மனப்பூர்வமான காதல் முடிவதும் 498-A கேசில்தான்!

இருவரும் நன்கு படித்தவர்கள். ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலித்தனராம். தற்கால சினிமா யுகத்தில் காதல் காவலர்களைச் சேர்த்து வைக்கும் இடமான காவல் நிலையத்தில் கல்யாணம் நடந்தது. திருமணம் நடந்த மூன்று மாதத்திற்குள்ளாகவே காதல் கணவனைச் சேர்த்து 13 பேர்கள் மேல் வரதட்சணைப் புகார் (498A) கொடுத்துவிட்டாள் மகராசி. உடனே அந்த “மனப்பூர்வமாகக் காதலித்த” கணவனையும் அவனது பெற்றோரையும் சகோதரி புருஷனையும் கைது செய்து விட்டனர். ஏனையோரைத் தேடி வருகின்றனராம்!

காதலாக இருந்தாலும், ஜாதகம் பார்த்து முடித்தாலும், சுயம்வரங்கள், மேட்ரிமனி வலைத்தளங்கள் மூலம் முடிவு செய்தாலும், அறிந்தவர்கள், நண்பர்கள் உறவினர்கள் மூலம் ஏற்பாடு செய்திருந்தாலும், கடைசியில் திருமணங்கள் சங்கமம் ஆவது 498A கேசுகளில்தான். அந்தரங்கமாக அன்பு அரவணைப்பில் குடும்பம் நடத்தவேண்டிய தம்பதிகள் அனைவரும் வக்கீலகள், போலீஸ்காரர்கள் சகிதமாக கோர்ட்டு வராண்டாக்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பெண்கள் திருமணம் செய்துகொள்வதே கணவனிடமிருந்து 498-A கேசு போட்டு உள்ளே தள்ளி பிறகு செட்டில் பண்ணுவதற்கு காசு பிடுங்குவதற்குத்தான். அப்போதுதானே இஷ்டப்படி கண்டவனோடு “உல்லாசமாக” இருக்கலாம்!!

இனி செய்தி:-


சேலம்,ஜுலை.17- 2009 - செய்தி: தினத்தந்தி

காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்ட பட்டதாரி பெண்ணிடம் 100 பவுன்நகை மற்றும் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக காதல் கணவர், மாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் தாதகாப்பட்டி அம்மன்நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தியாகராஜன்(வயது24). இவர் எம்.காம் முடித்து விட்டு சேலம் சட்டக்கல்லூரியில் பி.எல். இறுதியாண்டு படித்து வந்தார்.
சேலம் அருகே உள்ள இளம்பிள்ளையை சேர்ந்த சுந்தரவடிவேல்-நீலாவதி தம்பதிகளின் மகள் கிருஷ்ணபிரியா(22). இவர் திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.சி.ஏ. படித்து பட்டம் பெற்றவர். தியாகராஜனும், கிருஷ்ணபிரியாவும் கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை 3 ஆண்டுகள் ஒரே கல்லூரியில் பி.காம் படித்துள்ளனர்.

இருவரும் இறுதியாண்டு படிக்கையில் இருவரும் மனப்பூர்வமாக காதலிக்க தொடங்கி விட்டனர். அதே நேரத்தில் தங்களது படிப்பையும் தொடர்ந்தனர்.இந்த நிலையில் இவர்களின் காதல் விஷயம் பெற்றோருக்கு தெரிந்து எதிர்ப்பு வலுத்தது. காதலன் தியாகராஜன் வீட்டில் வேறுபெண் பார்த்து திருமணம் ஏற்பாட்டை செய்தனர். இதையறிந்த தியாகராஜன், காதலியை சென்னைக்கு அழைத்து சென்று அங்கு ராயபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் ஊர் திரும்பிய காதல்ஜோடி அவரவர்கள் வீட்டிலே இருந்தனர். இந்த நிலையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட விவரம் அறிந்து இருவீட்டாரும் ஊர்மக்கள் மத்தியில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த மார்ச் மாதம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள கோவிலில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடந்தது. அதற்குள் காதலன் வீட்டில் உறவினர் தலையிட்டு, விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்து விட்டனர்.

அதைத் தொடர்ந்து திருமணத்துக்கு காதலன் சம்மதிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்த கிருஷ்ணபிரியா சேலம் மாநகர துணை கமிஷனர் ஜான் நிக்கல்சனை சந்தித்து புகார் கொடுத்தார்.
இது குறித்து சேலம் அனைத்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அப்போது காதலன் தியாகராஜன் திருமணத்துக்கு சம்மதித்தார். அதன்பின்னர் தியாகராஜன்,கிருஷ்ணபிரியா இருவரும் போலீசார் முன்னிலையில் மாலைமாற்றி கொண்டனர்.

ஒருவாரம் காதலி வீட்டில் இருவரும் தங்கி இருந்த நிலையில், காதலனின் பெற்றோர் ஊரார் அறிய முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்து மகன் தியாகராஜனை தங்களது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர். திருமணத்தை முறைப்படி நடத்துவதற்கான நாட்களை தள்ளி வந்தனர். கடந்த ஜுன் மாதம் திருமணநாள் குறித்தனர்.

இந்த நிலையில் தற்போது காதலனின் பெற்றோர், தங்கள் மகனுக்கு கிருஷ்ணபிரியாவை திருமணம் செய்வதென்றால் ரூ.5 லட்சம் ரொக்கம், 100 பவுன் நகை வரதட்சணையாக தரவேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே இருவருக்கும் திருமணம் நடக்கும். இல்லையேல் முடியாது என மறுத்ததாகவும், மேலும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சேலம் அனைத்து மகளிர் போலீசில் காதல் கணவர், மாமியார், மாமனார், இவர்களது மருமகன் மற்றும் உறவினர்கள் 13 பேர் மீது கிருஷ்ணபிரியா நேற்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

காதல் கணவர்-மாமியார் கைது

அதைத்தொடர்ந்து நேற்று காதல் கணவர் தியாகராஜன், மாமியார் உமாராணி(43), அவரது மருமகன் மனோகரன்(28) ஆகியோரை கைது செய்தார். மாமனார் செல்வம் உள்பட 10 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்

2 மறுமொழிகள்:

')) said...

//சேலம் சட்டக்கல்லூரியில் பி.எல். இறுதியாண்டு படித்து வந்தார்.//

ஒரு நச்சுப் பாம்பு நசுக்கப்பட்டு விட்டது. சந்தோஷம்.

')) said...

செவிடன் காதில் உதிய சங்குபோல் இன்னொரு உத்தரவு...

சமூகநல அதிகாரியே விசாரிக்க வேண்டும்: வரதட்சணை வழக்கில் போலீஸ் தலையிடக்கூடாது

http://www.maalaimalar.com/2009/07/20172632/CNI0660200709.html