498A சட்டத்தின் கீழ் இரு நீதிபதிகள் கைது!

ஆந்திராவில் நரசிம்ஹ ராவ் என்னும் கூடுதல் மாவட்ட நீதிபதியும் அவருடைய மனைவியும், அனந்தபூரில் சிவில் நீதிபதியாகப் பணியாற்றும் அவருடைய மகன் கிரண் குமாரும் 498A சட்டத்தின் கீழ் சென்ற வாரம் கைதாகி சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நீதிபதி கிரண் குமாரின் மனைவி சசிகலா கொடுத்த புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை. அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான் (அவன் எப்போது கைதாவான் என்று கேட்கிறீர்களா? என்ன அவசரமய்யா உங்களுக்கு; அவனுக்கு திருமண வயது வரவேண்டுமல்லவா; பிறகுதானே அவனுடைய மனைவித் தெய்வம் 498A புகார் கொடுப்பாள்!)

அந்தப் பெண் தெய்வம் இந்தப் புகாரில் இன்னும் மூன்று பேர்களையும் சேர்த்திருக்கிறார். அவர்களும் சீக்கிறமே கைதாவார்களாம். (கவனமாகப் பாருங்கள்- நம் வலைப்பதிவு நண்பர்கள் எவருடைய பெயரையாவது சேர்த்திருக்கப் போகிறார்கள்!)

ஆனால் இது போதாது. எம்.பிக்களும், அமைச்சர்களும், பெண்ணியவாதிகளும், இதுபோல் பொய் வழக்கு போட்டு கொள்ளையடிக்கும் கெடுமதி வக்கீல்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும், முதலமைச்சர்களும் பெருமளவில் இந்த 498A பொய் வழக்குகளில் கைதாக வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற முட்டாள்தனமான சட்டங்களைத் திருத்துவார்கள்; மேன்மேலும் அடுக்கடுக்காக இதுபோன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களை கட்டமைக்கமாட்டார்கள்.

அந்த நன்னாள் எப்பொது வரும்!

(Times of India செய்தி இங்கே)

1 மறுமொழி:

')) said...

Don't talk about this hereafter;Because if gents talk about this 498A they are filing case it seems!!!!!!