லது சமீபத்தில்தான் திருமணம் நடந்ததா? எப்படியானாலும், எந்த நிலையிலும் மண வாழ்க்கை என்பது கருத்து வேறுபாடின்றி, மன மாச்சரியங்களின்றி நடைபெறாது. முன் காலங்களில் சண்டை சச்சரவுகளை குடும்பத்திலிருந்த பெரியவர்கள் அல்லது சமூகப் பெரியவர்கள் தலையீட்டால் சுமுகமாகத் தீர்த்துக் கொண்டனர். அல்லது தம்பதிகளே, தங்கள் நிம்மதியையும், முன்னேற்றத்தையும், குழந்தைகளின் நலனையும் கருத்தில் கொண்டு நாளடைவில் அவர்களே தீர்த்துக் கொண்டனர்.
ஆனால் இப்போது? புருஷன் “இம்” என்றவுடனே ஓடு போலீஸ் ஸ்டேஷனுக்கு, அல்லது வக்கீலிடம். போடு வரதட்சணை கொடுமை கேசு! இருக்கவே இருக்கிறது 498A!
”அவனையும் அவங்க அம்மாவையும் எப்படியாவது உள்ள தள்ளணும்” என்ற வெறியோடு, வேறெந்த விளைவைப் பற்றியும் கவலைப் படாமல் வெறி கொண்டலையும் பெண்கள் கையில் இந்த 498A ஆயுதத்தைக் கொடுத்து விட்டனர். அதை வைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அவர்கள் அப்போது நினைத்துப் பாராத உண்மை என்னவென்றால், இதுபோன்ற கேசுகளால் அவர்களும் பாதிக்கப்பட்டு நீரழிந்து போகப் போகிறார்கள் எனதுதான்!
தங்களது perverse satisfaction and urge to inflict torment on the husband and in-laws மட்டும்தான் அவர்கள் கண் முன் நிற்கிறது. பிறகு வக்கீலும் போலீசாரும் தங்களை எவ்விதம் நடத்தப் போகிறார்கள், எவ்வளவு ஆண்டுகள் இப்படியே அலையப் போகிறார்கள் என்பதையெல்லாம் அந்தப் பெண்கள் சிந்திப்பதில்லை.
இதோ பாருங்கள் இந்தச் செய்தியை. குடும்பத்தில் ஏதோ தகராறு. எடுத்தாள் ஒரு காகிதத்தை, எழுதினாள் வரதட்சணை கேட்டானென்று. செய்தார்கள் கைது புருஷனை!
இது உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் சீக்கிறமே நிகழப்போகிறது.
ஜாக்கிறதை!!
----------------------------------------------------------------------
திருவள்ளூர், மார்ச். 29- 2009: திருவள்ளூர் பூங்கா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 33). ஆட்டோ டிரைவர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா (34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சொந்த ஆட்டோ வாங்குவதற்காக திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.51 ஆயிரம் பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு ஆட்டோ வாங்குவதற்கு பணம் போதவில்லை என்று கவிதா தன்னுடைய நகையை அடகு வைத்து ரூ.12 ஆயிரம் கொடுத்தார். இந்த நிலையில் ஆட்டோ வாங்குவதற்கு மேலும் பணம் தேவை என்று மனைவியிடம் பணம் கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.. இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கவிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கவிதா திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
ஆசிரியை அடித்ததில் பள்ளி மாணவி சாவு
ஜெயராகினி என்னும் ஒரு பள்ளி ஆசிரியை ஒரு மாணவியை தலையில் அடித்து சாகடித்துவிட்டு, பின் பிணத்தை தண்ணிர்த் தொட்டியில் வீசி விட்டதாக இந்த செய்தி கூறுகிறது.
இது குறித்து திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி., கலியமூர்த்தி கூறியதாவது:
ஆசிரியை ஜெயராகினியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. மாணவி விளையாடும் போது மற்றவர்களுடன் தகராறு செய்ததால், பிரம்பால் தலையில் அடித்ததாக கூறினார். அதில் ஸ்ரீரோகிணி மூர்ச்சையாகி இறந்துள்ளார். பின், வகுப்பறையிலேயே தூங்குவது போல் படுக்க வைத்து விட்டு, பள்ளி முடிந்த பின், அங்கு பணியாற்றும் அலுவலர்கள் ஆரோக்கியராஜ் மற்றும் சகாயராஜ் ஆகியோர் மூலம் மாணவியின் பிணத்தை, வேறு பள்ளிக்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டதாகவும் ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, மாணவி ஸ்ரீரோகிணியை கொலை செய்ததாக ஆசிரியை ஜெயராகினி, அவருக்கு உதவிய பள்ளி அலுவலர்கள் ஆரோக்கியராஜ், சகாயராஜ் ஆகியயோர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கலியமூர்த்தி கூறினார்.
குறிச்சொற்கள் dv act, harassment, husbands, victims, கொடுமை, கொலைகாரி lust, சமூகம், தாய்மை, நீதி
உங்கள் திருமணத்தன்றும் இதுபோல் நிகழலாம்!
மங்களூரில் திருமண மேடையில் திடீர் பரபரப்பு - திருமணத்தை புகைப்படம் எடுக்க வந்த காதலனை மணந்த மணப்பெண்.
பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை உதறிவிட்டு திருமணத்துக்கு புகைப்படம் எடுக்க வந்த காதலனுக்கே மாலையை சூட்டி கணவனாக்கிக்கொண்ட மணப் பெண்ணின் துணிச்சலான சம்பவம் மங்களூரில் நடந்துள்ளது.
மங்களூர் பண்ட்வால் பகுதியில் உள்ள மடியத்தார் என்ற இடத்தை சேர்ந்தவர் நோனையா முல்யா. இவருடைய மகள் பவ்யா (வயது 21). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 27) என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களது திருமணம் மங்களூர் பி.ஜி.ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த திருமணத்தை படம் பிடிக்கும் பொறுப்பு பிரீத்தம் குமார் என்ற போட்டோகிராபரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
நேற்று காலை திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த நண்பர்களும், உறவினர்களும் ஏராளமானவர்கள் வந்து இருந்தார்கள்.
மணமேடையில் மணப்பெண் பவ்யா, மணக்கோலத்தில் அமர்ந்து இருந்தார். திருமணத்தை படம் பிடிக்க பிரீத்தம் குமார், கேமரா கோணங்களை சரிபார்த்துக் கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் மாப்பிள்ளை மிடுக்குடன், வெங்கடேஷ் வந்து மணமேடையில் அமர்ந்தார்.
திருமணத்தை நடத்த வந்த புரோகிதர், மணமக்களிடம் மாலை மாற்றிக் கொள்ளும்படி தெரிவித்தார். இந்த காட்சியை படம் பிடிக்க பிரீத்தம் குமார், தயார் நிலையில் இருந்தார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது. மாப்பிள்ளை கழுத்தில் மாலை சூட வேண்டிய பவ்யா, அந்த மாலையை அப்படியே போட்டோகிராபர் பிரீத்தம் குமார் கழுத்தில் போட்டு விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரீத்தம் குமார், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
அவருக்கு ஏன் மணப்பெண் மாலை அணிவித்தார், போட்டோகிராபர் ஏன் தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கிறார் என்பது புரியாத புதிராக இருந்தது.
இதற்கிடையே சிலர் ஓட்டமாக ஓடி, பிரீத்தம் குமாரை பிடித்து வந்தனர். பின்னர் மணமகளிடம் இதுகுறித்து விசாரித்தனர்.
அப்போது, ஓட்டம் பிடித்த பிரீத்தம் குமாருக்கும், பவ்யாவுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது என்பதும், இருவரும் காதலர்கள் என்ற தகவலும் தெரியவந்தது.
பவ்யா வீட்டில் 8 மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை படம் பிடிக்க பிரித்தம் குமார் வந்து இருந்தார். அப்போது அவருக்கும், பவ்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரீத்தம் குமாரிடம் பவ்யா தெரிவித்தார். அதற்கு பிரீத்தம் குமாரும் ஒப்புக் கொண்டார். ஆனால் , ``இதோ...அதோ'' என்று காலம் கடத்தி வந்தார். பவ்யா கேட்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பிரீத்தம் குமார் தட்டி கழித்து வந்தார்.
காதலன் தன்னை ஏமாற்ற முயற்சிக்கிறார் என்பதை அறிந்த பவ்யா, எப்படியாவது அவரை திருமணம் செய்தே தீருவேன் என்று உறுதி எடுத்துக் கொண்டார். அதன்படி காதும் காதும் வைத்தது போல தனது திட்டத்தை தனக்குள்ளேயே ரகசியமாக வைத்துக் கொண்டார்.
இந்த சூழ்நிலையில் தான் அவருக்கும், வெங்கடேசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலையில் திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் கிடுக்கிப் பிடி போட்டு பிரீத்தம் குமாருக்கு, பவ்யா அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். மணந்தால் இவரைத்தான் மணப்பேன் என்று பவ்யா கூறினார்.
இதுகுறித்து பிரீத்தம் குமாரிடம், பவ்யாவின் உறவினர்கள் விசாரித்தார்கள். பவ்யாவை காதலிக்கவில்லை என்றும், பவ்யாவை திருமணம் செய்ய முடியாது என்றும் பிரீத்தம் குமார் மறுத்தார்.
இதுபற்றி பண்ட்வால் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்து சங்கம் மற்றும் பா.ஜனதா கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஒருவழியாக பிரீத்தம் குமார் திருமணத்துக்கு சம்மதித்தார். அதன்பின், ஏற்கனவே திருமண ஏற்பாடுகள் நடந்த ஓட்டல் அருகே உள்ள சண்டிகா பரமேஸ்வரா கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
-----------
அதெல்லாம் சரிதன் ஐயா, அந்த அப்பாவி மணமகன் வெங்கடேஷ் பட்ட அவமானத்திற்கு யார் பதில் சொல்வது? ஆண்மகன் வாழ்க்கை என்ன ஒரு விளையாட்டுப் பொருளா? என்னடாஅநியாயம்! இதைப் பற்றி கவலைப் படுவோர் யாருமில்லையே!
ஆண் உயிரும் ஒரு மனித உயிர்தான்
மதுரை: தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே வாலிபரை தற்கொலை செய்ய மனைவி தூண்டிய புகார் குறித்து பதிலளிக்கும்படி எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை பசும்பொன்நகரை சேர்ந்த வேணி தாக்கல் செய்த மனு: என் மகன் பூவைராஜா(23) மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கும் தேனி மாவட்டம் சின்னமனூர் மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி மகள் உமாமகேஸ்வரிக்கும் (31) காதல் ஏற்பட்டது.
உமாமகேஸ்வரி மதுரை கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ., படித்து வந்தார். அவர்கள் 2008 ஜூலை 21ல் திருமணம் செய்து கொண்டு சென்னை, திருப்பதி போன்ற இடங்களுக்கு சென்று வந்தனர். பிறகு உமாமகேஸ்வரி பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவரை தேடி சென்ற என் மகனை உமா மகேஸ்வரியின் தந்தை, தாய், சகோதரியின் கணவர் சிவக்குமார், மற்றும் சகோதரர் மிரட்டியுள்ளனர்.
ஜன., 8ம் தேதி உமாமகேஸ்வரியின் வீட்டிற்கு அருகில் என் மகன் விஷம் குடித்து இறந்தார். ஓடைப்பட்டி போலீசார் தற்கொலை பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை தற்கொலைசெய்ய தூண்டிதாக உமாமகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிய கோரி ஐ.ஜி., எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டது. சிவக்குமார் போலீஸ் துறையில் பணிபுரிவதால் நடவடிக்கை இல்லை.
தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரினார். மனுதாரர் சார்பில் பாபுராஜேந்திரன் ஆஜரானார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார், "இதற்கு பதிலளிக்கும்படி தேனி எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப' உத்தரவிட்டார்.