நவம்பர் 27,2009. செய்தி - தினமலர் (http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19275)
புதுடில்லி:"கணவன் என்பவன் மனைவிக்கு எப்போதும் பணம் கறக்கும் ஏ.டி.எம்., மிஷினா?' என்று ஆண்கள் உரிமை சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.கடந்த 19ம் தேதி உலக ஆண்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் டில்லியில் "இந்தியன் பேமிலி பவுன்டேஷன் (ஐ.எப்.எப்.,)' சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து ஆண்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி விட்டனர்; ஆண்கள் ஏ.டி.எம்., மிஷின்கள் அல்ல' என இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.டில்லியில் ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.எப்.எப்., நிறுவனர் பந்தி ஜெயின் குறிப் பிடுகையில், "கணவர் மீது பெண்கள் புகார் கொடுத்தால் 498ஏ பிரிவின் கீழ் ஆண்கள் தண்டிக்கப்படுகின்றனர். எந்த விசாரணையும் ஆண்களிடம் நடத்தப்படுவதில்லை. இந்த சட்டம் பெண்களுக்கு ஆதரவானது என்பதை விட மனைவிகளுக்கான சட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால், மனைவிகள் புகார் கொடுத்ததும் கணவர் மட்டுமல்லாது, கணவரது தாய், சகோதரிகளும் கைது செய்யப்படுகின்றனர். 498ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் பெரும்பாலான புகார்கள் அடிப்படையில்லாதவை. நானும் எனது மனைவியால் பாதிக்கப்பட்டவன் தான். கணிசமான தொகையை ஜீவனாம்சமாக கொடுத்து வருகிறேன்' என்றார்.
பேரணியில் கலந்து கொண்ட ராகேஷ் ஜெய்ஸ்வால் குறிப்பிடுகையில், "என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது, ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக் கிறார். ஓராண்டில் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் அவர் ஜீவனாம்சம் கேட்டு விண்ணப்பித்திருப்பது நியாயமில்லாதது' என்றார்.
கமல் கபாடியா(59) என்பவர் குறிப்பிடுகையில், "என் மருமகள் என் மகன் மீதும் மனைவி மற்றும் என் மீதும் 23 குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் கொடுத்துள்ளார். இதில் ஒன்று கூட உண்மையில்லை. ஆனால், போலீசார் 498ஏ பிரிவை பயன்படுத்தி எங்களை தொல்லை செய்கின்றனர்' என்றார்.
கணவன்கள் ஏ.டி.எம்., மிஷின்களா? மனைவிகளுக்கு எதிராக போர்க்கொடி!
குறிச்சொற்கள் 125, 498a, aimwa, anti-male, biased laws, child custody, dv act, father, feminism, harassment, sif, பொய் வழக்கு
பணம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன்: மனைவியிடம் ரூ.25 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் கணவர்
சென்னை, நவ. 22 - 2009. செய்தி: மாலைமலர்
திருச்சியை சேர்ந்தவர் கலைசெல்வன் குவைத்தில் என்ஜினீயர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு 1997-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2002-ல் கோர்ட்டில் விவாக ரத்துக்கு மனு செய்தனர். கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவுபடி குழந்தை கலைச் செல்வன் வசம் வந்தது.
விவாகரத்து வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட முறை குவைத்தில் இருந்து தமிழகம் வந்து சென்றார். இதற்கு ஏராளமான பணம் செலவானது. இடைப்பட்ட காலத்தில் அவரது வேலையும் பறிபோனது.
வருமானத்திற்கு வழியின்றி சேமிப்பு பணத்தை செலவிட்டார். இதற்கிடையே மலர்விழி கொடுத்த வர தட்சணை கொடுமை வழக்கிலும் கலைசெல்வன் சிக்கினார். இதில் 3 மாதம் வரை ஜெயிலில் இருந்தார். ஒருவழியாக வெளியே வந்த அவர் மனைவி கொடுத்த புகாரில் இருந்து வெளியே வந்தார்.
ஒரு பக்கம் குழந்தையின் செலவு, தனது வழக்கு செலவு என்று கலைசெல்வன் சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலைக்கு செல்லப்பட்டார். தனது கஷ்ட நிலைமைக்கு காரணமான முன்னாள் மனைவி மலர்விழியின் நிலைமையோ தலைகீழ் என் கிறார் கலைசெல்வன்.
மேலும் கூறியதாவது:-
நான் திருமணம் செய்து கொண்டபோது மலர்விழி வேலை இல்லாமல் இருந்தார். நான் உழைத்து சம்பாதித்து அனுப்பிய பணத்தில், வேலைக்கு செல்ல முன்னேற்பாடுகள் செய்தாள். ஏராளமான பணத்தையும் வைத்து கொண்டார். தற்போது கல்லூரி ஒன்றில் பேராசிரியராக நல்ல சம்பளத்தில் உள்ளார். நானோ குழந்தையுடன் நடுத் தெருவில் நிற்கிறேன்.
எனவே மலர்விழியிடம் இருந்து மொத்தமாக ரூ.25 லட்சம் அல்லது மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் ஜீவனாம்சம் பெற்று தரவேண்டும் என கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு செய்துள்ளேன். அது வருகிற டிசம்பர் 15-ந்தேதி விசாரணைக்கு வருகிறது என்றார்.
குறிச்சொற்கள் 125, 498a, adultery, aimwa, biased laws, child custody, feminism, manorama, கள்ளக்காதல், பொய் வழக்கு
கட்டியவனை கட்டம் கட்டிடுவாய்ங்கப்பா உஷார்!
திருமணமானவுடனேயே நம் அபலைப் பெண்கள் மனத்தில் தோன்றும் கேள்விகளைப் பாருங்கள்!
(நன்றி: ஆனந்த விகடன்)
"சமீபத்தில்தான்" திருமணம் ஆகியது. உடனேயே, கணவன் மண்டையைப் போட்டவுடன் அவனுடைய இன்ஷ்யூரன்ஸ், பேங்க் சேமிப்பு இவற்றை, விள்ளாமல் விரியாமல் தான் கல்லா கட்டுவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று ஆலோசனை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்கிறார் இந்த பெண்குல விளக்கு. குடும்ப வாழ்க்கை எப்படி நன்றாக நடத்துவது போன்ற ஆலோசனைகள் எல்லாம் அனாவசியம், இதுதானப்பா தலையாய விஷயம்! அப்படி அந்த சோப்பிளாங்கி சாகாமல் அழும்பு பண்ணினால் இருக்கவே இருக்கிறது 498A, D.v.Act போன்ற ஆயுதங்கள். போட்டுத் தள்ளிட மாட்டோமா!
தேவைதான்!
சுயம்வரம், மேட்ரிமனி என்று காசு பார்க்கும் திருமண வியாபாரக் கடைக்காரர்களே இது போன்ற ஆலோசனைகளை இனிமேல் வழங்கி ஒரு பாவமும் அறியாத அபலைப் பெண்களுக்கு சேவை செய்யத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!
குறிச்சொற்கள் 125, 498a, aimwa, anti-male, biased laws, extortion, ஆண்பாவம், காசு, பொய் வழக்கு, ஜீவனாம்சம்
பொய்ப் புகார் கொடுத்து ஆட்டிப் படைக்கும் பெண்கள் : விடுபட தேசிய ஆண்கள் ஆணையம் தேவை
சென்னை : தினமலர் - நவம்பர் 20,2009
"புகார் மேல் புகார் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டிப் படைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஆண் கள் பாதுகாப்பு சங்கம், சென்னையில் ஆர்ப்பாட் டம் நடத்தியது. நாடு முழுவதும் ஆண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தங்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சங்கத்தின் மாநில தலைவர் அருள் துமிலன் தலைமை வகித்தார். "பெண்கள் கொடுக்கும் போலியான வரதட்சணை புகார்களின் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது; வரதட்சணைக் கொடுமையில் சிக்கும் அரசு ஊழியர் களை பணி நீக்கம் செய்யக் கூடாது; கள்ளக்காதல் கொலைகளைத் தடுக்க இந்திய தண்டனைச் சட்டம் 497ல் திருத்தம் செய்து, ஆண், பெண் இருவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். புகார் மேல் புகார்களைக் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டி வைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்; இந்திய கலாசாரத் திற்கும், குடும்ப அமைப்புகளுக்கும் எதிராக 2005ல் கொண்டு வரப்பட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.
சங்கத்தின் தலைவர் அருள் துமிலன் பேசுகையில், "சமூகத்தில் ஆண்களுக்கு பெண்களால் ஏற்படும் கொடுமைகள் அதிகம். ஆண்கள் வெளியில் சொல்வதில்லை. சொன்னாலும் நிவாரணம் கிடைப்பதில்லை. பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு சங்கத் தின் மூலம் சட்ட உதவியும், பாதுகாப்பும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் சங்கம் தொடர்ந்து ஈடுபடும். தேசிய ஆண்கள் ஆணையம் அமைய வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்' என்றார்.
குறிச்சொற்கள் 125, 498a, aimwa, anti-male, biased laws, commission for men, men's day, ஆண்கள் தினம், பொய் வழக்கு
உலக ஆண்கள் நாள் தர்ணா
இன்று உலக ஆண்கள் தினம் சென்னையில் அகில இந்திய ஆண்கள் நலச் சங்கம் (AIMWA)மற்றும் ஆண்கள் உரிமை பாதுகாப்புச் சங்கம் இவற்றின் ஆதரவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோரிக்கைகளைக் கொண்ட கையேடுகள் நகரத்தில் பல இடங்களில் வினியோகிக்கப் பட்டன. பின்னர் "மெமோரியல் ஹால்" எதிரில் தர்ணா மற்றும் கோஷமிடுதலும் நடைபெற்றது. அவற்றின் முழு விவரங்கள் படங்களுடன் நாளை வெளிவரும்.
இன்று வினியோகிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கையேட்டை இங்கு காணலாம்:
அகில இந்திய ஆண்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை இதன்கீழ் காணலாம். மனைவியின் கொடுமையாலும் வன்முறையாலும் பாதிக்கப்படும் ஆண்களும் அவர்களது பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு இலவச உதவி பெறலாம்.
முக்கிய அறிவிப்பு:
இவர்கள் அனைவரும் இது போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களின் தவறான பயன்பாட்டாலும் பொய் வழக்குகளாலும் கெடுமதி கொண்ட மனைவிகளின் கைகளில் சிக்கி பாதிக்கப்பட்ட தன்னார்வலர்கள். வக்கீல்களல்ல!
குறிச்சொற்கள் 125, 498a, adultery, aimwa, anti-male, biased laws, child custody, dv act, extortion, harassment, misuse, பொய் வழக்கு, வரதட்சணை
ஆண்களுக்கென்று ஒரு நாள்!
அகில உலக ஆண்கள் தினம் (International Men's Day) நாளை (19-11-2009) அன்று கொண்டாடப்படுகிறது. இது 1999-இல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.
உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.
இவ்வாண்டுக்கான உலக ஆண்கள் தினம் (International Men's Day) 2009 நவம்பர் 19-ம் நாள் இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் இந்தியாவில் டில்லி, மும்பை, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பல நகரங்களில் தர்ணாவும் ஊர்வலமும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும் என்னும் கேள்வி இன்னும் சிலருக்கு எழுகிறது. சிறப்பான செயல்பாடுகள் அனைத்துமே பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்னும் மனப்போக்கு மக்கள் மனத்தில் ஆழப் பதிந்து நிற்கிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை அங்கீகரிக்கவே ஒரு போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!
சென்னையில் நாளை (19-11-2009) அன்று காலை அகில இந்திய ஆண்கள் நல சங்கம் - "AIMWA" (All India Men's Welfare Association) சில ஆண்கள் கல்லூரிகளுக்குச் சென்று கொள்கை விளக்கக் கையேடுகளை வினியோகம் செய்வர். பிறகு கார், மற்றும் இரு சக்கர ஊர்தியில் ஊர்வலமாகச் சென்று "ஆண்கள் பாதுகாப்பு இயக்கம்" நிகழ்த்தப் போகும் தர்ணாவில் கலந்து கொள்வர்.
இந்த தர்ணா நாளை (19-11-2009) காலை 11-00 மணி முதல் 12-00 மணி வரை சென்னை பார்க் டவுன் "மெமோரியல் ஹால்" எதிரில் நிகழ இருக்கிறது. இந்த இடம் சென்னை பொது மருத்துவ மனைக்கு எதிரிலும், இன்னொரு பக்கம் பார்க் டவுன் அஞ்சல் நிலையத்திற்கு எதிரிலும் உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் சென்று பங்கெடுத்துக் கொள்ளலாம்.
நாளை இது பற்றி ஒரு செய்திக் குறிப்பும் வெளியாகும்.
நன்றி.
குறிச்சொற்கள் 125, 498a, aimwa, biased laws, child custody, crisp, imd, men's day, misuse, ஆண்கள் தினம், ஆண்கள் நாள், பொய் வழக்கு
தேவை கள்ளக்காதல் காப்பீட்டுத் திட்டம்!
Disclaimer:
ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க தமிழக அரசு தொடங்கியிருக்கும் "கலைஞர் காப்பீட்டுத் திட்டத்"திற்கும் இந்த இடுகைக்கும் தொடர்பு இல்லை. அதைக் குறைவு படுத்தும் நோக்கில் இந்த இடுகை எழுதப்படவில்லை.
எதெதெற்கோ இன்ஷ்யூர் செய்கிறார்கள். திருமணமான ஒரு கணவன், தன் மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கிறான் என்ற காரணத்தினால் என்றைக்கு மனைவி கையால் சாகடிக்கப் போகிறானோ தெரியாது. அதனால் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் ஒரு சிறப்பு காப்பீடு தேவை. அதாவது, கள்ளக்காதல் வெறியின் மேலீட்டால் கொலை செய்யப்படும் கணவனின் குழந்தைகள், பெற்றோர், உடன்பிறப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும், மற்றும் ஜீவனாம்சம், மெயின்டெனென்ஸ், 498A, DV Act போன்ற கேசுகளிலிருந்து கணவர்களை பாதுகாக்கவும், மேலும் கள்ளக்காதலைத் தேடி மணமான பெண்கள் அலைவதன் காரணம் கணவனின் ஆண்மைத்தன்மை (இதற்கு என்ன விளக்கம் என்பதை மனோரமா அம்மையாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்) குறைவுதான் என்று கூறி ஒட்டுமொத்த ஆண்குலத்தையுமே இழிவு படுத்தும் மனோரமாவிடமிருந்து கணவர்களைக் காப்பாற்றவும், அவசியம் ஒரு "கள்ளக்காதல் காப்பீட்டுத் திட்டம்" தேவை. அப்போதுதான் எதிர்வரும் ஆண் சிசுக்கொலை நிகழ்வுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற முடியும்!
மேலும் கள்ளக்காதலன் கூட கணவன் போல் கண்ட்ரோல் செய்ய எத்தனித்தால் அவனையும் இந்தப் புதுமைப்பெண்கள் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். என்றாலும் கள்ளக் காதலனுக்கும் காப்பீடு வேண்டும் என்று கேட்பது ரொம்ப ஓவர். அதனால் கணவனுக்கு மட்டும் இப்போது கேட்போமே!
இப்போது கள்ளக்காதலினால் கணவனைக் கொலை செய்த காரிகை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பிடிபட்ட கதையைப் படியுங்கள்.
சிவகிரி, நவ.2 - 2009. தினத்தந்தி
சிவகிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலையில் துப்பு துலங்கியது.
கள்ளத்தொடர்பு
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள குலவிளக்கு நத்தக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது45), விவசாயி. இவரது மனைவி பொன்னாத்தாள். இவருக்கும், திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த மர அறுப்பு மில் அதிபர் தங்கவேல் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.
இவர்களது கள்ளத் தொடர்பு பொன்னாத்தாளின் கணவர் சண்முகத்திற்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் பொன்னாத்தாளை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
விவசாயி கொலை
இந்த நிலையில் கடந்த 12-3-2000 அன்று கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள மொஞ்சனூரில் சண்முகம் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது பிணத்தை தென்னிலை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர புலன் விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில், அவரது பெயர் முருகேசன் என்ற முகிலன் என்பதும், முத்தூரில் உள்ள தங்கவேலின் மர அறுப்பு மில்லில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் முகிலன் முத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு புகுந்து கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.
தீ வைத்து...
அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தினார்கள். அப்போது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குலவிளக்கு நாத்தக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகத்தை, தானும், சண்முகத்தின் மனைவி பொன்னாத்தாள், மாமனார் ரங்கசாமி, மகள்கள் செல்வி என்கிற அச்சுதா, வசந்தி, கள்ளக்காதலன் தங்கவேல் ஆகியோரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்து, அவரது உடலை டிராக்டரில் கொண்டு வந்து மொஞ்சனூர் பகுதியில் தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றதையும் விசாரணையில் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் முகிலனை சிவகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முகிலனை கைது செய்தனர்.
வலைவீச்சு
கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் பொன்னாத்தாள், அவரது கள்ளக் காதலன் தங்கவேல், தந்தை ரங்கசாமி, மகள்கள் செல்வி என்கிற அச்சுதா, வசந்தி ஆகிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கி இருப்பது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிச்சொற்கள் 125, 498a, adultery, anti-male, biased laws, dv act, extortion, law, lust, maintenance, manorama, கள்ளக்காதல், கொலை, மனோரமா
பிறந்த ஆண் குழந்தையை உதறி விட்டு ஓடிய தாய்!
இனிமேல் இப்படித்தான் நடக்கும். ஆண் குழந்தையைப் பெற்றால் அந்தத் தாய் படப்போகும் துயரங்களை அவர்கள் உணரத் தொடங்கி விட்டனர். இனி ஆண் சிசுக் கொலை பரவலாகும் நிலை நிச்சயம் ஏற்படப்போகிறது. அந்த ஆண் வளர்ந்து பெரியவனாகி அவன் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தபின், மருமகள் போடப்போகும் 498A வழக்குகளில் சிக்கி சிறைக்குப் போகும் அவலத்தையும், கள்ளக்காதல் கொலையையும், அதற்கு அந்த ஆணையே காரணமாக்கும் மனோரமாவின் இயக்க நடவடிக்கைகளையும் தவிர்ப்பது எப்படி என்று தாய்மார்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர்!
இப்போது செய்தியை வாசியுங்கள்:-
தூத்துக்குடி, அக்.30- 2009. செய்தி - தினத்தந்தி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தாய் உதறிவிட்டு சென்ற ஆண் குழந்தை சமூகநலத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.
ஆண் குழந்தை
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி மாலை 61/4 மணிக்கு ஒரு இளம் கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அப்போது அவர் முத்தையாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சகுந்தலா(24) என்ற முகவரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சகுந்தலாவுக்கு மறுநாள் அதிகாலை 21/4 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தாய் ஓட்டம்
இந்தநிலையில் குழந்தையை உதறிவிட்டு சகுந்தலா ஆஸ்பத்திரியில் இருந்து ஓடிவிட்டார். இதனால் தவித்து கொண்டு இருந்த குழந்தையை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தனியாக வைத்து பாதுகாத்து வந்தனர்.
இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை போட்டுவிட்டு ஓடிய தாயை தேடிவந்தனர். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை.
ஒப்படைப்பு
இதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த ஆண் குழந்தை நேற்று காலை சமூகநலத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிசங்கர் குழந்தையை சமூகநலத்துறை அலுவலர் முத்துநாயகத்திடம் ஒப்படைத்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் விசுவநாதன் உடன் இருந்தார்
குறிச்சொற்கள் 125, 498a, adultery, anti-male, biased laws, maintenance, manorama, கள்ளக்காதல், குடும்ப வன்முறை, பொய் வழக்கு
மருமகள்கள் சித்திரவதையிலிருந்து மாமியார்களைக் காக்க ஒரு சங்கம்
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 20, 2009. செய்தி: தட்ஸ்தமிழ்
ஹைதராபாத்: மருமகள்கள் சித்திரவதையிலிரு்நது தங்களைக் காத்துக் கொள்வதற்காக ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து தனிச் சங்கம் கண்டுள்ளனர்.
வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் முதலில் சிக்குவது கணவன்மார்கள்தான். அதற்கு அடுத்த டார்கெட் மாமியார்கள்.
ஆனால் வரதட்சணைக் கொடுமை சட்டத்தை பல பெண்கள் தவறாகப் பயன்படுத்தி கணவர்களையும், மாமியார்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சிறையில் தள்ளி விடுவதாக சமீப காலமாக புகார்கள் வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் சங்கம் தொடங்கப்பட்டது. மாநாடு கூட நடத்தினர்.
இந்த நிலையில் ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் அமைப்பாளர்களான பத்மஜா, உமா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமீபகாலமாக மருமகள்களால் ஏராளமான மாமியார்கள் வீடுகளில் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். பல மாமியார்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு கூட கிடைப்பதில்லை.
மருமகள்கள் பலர் மாமியாரை கடுமையாக சித்ரவதை செய்து விட்டு போலீசில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் சிக்க வைத்து வருகிறார்கள்.
இந்த கொடுமைகளுக் கெல்லாம் முடிவு கட்டத்தான் நாங்கள் மாமியார் பாதுகாப்புச்சங்கத்தை தொடங்கி உள்ளோம்.
தற்போது 30 பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். விரைவில் ஆயிரம் பேர் வரை உறுப்பினராக சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
தங்களது பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பாக மாமியார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் இந்த சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அவை - 9704683163, 9573605415
===========
விரைவிலேயே இச்சங்கத்தின் கிளை தமிழ் நாட்டிலும் துவக்கப்பட இருக்கிறது. அது பற்றிய அறிவிப்பை எதிர்பாருங்கள்!
குறிச்சொற்கள் 125, 498a, anti-male, biased laws, child custody, desertion, divorce, dv act, harassment, manorama, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு, மாமியார்
பணம் பறிப்பதெற்கென்றே ஒரு சட்டம்!
இ.பி.கோ செக்ஷன் 498A யில் கட்டமைக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்தான் அதன் பரவலான துஷ்பிரயோகத்திற்கு வழி வகுக்கின்றன:
1. சுவிட்சைப் போட்டவுடனேயே லைட் எரிவது போல் புகார் கொடுத்தவுடனேயே எந்தவித விசாரணையுமின்றி கணவரும், மாமியாரும், நாத்தனாரும் (ஆகா, ஜாலி!!) கைது செய்யப் படுவார்கள். ஆங்! மாமனாரை விட்டுட்டேனே! என்ன திமிர் புடிச்சவன்யா அந்த ஆளு. போடு உள்ளார! நாத்தனாருக்கு 3 வயசுல புள்ளை இருக்கா, அவனும் கொடுமை பண்ணினான்னு எழுது. ஜெயில்ல போயி சாகட்டும், களுதைங்க! - இதுதான் இந்த புதுமைப் பெண்குலத் திலகங்களின் மனப்பான்மை. இல்லாவிடில் 80 வயது கிழவர்கள் மீதும் 3 வயதுக் குழந்தைகள் மீதும் புகார் கொடுப்பார்களா!
2. இந்தச் சட்டம் cognizable, non-bailable and non-compoundable ஆக இருப்பதால் பழி வாங்குவது சுலபமாக இருக்கிறது
3. பொய்ப்புகார் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தாலும் புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தல்கள் இருப்பதால் பொய் வழக்கு போடுவதை ஊக்குவிப்பதற்காகவே இயற்றப்பட்டுள்ள சட்டமாக இது அமைந்திருக்கிறது. மேலும் 15 ஆண்டுகளுக்கு முன் வரதட்சனை கேட்டார்கள் என்று இன்று கூட புகார் கொடுக்கும் வகையில் இதன் நடைமுறை இருக்கிறது.
4. "வரதட்சணைக் கொடுமை" என்ற சொல்லாட்சி வந்தவுடனேயே பெண்ணியவாதிகளும் ஜொள்ளுக் கிழங்களும் சேர்ந்து "ஐயகோ! இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்களே; கணவன், மாமியார், மாமனாரை கைது செய்வது சமூகக் கட்டாயம் அல்லவா!" என்று கோஷ்டிகானமாக ஒப்பாரி வைப்பார்கள். இது இந்தச் சட்டத்தை வைத்து வியாபரம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைகிறது.
5. கெடுமதி கொண்ட பெண் பிசாசுகளும், அவர்களுக்குத் துணைபோகும் வக்கீல்களும் சேர்ந்து இந்தச் ச்ட்டத்தை கையிலெடுத்து கணவன் மற்றும் அவனுடைய ரத்த உறவுகளைக் கொடுமைப்படுத்தி மிரட்டிப் பணம் பறிக்கும் ஈனச் செயல்தான் இப்பொது நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் கஷ்டப்படும் பெண்கள் எவருக்கும் இச்சட்டத்தால் யாதொரு பயனும் இல்லை.
இதன்கீழ் காணும் செய்தியைப் பாருங்கள்:
ஒரு ஆண்டு காலமாக கணவன் வீட்டிலேயே அந்த மனைவி வசிக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் கணவன் வீட்டார் அவளைக் கொடுமை செய்தார்களாம்.
கொடுமைகள் செய்து கொலை செய்ய முயற்சித்தார்களாம். அதனால்தான் பிறந்த வீட்டிற்கு ஓடினாளாம். ஆனால் திரும்பி அங்கு சென்று வாழ முயற்சி செய்கிறாளாம். ஆனால் கணவன் உள்ளே விடவில்லையாம். எவ்வளவு முறணான புகார்கள் பாருங்கள்!
எல்லாவற்றிற்கும் மேல் காந்தியடிகளையே அவமானப்படுத்தும் வகையாக, பொய்க் கேசு போட்டு நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி உண்ணா விரதம் வேறு!
வெட்கக்கேடு!
சரி. செய்தியை படியுங்கள்.
ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொலை செய்ய முயற்சி.
கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
கண்டமனூர்,அக்.19- 2009. செய்தி - தினத்தந்தி
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 35) இவருக்கும் தெப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவருடைய மகள் உமா ராணிக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் உமா ராணி யிடம் வரதட்சணை கேட்டு கணவர் காமராஜ் அடிக்கடி சண்டைபோட்டு வந்ததாக கூறப்படுகிறது. தீ வைத்து கொலை செய்யவும் முயற்சி செய்ததாக தெரிகிறது. இதன்காரணமாக கடந்த 1 ஆண்டாக உமாராணி கணவரை பிரிந்து தெப்பம்பட்டியில் உள்ள தாய் வீட்டில் வீட்டில் வசித்து வருகிறார்.
உண்ணா விரதம்
இதனையடுத்து கடந்த மாதம் உமாராணி தன்கண வருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது கணவர் வீட்டில் உமாராணியையாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. மேலும் உமா ராணியை அவரது கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இவரது புகார் குறித்து போலீசார் முறையான விசாரணை செய்ய வில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து நேற்று காலை உமாராணி தனது கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தார்.
வழக்கு பதிவு
இது குறித்த தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உண்ணாவிரதம் இருக்க முயன்ற உமாராணியை அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இருதரப்பினரிடமும் விசாரணை செய்வதற்காக கணவர் குடும்பத்தாரை போலீசார் அழைத்தனர். ஆனால் யாரும் வரவில்லை. (இதற்குப் பெயர்தான் "கட்டப் பஞ்சாயத்து"!)
இதனைத்தொடர்ந்து கணவர் காமராஜ், மாமனார் ராஜ்(62), மாமியார் செல்லத்தாய்(58), கொளுந் தனார் சுந்தரம்(34), நாத்தனார் புனிதா(37) புனிதாவின் கணவர் ராஜாக்கனி(39) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
குறிச்சொற்கள் 125, 498a, advocates, anti-male, arrest, biased laws, பொய் வழக்கு
கள்ளக்காதல் - தீபாவளி சிறப்புச் செய்தி!
கள்ளக்காதல்களும் அவற்றின் விளைவால் நம் பெண்குலத்திலகங்கள் செயலாக்கும் கணவன் கொலை, பெற்ற குழந்தைகள் படுகொலை, பெற்றோர் கொலை, தற்கொலை போன்றவை நாள்தோறும் பொங்கிப் பெருகிவரும் வேகத்தைப் பார்த்தால் அனைத்து தினசரி நாளேடுகளும் "கள்ளக்காதல் சிறப்பு மலர்" வெளியிடவேண்டிய கட்டாயம் ஏற்படுமோ என்று தோன்றுகிறது. தவிர, கள்ளக்காதல்களைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் மக்களுக்குத் தெரிவிக்க ஏதுவாக ஒரு தனி நாளேடு மற்றும் வாரப்பத்திரிக்கை வெளிவரும் சாத்தியங்கள் உள்ளதாகத் தோன்றுகிறது. நாமும் ஒரு தனி வலைப்பதிவு தொடங்கலாம்!
இந்தக் கள்ளக்காதல் சமாசாரத்தின் வீச்சையும், தாக்கத்தையும் நன்கு அறிந்ததால்தான் ஆச்சி மனோரமா அவர்கள் இதைக் கையிலெடுத்து கணவர்களின் "ஆண்மைக் குறைவு" என்னும் கோஷத்துடன் போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்!
மேலும் தேசிய பெண்கள் வாரியமும் (National Commission for Women) கள்ளக்காதலை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதன் அவசியத்தை உணர்ந்து, அதை நாட்டின் தலையாய பிரச்னையாகக் கருதி, கள்ளக்காதல் மூலமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் (illegitimate children) சேர்த்து அந்தக் குழந்தைகளுக்கு சிறிதும் தொடர்பில்லாத கணவன்தான் படியளக்கவேண்டும்; அது அவனுடைய அடிப்படை கடமைகளில் ஒன்று என்று வரையறுத்து சட்டங்களை இயற்றும்படி அரசுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. (Link)
அதேபோல் கள்ளக்காதலைக் காரணம் காட்டி கணவன் விவாகரத்து கேட்டாலும் அவனுக்கு கிட்டுவதில்லை. ஆனால் மனைவி மட்டும் ஜீவனாம்சம், மெயின்டெனென்ஸ் என்று பல வகைகளில் பல சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் பணம் கேட்டால் உடனே அதை கணவன் கொடுத்தே தீரவேண்டும், இல்லாவிட்டால் சிறைவாசம்; பணம் கைவசம் இல்லாவிட்டால் கிட்னியை விற்றாவது கொடு என்று ஆணையிட்டு விடுவார்கள். திருமணம் என்னும் ஒன்றைச் செய்துகொண்டு விட்டால் ஆணுக்கு கடமைகளும், மனைவிக்கு உரிமைகளும் சுமார் 46 வகை சட்டப் பிரிவுகளின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா:
கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க இந்திய சட்டங்களில் இடமேயில்லை என்பது!
Women cannot be punished for adultery
இனி, ஒரு புதுவித கள்ளக் காதல் லீலையைப் பற்றிப் படியுங்கள்:-
கள்ளக்காதலால் வந்தவினை - கணவனிடமே ரூ.10 லட்சம் மோசடி
இன்ஜினியர் மனைவி- போலீஸ் ஏட்டு கைது
ஆலந்தூர், அக். 16, 2009. (தினகரன்)
கத்தார் நாட்டில் வேலை செய்யும் இன்ஜினியரின் மனைவிக்கு, போலீஸ் ஏட்டுவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால், கணவரிடமே ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளார். இதுபற்றி கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் பெண்ணும், போலீஸ் ஏட்டும் கைது செய்யப்பட்டனர்.
பரங்கிமலை கணபதி காலனியை சேர்ந்தவர் சிவஞானம் (50). கத்தார் நாட்டில் இன்ஜினியராக வேலை செய்கிறார். இவர் சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
என் மனைவி மல்லிகா (46). நான் கத்தாரில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஒரு மாதம் தங்கிவிட்டுச் செல்வேன். காரம்பாக்கத்தில் வசிக்கும் முரளிதரன் (46) என்பவரிடம் இருந்து ரூ.18 லட்சத்துக்கு ஒரு இடத்தை வாங்கலாம் என்று என் மனைவி கூறினார். அதனால் முரளிதரனிடம் ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன். அதன்பின் 2007ல் ஊருக்கு மீண்டும் வந்தேன். அப்போது, முரளிதரனை சந்தித்து இடத்தை என் பெயருக்கு பதிவு செய்து தருமாறு கேட்டேன். அதற்கு அவர் தான் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டாக இருப்பதாகவும், விரைவில் ஏற்பாடு செய்கிறேன் என்றும் சாக்குப்போக்கு கூறினார்.
போலீஸ் என்பதால் ஏமாற்ற மாட்டார் என்று நம்பி நான் மீண்டும் கத்தார் நாட்டுக்கு சென்றுவிட்டேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் ஊருக்கு வந்தேன். அப்போது என் மனைவி மல்லிகாவுக்கும் முரளிதரனுக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தியதை நேரில் பார்த்து திடுக்கிட்டேன்.
கத்தாரில் இருந்து நான் அனுப்பிய பணத்தையெல்லாம், முரளிதரனுடன் சேர்ந்து செலவழித்து உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், அந்த இடத்தை மல்லிகா பெயருக்கே அவர் கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
இப்படி எனக்கு துரோகம் செய்த மனைவி மல்லிகா, போலீஸ் ஏட்டு முரளிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் சிவஞானம் கூறியிருந்தார். அவருக்கு ஆதரவாக மல்லிகாவின் சகோதரர்களும் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி உதவி கமிஷனர் நவநீத கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கிய பிரகாசம், மணி, சப் இன்ஸ்பெக்டர் சாலினி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முரளிதரனையும் மல்லிகாவையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
குறிச்சொற்கள் 125, 498a, adultery, anti-male, biased laws, CrPC, dv act, ncw, கள்ளக்காதல், பொய் வழக்கு, மனோரமா, ராமாத்தாள்
கள்ளக்காதலில் கற்பை எதிர்பார்த்த சாமியார் கள்ளக்காதலியுடன் தீக்குளிப்பு
பழிக்கு பழி வாங்குவதற்காக உடலில் தீ வைத்து கொண்டு கள்ளக்காதலியை கட்டி பிடித்த சாமியார் இருவரும் கருகி பலியானார்கள்
சென்னை, அக். 13- 2009
சென்னை ஒட்டேரி கொசப்பேட்டை வெங்கடாத்திரி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (30). இவரது கணவர் யுவராஜ் (45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விஜயலட்சுமி, கணவர் யுவராஜ் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
பின்னர் விஜயலட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (40) என்ற சாமியாருடன் தொடர்பு வைத்திருந்தார். சங்கருடன் தாலி கட்டாத கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தார்.
விஜயலட்சுமிக்கு வேறு சில ஆண்களுடனும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை சங்கர் கண்டித்துள்ளார். ஆனால் விஜயலட்சுமியோ நான் உனக்கு பொண்டாட்டி இல்லை, கள்ளக்காதலி மட்டுமே. பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடலாம் என்று திமிராக பேசி உள்ளார்.
இப்படி அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு விஜயலட்சுமி வேறொரு கள்ளக் காதலனை பார்ப்பதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இதை சாமியார் சங்கர் எதிர்த்துள்ளார். மேலும் கண்டித்து அடித்து உதைத்துள்ளார். ஆனால் அதையும் மீறி விஜயலட்சுமி வீட்டை விட்டு புறப்படத் தயாரானார்.
திடீரென ஆவேசமான சங்கர் மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். கொளுந்து விட்டு எரிந்த தீயுடன் ஓடிச்சென்று கள்ளக் காதலி விஜயலட்சுமியை கட்டிப் பிடித்தார். இதனால் அவர் மீதும் தீ பற்றியது.
விஜயலட்சுமி உடும்பு பிடியில் சிக்கியது போல் தப்பிக்க முடியாமல் அவதிப்பட்டார். அவரது உடலிலும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இருவரும் தீயில் கருகினர்.
பலத்த காயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.
ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுல் ஸ்டேன்லியிடம் விஜயலட்சுமி மரண வாக்குமூலம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
"நான் மற்ற ஆண்களுடன் பழகுவதை தவறாக நினைத்து எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றார். (அது அந்தக் கணவனின் தவறு. கள்ளக்காதலைப் போய் தவறாக நினைக்கலாமா? அது ஒவ்வொரு மணமான பெண்ணுக்கும் உள்ள அடிப்படை உரிமை அல்லவா! அதற்காகத்தானே மனோரமா போன்றவர்கள் அயராது பாடுபடுகிறார்கள்!)
அதன் பிறகு சாமியார் சங்கருடன் குடித்தனம் நடத்தினேன். அவரும் என்னை சந்தேகித்தார். வீட்டை விட்டு வெளியே புறப்பட தயாரான போது தீக்குளித்த அவர் என்னை கட்டி பிடித்து கொண்டு என் உடலிலும் தீ பரவ காரணமானார். ஆண் நண்பர்களின் தொடர்பு என் உயிருக்கு உலை வைத்து விட்டது."
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
செய்தி: மாலைமலர், தினத்தந்தி
=======================
ஐயோ, பாவம் அந்த விஜயலட்சுமி அம்மையார். அவர் மட்டும் தொடர்ந்து உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருந்திருக்கும். மாதர் திலகம் மனோரமா அவர்கள் கள்ளக்காதலுக்கு கணவனின் ஆண்மைக் குறைவுதான் காரணம் (அதாவது அவனுடைய ஆண்குறியின் விறைப்புத் தன்மை மனைவியின் தேவைக்கேற்ப இல்லை - அதுதானே பொருள்!) என்று போராடத் துவங்கியிருக்கும் இயக்கத்தில் சேர்ந்து அவர் புகழ் பெற்றிருக்கலாம். அவருடைய கள்ளக்காதலர்களுக்கும் சேர்த்து முன்னாள் கணவனையே படியளக்க வைத்திருக்கலாம். அதற்குத்தானே தேசிய பெண்கள் வாரியம் சட்டம் இயற்றக் கோரியிருக்கிறது!
கள்ளக்காதலர்களுக்கு இனிமேல் வளமான எதிர்காலம் காத்திருக்கிறது நம் நாட்டில்!
சரி, அந்த அப்பாவி கணவர்களின் கதி? அவன்தானே அய்யா கள்ளக்காதல் செய்யும் மனைவிக்கு பணம் கொடுத்து அழவேண்டும்? அவன் ஏன் திருமணம் செய்துகொண்டான்; அனுபவிக்கட்டும்!
குறிச்சொற்கள் 125, law, lust, maintenance, manorama, ncw, paramour, ஆண்பாவம், கள்ளக்காதல், கொலை, மனோரமா, ராமாத்தாள், வெறி
பஞ்சமில்லாமல் 498A கேசுகள்!
உப்பு, புளி, கரம் மசாலா சேர்க்காமல் பிரியாணி சுவை கூடுமா! அதனால் வரதட்சணை புகார் கூடவே செக்ஸ் கொடுமை, புளூ ஃபிலிம் பார்க்க வைத்தது, அடித்தது, தற்கொலைக்குத் தூண்டியது, அடிப்பேன் என்று சொன்னது... இப்படி பலவித ஜோடனைகளைச் சேர்த்து புகார் கொடுக்கிறார்கள். அப்போதுதானே பல வித குற்றப் பிரிவு எண்களைச் சேர்க்க முடியும்!
அடுத்தது வரதட்சணை வழக்கில் கஞ்சா கேசையும் சேர்ப்பார்களோ என்று பயமாக இருக்கிறது!
இதோ அடுக்கடுக்காக 498A கேசுகள்!
(செய்தி: தினமலர் + தினத்தந்தி)
1.
திருமணம் ஆன 3 மாதத்தில் புதுப்பெண்ணிடம் வரதட்சணை-செக்ஸ் கொடுமை. கணவர்-மாமனார் கைது
ராயபுரம், அக்.11- 2009
திருமணம் ஆன 3 மாதத்தில், புதுமணப் பெண்ணிடம் செக்ஸ் மற்றும் வரதட்சணை கொடுமை செய்ததாக, அந்த பெண்ணின் கணவர், மாமனார் கைது செய்யப்பட்டனர்.
புதுப்பெண்
சென்னை கொருக்குபேட்டை கைலாசம் தெருவைச் சேர்ந்த இப்ராகிம் மகன் சித்திக் (வயது 28). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவருக்கும், பல்லாவரத்தை சேர்ந்த ஹைக்கூக் என்பவரது மகள் சைபுன்னிசா (நிஷா) (23) என்ற பெண்ணுக்கும், 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண்வீட்டார்,
"லட்சக்கணக்கில்" செலவு செய்து நகைகள், சீர் வரிசைகள் கொடுத்தனர்.
இந்த நிலையில், சைபுன்னிசாவிடம் மேலும் வரதட்சணை பணம் கேட்டு, அவரை மாமனார் இப்ராகிம் கொடுமை படுத்தியதாக தெரிகிறது. மேலும் சைபுன்னிசாவை, அவரது கணவர் சித்திக் செக்ஸ் கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. கூடுதல் வரதட்சணை பணம் கேட்டு, சைபுன்னிசாவை, சித்திக் அடித்து கொடுமை படுத்தியதாகவும் தெரிகிறது.
மாமனார்-கணவர் கைது
கொடுமை தாங்காத சைபுன்னிசா, 4 நாட்களுக்கு முன் தாய் வீட்டுக்கு சென்று, கணவன் வீட்டில் நடந்தது பற்றி கூறினார். இதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை கமிஷனர் செந்தாமரை கண்ணன், இன்ஸ்பெக்டர் வீரகுமார் ஆகியோர், இந்த புகார் பற்றி விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சைபுன்னிசாவின் கணவர் சித்திக் மற்றும் மாமனார் இப்ராகிம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2.
குடியாத்தத்தில் வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கைது
குடியாத்தம், அக்.10- 2009
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகன் சிவா வயது (25), ஆட்டோ டிரைவர். அவருக்கும், வேலூரை அடுத்த பொய்கை ராமாபுரத்தை சேர்ந்த ஆஷா (20), என்பவருக்கும் கடந்த 28-8-2006 அன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது 10 சவரன் நகை சீர்வரிசை கேட்டதற்கு பெண் வீட்டார் 5 சவரன் நகையும் சீர்வரிசை பொருட்களும் கொடுத்தனர்.
3 ஆண்டுகள் சந்தோஷமாக குடும்பத்தை நடத்திய சிவா, தன் மனைவியிடம் அடிக்கடி பணம் மற்றும் நகை வாங்கி வா என கொடுமை செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் ஆஷாவை கணவர் சிவா, மாமனார் கோவிந்தராஜ், மாமியார் ஜெகதம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினர் மீதம் போட வேண்டிய 5 சவரன் நகை, ஆட்டோ வாங்க 1 லட்சம் வாங்கி வா என்றும் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
கணவர் கைது
இதனால் பயந்து போன ஆஷா, தன் பெற்றோரிடம் கேட்டு 50 ஆயிரம் ரூபாய் வாங்கி கொடுத்துள்ளார். சிவா அந்த பணத்தில் ஆட்டோ வாங்கினார். சிவா மீண்டும் பணம் கேட்டு கொடுமை செய்யவே தாய் வீட்டிலிருந்து மேலும் 20 ஆயிரம் ரூபாய் வாங்கி வந்துள்ளார். அதனை வாங்கிக் கொண்டு ஆட்டோ ஓட்டிய பணத்தை குடித்து விட்டு வந்துள்ளார். மேலும் ஆஷாவை சந்தேகப்பட்டு இரவு 12 மணிக்கு அருகில் உள்ள ஏரி பகுதிக்கு அழைத்து சென்று ஆஷாவை அடித்து உதைத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த கொடுமைகளுக்கு சிவாவின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஷா புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேணியம்மாள் வழக்குப்பதிவு செய்து கணவர் சிவாவை கைது செய்தனர்.
3.
போளூரில் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல். கணவர் கைது
போளூர், செப்.25- 2009
போளூரில் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருவண்ணாமலை மாவட் டம் போளூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் மீனா, (வயது 29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (33) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிவேதா, நித்யா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
சுந்தர்ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மீனாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் பெற்றோர் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்துள்ளார். சுந்தர்ராஜவக்கு ஆதரவாக அவரது பெற்றோர் ரங்கநாதன், ராணி, சகோதரர்கள் இளங்கோ, இளம்வழுதி, தங்கை தமிழரசி ஆகியோரும் மீனாவை சித்ரவதை செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மீனா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று ரூ.1 லட்சம் வாங்கி வந்து கணவர் சுந்தர்ராஜிடம்கொடுத்துள்ளார். அதற்கு சுந்தர்ராஜும், அவரது வீட்டினரும் இந்த பணம் போதாது மேலும் பணம் வாங்கி வரும்படி கூறியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட தகராறில் மீனா கணவர் சுந்தர்ராஜை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அங்குள்ள அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று சுந்தர்ராஜவம், அவரது தந்தை ரங்கநாதனும் மீனா வேலை பார்த்த இடத்திற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப் படுகிறது.
கணவர் கைது
இதுகுறித்து மீனா போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்தார்.
=================
"கைது" - இதுதான் இந்த 498A செக்ஷன் புகார்களின் மேல் மனைவிகளுக்கும், அவர்களுக்குத் துணை போகும் வக்கீல்களுக்கும் அவ்வளவு அட்ரேக்ஷன்! இந்த சட்டப் பிரிவை, ஒரு மனைவி புகார் கொடுத்தவுடனேயே, இது நடந்திருக்கக் கூடிய முகாந்திரம் இருக்கிறதா என்னும் commonsense சார்ந்த வினாக்களுக்குக் கூட இடம் கொடுக்காமல் கைது செய்யக் கூடிய வகையில் கட்டமைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால், பெரிய பணக்காரப் பையன் ஒரு ஏழைத் தொழிலாளியின் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு மணமானவுடனேயே மனைவி பேரில் ஒரு சொத்தையும் எழுதி வைத்தவர்கள் மேல் "அவர்கள் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தினார்கள்" என்று அந்த மனைவி புகார் கொடுக்க முடியுமா! (நாகர்கோயில் கோபிகா)
குறிச்சொற்கள் 125, 498a, acid, anti-male, arrest, biased laws, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை
கள்ளக்காதல் வலைப் பின்னல்கள்
கள்ளக்காதல் மற்றும் அனைத்து வகை தகாத உறவுகளுக்கும் திருமணம் பெண்களுக்கு ஒரு பரிபூரண பாதுகாப்பை அளிக்கிறது. கணவன் என்னும் பெயரில் ஒரு சோப்ளாங்கி இப்படிப்பட்ட பெண்களுக்கு அவசியம் தேவை. எதற்கு? சிலவுக்குப் பணம் கொடுக்க, இன்னார் மனைவி என்று சமூகத்தில் அந்தஸ்து பெற, தம் பெற்றோர்கள் கடமை (பிரச்னை) தீர, தனக்கு அடுத்த தங்கை இருந்தால் அவளுக்கு திருமணம் முடிக்க, மற்றும் மணமானவள் என்னும் போர்வையில் பிறருக்கு சந்தேகம் எழாத வகையில் எந்த ஆணுடனும் சகஜமாகப் பழக... இப்படி பலவகை உபயோகங்கள் கணவன் என்னும் பதவியில் ஒரு முட்டாள் இருப்பது!
ஆனால் அந்தக் கணவனுக்கோ? அது அவன்தம் உடலில் புரையோடிப் போயிருக்கும் ஒரு கொடூரமான கான்சர் வியாதி. வெட்டி எறியவும் இயலாது. கூட வைத்திருக்கவும் முடியாது. விவாக ரத்து கேட்டால் நீதிபதிகள் கொடுக்கமாட்டார்கள். பெண்கள் பக்கம்தான் பேசுவார்கள். கள்ளக் காதல் சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருக்கின்றன. மேலும் கள்ளக் காதல் சட்டப்படி அதில் ஈடுபடும் பெண் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. தன் மனைவி இன்னொருவனுடன் கணவன் கண் முன்னாலேயே செக்ஸில் ஈடு பட்டால் கூட அவன் சட்டப்படி மனைவி மீது ஒன்றும் செய்ய முடியாது. ஆம். அப்படித்தான் சட்டங்கள் உள்ளன. அப்போ, கணவன் கதி? தினம் தினம் நொந்து அழுகிச் சாக வேண்டியதுதான்! மனைவியிடம் ரொம்ப முறைத்தால் அவள் செக்ஷன் 498A of IPC, Domestic Vilolence Act, Sexual harassment act, maintenance என்று பெண்களுக்குச் சாதகமாக, ஆண்களுக்கு எதிராக, ஒருதலைப் பட்சமாக இயற்றப்பட்டிருக்கும் 40+ வித சட்டங்களை அந்தக் கணவன் மீதும் மற்றும் அவனைப் பெற்ற பாவத்தையும் உடன் பிறந்த பாவத்தையும் செய்திருக்கும் அவனுடய ரத்த உறவுகள் மீதும் ஏவி விட்டு விடுவாள். இதுபோன்ற "ஒரு சார்பு நிலை" (biased, blatantly one-sided and women-centric) சட்டங்கள் திருமணம் என்னும் உறவு முறையையே ஆண்களைப் பொறுத்தவரை நூறு விஷப் பாம்புகளை உடலில் சுற்றிக் கொள்வது போல் மாற்றி விட்டன!
ஒன்றை மட்டும் மட்டும் அறுதியிட்டுச் சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள்:
ஒரு பெண் தன் கனவனை விடுத்து இன்னொருவனுடன் செக்ஸ் உறவு கொள்ள ஆசைப்பட்டு அந்த இன்ப சுகத்தை அடைந்தே தீருவதாக மனத்தில் முடிவு செய்து விட்டால் அதை இவ்வுலகில் எந்த சக்தியாலும் தடுக்க இயலாது. அவள் எப்படியாவது கட்டாயம் சாதித்து விடுவாள். அந்த சுகத்தை அவள் அனுபவிக்க யார் தடையாக இருந்தாலும் அத்தடையை எவ்வகையிலேனும் நீக்கி விடுவாள். இது இயற்கை அவர்களுக்கு அளித்திருக்கும் சக்தி.
இப்போது லேட்டஸ்ட் செய்தி ஒன்று:
சென்னை பாட்டு டீச்சர் மற்றும் சிறு பையன் கொலை வழக்கில் அடுக்கடுக்காக கள்ளக் காதல்கள் பல காவல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளன.
இதைப் படியுங்கள்: (10-10-2009. தினமலர்)
சென்னை : சென்னை அசோக் நகரில் வசித்துவந்த விஜயா (எ) அனந்தலட்சுமி, அவரது மகன் சூரஜ்ராஜ் ஆகியோரை, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில், வேல் முருகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.அவரது "தோழி" நேற்று கைது செய்யப்பட்டார்.
சென்னை அசோக்நகர் இரட்டைக் கொலை வழக்கில், தன்னுடன் "நெருங்கிய தொடர்புடைய" தன்யாவின்(35) நகைகளை அடகிலிருந்து மீட்டுத் தரவே கொலை செய்ததாக, போலீசில் வேல் முருகன் வாக்குமூலம் அளித்திருந்தார். கேரளாவைச் சேர்ந்த தன்யா, சென்னை ஜாபர்கான் பேட்டையில் கணவருடன் வசித்து வந்தார். கணவர், அந்தப் பகுதியில் டீக்கடை நடத்திவந்தார். தன்யாவுக்கும், வேல் முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதுவே நெருக்கமானது.
வேலையில்லாமல் சுற்றித் திரிந்த வேல் முருகன், தன்யாவின் நகைகளை அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தில் உல்லாசமாக செலவு செய்து வந்தார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தன்யாவின் குடும்பத்தினர், கேரளாவில் சொந்த ஊருக்குச் சென்றனர். கணவரோ, நகைகளோடுதான் தன்யா கேரளாவுக்கு வரவேண்டும் என்று நிபந்தனை விதித்துவிட்டார். வேறு வழியில்லாத தன்யா, தன்னிடம் வாங்கிய நகைகளை திருப்பித் தராவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என வேல்முருகனிடம் எச்சரித்தார்.
வேல்முருகன், அசோக் நகரில் தன்னுடன் ஏற்கனவே "நெருக்கமான" தொடர்பில் இருந்த விஜயாவிடம் பணம் கேட்பதற்காகச் சென்றார். அங்கு வாக்குவாதம் முற்றி, இரட்டைக் கொலையில் முடிந்தது. இந்தத் தகவலைச் சேகரித்த போலீசார், சென்னை ஜாபர்கான் பேட்டையில் குடியிருந்த, வேல்முருகனின் தோழி தன்யாவை கைது செய்தனர்.
குறிச்சொற்கள் 125, 498a, anti-male, biased laws, lust, maintenance, manorama, misuse, கள்ளக்காதல், பொய் வழக்கு, மனோரமா
கருத்து யுத்தம் வீடியோ
காணுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்!
குறிச்சொற்கள் 125, 498a, advocates, arrest, biased laws, CrPC, divorce, dv act, harassment, law, misuse, police officer, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை
ஓடிப்போன மனைவியின் கைச்சிலவுக்காக கிட்னியை விற்கும் கணவன்!
சினிமாவைப் பார்த்து லவ் பண்ணி, கைக்காசெல்லாம் காதலிக்காக சிலவு செய்து ஒருபாடாக அவளைத் திருமணம் செய்துகொண்டு விடுகிறீர்கள். "ஆகா, என் மனத்தைக் கவர்ந்த காரிகையையே மணம் புரிந்து கொண்டேன், எனக்கு நிகர் இப்பாரில் யார் உளர்" என்று இறுமாந்து நிற்கிறீர்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியின் காலக்கெடு ஓரிரு மாதங்களே. காதல் மனைவியின் உள்ளக் கிடக்கை எது என்பது ஆண்களால் அறிய முடியாத புதிர். தன்னிஷ்டப்படி நடக்க கணவன் இடைஞ்சலாக இருந்தான் என்பதனால் சல்லி பெறாத விஷயத்திற்காக கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுகிறாள் அந்த வீராங்கனை. அங்கு சென்றவுடன் அவள் அறிவுரை கேட்பது சகுனி மாமாக்களிடமும் பெண்ணிய வாதம் பேசும் கிழக் கோட்டான்களிடமும்தான்.
"திரும்பியும் அவன் கிட்ட போய் நிக்க மாட்டேன்! அவனைப் பார்த்து விடணும் ஒரு கை!" என்பாள். உடனே அவர்கள், "சட்டங்கள் எல்லாமே உன் பக்கம்தான். எனக்குத் தெரிந்த வக்கீல் ஒருவர் இருக்கிறார். போலீசிடமும் மேலும் நீதி மன்றத்திலும் மிகுந்த செல்வாக்குள்ளவர். அவர் மூலம் ஒரு டஜன் கேசுகளை ஒண்ணு மேல ஒண்ணா போட்டு, ஜீவனாம்சம் (alimony), பராமரிப்புத்துகை (maintenance) என்று பல வகையில் தீட்டிப்பிடலாம் தீட்டி. அவனை ஓட்டாண்டியாக்கி நடுத்தெருவில் நிக்க வைத்து விடலாம். கவலைப் படாதே!" என்று கூறும் அறிவுரைகளினால் ஞானம் பெற்று, "ஆகா! பார்க்கிறேன் ஒரு கை!" என்று அடுக்கடுக்காக கேசுகளைப் போடத் தொடங்குகிறாள் அந்த புரட்சிப் பெண் திலகம்.
இப்படித்தான் முடிகின்றன 90%-க்கு மேற்பட்ட திருமணங்களும் (காதல் ரூட்டில் வந்தவை உட்பட).
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்தியாவின் திருமணம் சார்ந்த சட்டங்களின் அடிப்படையில் தன்னிச்சைப்படி கணவனை விட்டு ஓடிப்போன மனைவியின் லிப்ஸ்டிக் சிலவுக்கும், செல்ஃபோன் சிலவுக்கும், அவள் தன்னிஷ்டப்படி உல்லாச வாழ்வு வாழ்வதற்கான சிலவுக்கும் சேர்த்து அந்தக் கண்வன் மாதாமாதம் பணம் கொடுத்து அழவேண்டும். அது அவன் கடமை.
ஆனால் அவனுக்கு அந்த மனைவியிடம் ஏதேனும் உரிமை இருக்கிறதா? ஒன்றும் கிடையாது. "சரீய்யா, அதான் மாசாமாசம் பணம் கொடுக்கிறேனே, இன்னமும் சட்டப்படி அவள் மனைவிதானே, ஒரு இரவு படுக்கை சுகத்தையாவது நான் கொடுக்கிற காசுக்கு கூலியா கொடுக்கக்கூடாதா" என்று கேட்டால், உடனே உங்களை "மனைவியை ரேப் பண்ண முயற்சித்தான்" என்று சொல்லி உள்ளே போட்டுவிடுவார்கள். நான் சும்மா சொல்லவில்லை. சட்டங்களும் அவற்றின் அடிப்படையில் அமைந்த தீர்ப்புக்களும் இப்படித்தான் சொல்கின்றன.
திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்களில் இதுபோன்று ஓடிப்போன மனைவிகள் பல சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் மையிண்டெனன்ஸ் கேட்கலாம். அதாவது:
- குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (Protection of Women against Domestic Violence Act) - இது போன்ற முட்டாள்தனமான சட்டம் உலகத்திலேயே கிடையாது. இதுதான் "பெண்குலம் வன்முறையே செய்யாது. ஆண்கள் மட்டும்தான் வன்முறையில் ஈடுபடுவார்கள்" என்று இருபாலரிடையே பிளவு செய்து வரையறுக்கிறது. இந்த சட்டத்தின்படி வீட்டை விட்டு ஓடிப்போன மனைவி புகார் கொடுத்தால் அவளுடைய கணவனும் அவனுடைய பெற்றோரும் தங்களுக்குச் சொந்தமான வீட்டைவிட்டே ஓடிவிடவேண்டும். கேசு போட்ட ராணியம்மா தன் மனத்துக்குகந்தவர்களுடன் அங்கு குடியேறி "உல்லாசமாக" வாழ்ந்து கொண்டிருக்கலாம்!
- Sec 125 of CrPC (இது மிகக் கொடுமை. பணம் கொடுக்காவிட்டால் உடனே கைதுதான்)
- Sec 24 of Hindu Marriage Act (உங்கள்மேல் கேசு போட அவளுக்கு நீங்களே பணம் கொடுக்கவேண்டும்!)
- Under Hindu Adoptions and Maintenance Act
ஆகையினால் மகா ஜனங்களே, நீங்களோ உங்கள் பையன்களோ திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன்னால் இந்தச் சட்டங்களைப் பற்றிய அறிவைப் பெறுங்கள். சீக்கிறமே எங்கள் அமைப்பு (Save Indian Family Foundation) ஒரு சட்ட விழிப்புணர்வுப் பட்டறையை நடத்தவிருக்கிறது. அது பற்றிய அறிவிப்பு விரைவிலேயே இங்கு வெளிவரும்.
இனி மேலே இடது பக்கத்தில் இருக்கும் செய்தியைப் படித்துவிட்டு இரண்டு சொட்டு கண்ணீர் விடுங்கள். வேறு என்ன செய்ய முடியும் நம்மால்!
குறிச்சொற்கள் 125, 498a, CrPC, divorce, dv act, harassment, maintenance, ஆண்பாவம், பொய் வழக்கு, ஜீவனாம்சம்