வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மனைவி

பார்வை பறிபோனது; பிரிந்து சென்றார் மனைவி: துரதிருஷ்டம் துரத்தியவருக்கு கைகொடுத்தது கோர்ட்
------------------------------------------------------------
(செய்தி: தினமலர்)

புதுடில்லி: தவறான ஆபரேஷனால், பார்வையிழந்தவரை விட்டுப் பிரிந்த மனைவி, அவர் மீது வரதட்சணை புகார் கொடுக்க, வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டது. அவருக்குக் கைகொடுத்துள்ளது டில்லி ஐகோர்ட்.

டில்லி, மெரவுலி பகுதியை சேர்ந்தவர் கிரிதாரி பண்டாரி. இவருக்கு கண் கோளாறு ஏற்பட்டது. இதற்காக, 2002 மார்ச் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தவறான சிகிச்சையால், பார்வை பறிபோனது. இதனால் வேலையும் பறிபோனது. கிரிதாரி பண் டாரியை துரதிருஷ்டம் துரத்தியது. அவரது மனைவி, ஒரே குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அத்துடன் நின்றுவிடவில்லை; கிரிதாரி மீது வரதட்சணை புகார் செய்தார். இதன் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அதன் பிறகும் கிரிதாரியை விட்டு துரதிருஷ்டம் விலகவில்லை. அவருக்கு கிடைக்கவிருந்த, ராணுவ அமைச்சக கீழ்கோட்ட கிளார்க் பணியும் ரத்து செய்யப்பட்டது. கிரிமினல் குற்றச்சாட்டில், விசாரணையில் உள்ளவருக்கு பணி வழங்க முடியாது என்று ராணுவ அமைச்சகம் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் முறையிட்டார். கிரிதாரி வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், அவரை தற்காலிகமாக பணியமர்த்தும் படியும், ஆறு மாதத்துக்குள் வரதட்சணை கொடுமை வழக்குக்கு தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆறு மாதத்துக்குள், பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு வழியில்லை என்பதால், டில்லி ஐகோர்ட்டுக்கு சென்றார் கிரிதாரி. செய்யாத தவறுக்காக, வேலை பறிபோனதையும், கிடைக்கவிருக்கும் வேலை ரத்து செய்யப்பட்டது குறித்தும் முறையிட்டார்.

விசாரணையின் போது, தனது குழந்தையை அவ்வப்போது பார்க்க அனுமதித்தால், பரஸ்பர விவாகரத்துக்கு தயார் என்று உருக்கமுடன் தெரிவித்தார். இவ் வழக்கை, மனிதநேயத்துடன் அணுக கோர்ட் முடிவு செய்தது. கிரிதாரியின் பணியிடத்தை, காலியாக வைத்திருக்கும் படி ராணுவ அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட டில்லி ஐகோர்ட், போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது.டில்லி ஐகோர்ட் சட்ட சேவை கமிட்டி முன், அடுத்த மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதிக்குள், கிரிதாரி, அவரது மனைவி ஆஜராகி, பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புது வாழ்க்கைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கிரிதாரி.

பெண்களையும் தண்டிக்க சட்ட திருத்தம் தேவை

"குடும்ப வன்முறையால் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் போலி புகார் கொடுக்கும் பெண்கள் மீது, நடவடிக்கை எடுக்க, சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, கேரள கோர்ட் ஆலோசனை வழங்கியுள்ளது.

கேரளாவை சேர்ந்த தம்பதிக்கு 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் சிறிது காலத்துக்கு, வெளி மாநிலத்தில் வசித்தனர். கேரளாவில் உள்ள தனியார் கல்லூரியில், கணவருக்கு விரிவுரையாளர் வேலை கிடைத்தபின் இருவரும் சொந்த மாநிலத்துக்கு திரும்பினர். 1998-ம் ஆண்டு, குழந்தை பிறப்பின்மை பிரச்னைக்கு மனைவி சிகிச்சை பெற்றார். இதன் பிறகு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 2002-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மனைவிக்கு வேலை கிடைத்தது. இதற்காக அவர் சென்னை சென்றார்.

இதன் பிறகு அந்த தம்பதிகளின் வாழ்க்கையில் சிக்கல் உருவானது. 2006-ம் ஆண்டு செப்டம்பரில் அலுவல் பணி காரணமாக மனைவி வெளியூர் சென்றார். உடன் அவரது கள்ளக் காதலனும் சென்றார். இருவரும் போட்ட கும்மாளம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவன உயர் அதிகாரி மொபைல் போனில் மெசேஜ்கள் அனுப்பி கணவருக்கு தெரியப்படுத்தினார்.

இது குறித்து மனைவியிடம், கணவர் விசாரிக்க, பிரச்னை வெடித்தது. அடுத்த நாளே மனைவி தாய் வீட்டுக்குச்ன்று விட்டார். மனைவியின் கள்ளக் காதலனிடம் கணவர் விசாரித்தார். பதிலுக்கு அந்தக் கள்ளக் காதலன் அவரை ஏளனம் செய்தார். இந்த சூழ்நிலையில், வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மனைவி வழக்கு தொடுத்தார். கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் செரியன் குரியகோஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. மொபைல் போனில் வந்த மெசேஜ்களை கணவர் ஆதாரமாக காட்டி, தன் மீது தவறு இல்லை என்பதை நிருபித்தார்.

அந்த மெசேஜ்களை படித்துப் பார்த்த மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார் போலியானது என்பதை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது. தனது கள்ள உறவை மறைப்பதற்காக மனைவி இது போல செய்து இருக்கிறார். குடும்ப வன்முறையால் கணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சட்டத்தின் கீழ் கணவர் மீது, போலி புகார் கொடுக்கப்படுகிறது. இந்த போக்கினால் இந்தச் சட்டமே கேலிக் கூத்தாகி விடுகிறது.

இதைத் தவிர்க்க, குடும்ப வன்முறை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த வழக்கில் கணவர் தான் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு உரிய நிவாரணம் அளிக்க சட்டத்தில் வழியில்லை. சட்டத்தை இயற்றுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கையை சிதைப்பவர்களுக்கு தண்டனை அளிக்க குடும்ப வன்முறை சட்டத்தில் வழி வகை இல்லை என்பது துரதிருஷ்டவசமானது.


இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது


போராட்டம்!

இந்திய பாரம்பரிய குடும்ப வாழ்வு முறையைக் காக்கும் மையத்தினர் (Save Indian Family Foundation) 23-02-2008 அன்று காலை சென்னை மயிலாப்பூரிலுள்ள நாகேஸ்வரராவ் பூங்கா அருகே ஒரு அமைதிப் போராட்டமும் மனிதச் சங்கிலியும் நிகழ்த்தினர். வரதட்சிணை சட்டத்தின் தவறான செயல்பாட்டினால் பாதிக்கப்பட்ட பல ஆண்களும் பெண்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர். ஒரு பெண்மணி தன் சிறு குழந்தையையும் தூக்கி வந்து நின்றது, அவர் எவ்வளவு தூரம் இந்த சட்ட துன்புருத்தலால் பாதிக்கப் பட்டிருந்தார் எனப்தைக் காட்டியது!

இந்த போராட்டத்தில் வினியோகிக்கப் பட்ட கையேட்டில் கண்டிருந்தவை:-

கோரிக்கைகள்
  1. இருபாலரிடையே சமநிலை வேண்டும்
  2. பெண்களுக்குள்ளது போல், ஆண்களின் மேம்பாட்டுக்காகவும் மத்திய அமைச்சரவையில் தனித் துறை வேண்டும் (Men’s Welfare Department)
  3. சட்டத்தின் செயல்பாட்டில் ஆண், பெண் இருபாலருக்கும் சமமான அணுகுமுறை வேண்டும்
  4. பல சட்டங்களினூடே “கணவன்”, “மனைவி” என்று குறிப்பிடப்படும் இடங்களிலெல்லாம் “துணைவர்” (spouse) என்னும் சொல் பயன்படுத்தப்பட வேண்டும்.
  5. தவறு செய்பவர்கள் இருவரில் யாராக இருந்தாலும் சமமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும் (Equal Punishment)
  6. பெண்களுக்கும் தங்கள் பிறந்த வீட்டில் சமமான சொத்துரிமை வழங்கப்பட வேண்டும்
=============================

சட்ட தீர்திருத்தங்கள் வேண்டும்

  1. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A(e) பிரிவு தற்போது பெண்களின் கண்ணியத்தையும் தன்மானத்தையும் பாதுகாக்கிறது. பெண்களுக்கு மட்டும் பொருந்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டப்பிரிவு ஆண்களுக்கும் சேர்த்து இத்தகைய பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் மாற்றப்படவேண்டும் (Article 51A(e) of the Constitution of India is to be amended to include men also).
  2. “கொடுமை” என்பது சட்டப்படி எதைக் குறிப்பிடுவது என்பதை தற்போது போலீசும், புகாரளிக்கும் மனைவியும்தான் முடிவு செய்கிறார்கள். நியாயப்படி அதனை உச்ச நீதிமன்றமோ அல்லது சட்டசபை/பாராளுமன்றமோதான் தீர்மானிக்கவேண்டும். அதுவரை 498அ பிரிவின் செயலாக்கம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்
  3. பாராளுமன்ற விளக்கங்கள் சட்டமாகாது. அத்தகைய விளக்கங்கள் தெளிவில்லாமலும், குழப்பங்கள் நிறைந்தும் இருப்பதால் அவை உச்ச நீதிமன்றத்தால் சட்டப்படி செல்லத்தக்கவையல்ல என்று தீர்வு சொல்லப்படவேண்டும்.
  4. வரதட்சிணை ஒழிப்புச் சட்டமும் கொடுங்கோன்மையான ‘498அ’ பிரிவும் ஸிவில் சட்டப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அவற்றின் மேல் நடவடிக்கை “Civil Procedure Code”-படி அமைதல் வேண்டும்.
  5. சட்டப்பிரிவு ‘498அ’ உடனடி ஜாமீன் பெறத்தக்கதாகவும் (bailable), நேரடிக் குற்றமாகக் கருதப்படாததாகவும் (Non-Cognizable) மாற்றப்பட வேண்டும்.
  6. இச்சட்டத்தின்படியான போலீஸ் விசாரணைகள் நியாயமாகவும், விரைவாகவும் நடைபெற வேண்டும்.
  7. மல்லிமத் கமிஷனின் பரிந்துரைப்படி ஆண், பெண் யாராக இருந்தாலும் ஒழுக்கமற்ற கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும்.
  8. அரசுப் பணியாளர்கள் போலிஸினால் கைது செய்யப்பட்டால் தாற்காலிக வேலைநீக்கம் செய்யும் நடைமுறை உள்ளது. இதில் விதிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

விவாகரத்துச் சட்டங்களை எளிதாக்குக

  • மீள்பெற இயலாத வகையில் திருமண பந்தம் முறிந்து விட்டால் உடனடியாக விவாகரத்து வழங்கப்பட வேண்டும்.
  • ‘498அ’ பிரிவின்கீழ் மனைவி புகார் கொடுத்து (குற்றச்சாட்டுக்கள் உண்மையோ, பொய்யோ) அது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டால் (FIR), சட்டப்படி திருமணம் ரத்து செய்யப்பட்டதாகக் கொண்டு அதற்கான ஆவணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஏனெனில் அத்தகைய குற்றச்சாட்டு எழுந்தபின் சேர்ந்து வாழ்தல் என்பது ஒவ்வாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்த உண்மை.
  • குழந்தைகளின் கண்காணிப்பு உரிமம் (custody), கணவன், மனைவி இருவருக்கும் சமமான நிலையில் வழங்கப்பட வேண்டும். அதேபோல் அந்தக் குழந்தைக்கான சிலவுகளும் இருவராலும் சம அளவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். தற்காலத்தில் இருபாலரும் சம அளவில் பொருளீட்டும் நிலை இருப்பதால் (பல இடங்களில் பெண் ஆணைவிட அதிகம் சம்பாதிக்கும் நிலை இருக்கிறது), அச்செலவு முழுவதும் கணவனுடைய சுமைதான் என்னும் நியதி மாற்றப்படுதல் அவசியம்.
  • சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி குடும்ப வழக்குகள் பதிவு செய்ய்ப்பட்ட ஆறு மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
  • நஷ்ட ஈடு மற்றும் பேணுதலுக்கான துகை சரியான அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும். மேலும் பட்டப் படிப்பு மற்றும் தொழில் சார்ந்த கல்வி பெற்றுள்ள மனைவிக்கு கணவன் ஏதும் பராமரிப்புத் துகை கொடுக்கவேண்டாம் என்பது சட்டமாக்கப்பட வேண்டும்.
  • குடும்ப நீதிமன்றங்களில் நீதிபதிகளும் வக்கீல்களும் “திருமணத்தைக் காப்பாற்றுகிறோம்” என்னும் தவறான அனுமானத்தில், அத்திருமண பிணைப்பைத் தொடர இஷ்டமில்லாத தம்பதிகளை சேர்ந்து வாழும்படி வற்புறுத்தல் நிறுத்தப்பட வேண்டும்.

முதியோர்களை துன்புறுத்துதலை நிறுத்துக

  • 498அ சட்டப்பிரிவின் கீழ் முதியோர்களை கைது செய்தல் சட்ட பூர்வமாக நிறுத்தப்பட வேண்டும்.
  • முதியோர்கள் தங்கள் மகன், மகளுடன் வசிக்கும்போது, அவர்களின் திருமணத்திற்குப்பின் வெளியே துரத்தப்படுவதைத் தடுக்க, அவர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
  • மருமகள் தன் கணவனைப்போல் கணவனின் பெற்றோரையும் பேணுவது அவர்தம் கடமை என்பதை சட்டபூர்வமாக்க வேண்டும்.
  • பாட்டன்மாருக்கும் தம் பேரக்குழந்தைகளின் போஷிப்பு மற்றும் சென்று காணும் வசதி சட்டமாக்கப்பட வேண்டும்.
  • தனியாரால் நடத்தப்படும் முதியோர் காப்பகங்கள் நீக்கப்படவேண்டும். அவை வணிக முறையில் புற்றீசல் போல் தோன்றுவதால் திருமணம் ஆனவுடனேயே பெற்றோரை அங்கு அனுப்பி விடலாம் என்னும் எண்ண்ப் போக்கு மகன்/மருமகள்களுக்குத் தோன்றிவிடுகிறது.
=======================
மேலதிக விவரங்களும் புகைப்படங்களும் அடுத்த இடுகையில்!
இதுபோன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் உதவி பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:-
99410 12958 / 98807 10551 (சென்னை)
நன்றி!

பெருகிவரும் விவாக ரத்துக்கான காரணிகள் - பெண் வக்கீல்களின் கருத்து

தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் ஆண்களும், பெண்களும் சாதனை படைக்கும் நிலையில் விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.


  • மாறி வரும் கலாசார சூழல், உயர் படிப்பு, தேவைக்கு அதிகமான சம்பளம் போன்றவைகளால் திருமணமான சில மாதங்களிலேயே பிரிய துடிக்கும் போக்கு, தம்பதிகளிடையே அதிகரித்து வருகிறது. பண்பாடு, கலாசாரம் மிக்க மதுரையிலும் விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரை குடும்ப நல கோர்ட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், 600 வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது 1600 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதவிர சப் கோர்ட், செஷன்ஸ் கோர்ட்டுகளில் குடும்ப நலம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. குடும்ப நல கோர்ட்டில் மட்டும் சராசரியாக ஒரு மாதத்திற்கு 60க்கு குறையாமல் விவாகரத்து, சேர்ந்து வாழ்தல், ஜீவனாம்சம், குழந்தை உரிமை கோரும் வழக்குகள் தாக்கலாகின்றன.

  • நடுத்தர, ஏழை வர்க்கத்தினரை விட படித்த, நன்கு வசதியுடைய குடும்பங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிகளவில் விவாகரத்து கோருகின்றனர். அவர்களில் பலர் பட்டதாரிகள், டாக்டர்கள், இன்ஜினியர்களாக இருப்பதும் வேதனை அளிப்பதாகும். இன்றைய காலங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம்பாதிக்கும் நிலையுள்ளது.

  • சில இடங்களில் கணவனை விட மனைவி அதிகம் படித்தவராக, சம்பாதிப்பவராக இருக்கின்றனர். திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தாலும் கூட சுதந்திரமாக இருக்க வேண்டும் என கணவனும், மனைவியும் விரும்புகின்றனர். தேவைக்கு அதிகமாக பணம் சேரும் போது தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடக்க முயலும் போது ஈகோ பிரச்னை தலைதுஷக்குகிறது. நாளடைவில் அவர்களிடையே இடைவெளியையும் ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்க இரண்டு பேரும் விட்டு கொடுத்து சென்றால் பிரச்னை இருக்காது.

  • பெயர் சொல்ல விரும்பாத மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், "அதிக படிப்பு, கை நிறைய சம்பளம் ஆகியவற்றை எதிர்பார்த்து திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. குடும்ப நடத்த பணம் போதும், மகள் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என பெற்றோர் கருதுவதே இறுதியில் திருமண முறிவுகளுக்கு காரணங்களாகி விடுகிறது. குடும்பம் என்றால் என்ன? தாம்பத்ய வாழ்க்கையின் தத்துவம் என்ன? நல்லது, கெட்டது எது? என்பதை புரிந்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்த செல்லும் போது பிரச்னை ஏற்படுகிறது. எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு எப்படி அவசியமோ அதுபோல செக்ஸ் கல்வியும் அவசியம். குறிப்பிட்ட வயதானதும் செக்ஸ் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.


  • வக்கீல் ஜெயா இந்திரா பட்டேல்:

    கணவனுக்கும், மனைவிக்கும் ஏற்படும் ஈகோ பிரச்னை தான் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக உள்ளன. இன்று தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் வளர்ச்சி எதிரொலியாக இளம் ஆண்களும், பெண்களும் அளவுக்கு அதிகமாக சம்பாதிக்கும் நிலை உள்ளது. தேவைக்கும் அதிகமாக வருமானம் வரும் போது செலவழிக்கத் தெரியாமல் பணத்தை இறைக்கின்றனர். தேவையில்லாத பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர்.




    நாளடைவில் குடும்பத் திற்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கோர்ட்டுகளுக்கு வருகின்றனர். ஆரம்பத்திலேயே யாராவது ஒருவர் விட்டு கொடுத்து பொறுமையாக போனால் எந்த பிரச்னையும் வராது. விட்டு கொடுக்காத பட்சத்தில் பிரச்னை தான். சில வழக்குகளில் பிரிந்து போகயிருந்த கணவனும், மனைவியும் ஒன்றாக சேர்ந்து வாழ விரும்பினாலும் கூட அவர்களது பெற்றோர்களுக்கு உள்ள ஈகோ காரணமாக சேர்ந்து வாழ முடியாமல் போய் விடுகிறது.



  • குடும்ப நல கோர்ட் ஆலோசகர் சித்ரா:

    திருமணமான தம்பதியரிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. கணவனும், மனைவியும் தனித்தனி நபர்கள். தன்னை போல இருக்க வேண்டும். தன்னை போல மாற வேண்டும் என ஒவ்வொருவரும் எதிர்பார்க்கின்றனர்.. அதற்கு மாறாக அமையும் போது பிரச்னை ஏற்படுகிறது.. ஏதாவது ஒரு கருத்து வேறுபாடு ஏற்படும் போது யாராவது ஒருவர் அமைதியானால் எந்த பிரச்னையும் ஏற்படாது. மேலும் இன்றைய இளம் பெண்களும், ஆண்களும் நிழலுக்கும், நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களாகவுள்ளனர்.



    அவர்களுக்கு பெற்றோர் நல்லது கெட்டதை விளக்க வேண்டும். சிறு வயது திருமணம் அல்லது காலம் கடந்த திருமணம் போன்றவையும் திருமண முறிவுகளுக்கு காரணங்களாகிவிடுகிறது. மேலும், குடும்பத்தில் இரண்டு பேரும் சம்பாதிக் கும் நிலையில் பிரச்னை ஏற்படும் போது அவரவர் விருப்பத்திற்கு செயல்படுகின்றனர். வேறு நபர்களுடன் தொடர்பு வைத்து ஆறுதல் தேட முயற்சிக்கின்றனர். இவையும் விவாகரத்து அதிகரிப்பதற்கு காரணங்கள்.

  • நன்றி: தினமலர்.

வரதட்சணை கொடுமை புகார் - நிறைமாத கர்ப்பிணி அலைக்கழிப்பு

சென்னை : வரதட்சணை கொடுமை புகார் தொடர்பாக நிறைமாத கர்ப்பிணியை 150 கி.மீ., துஷரம் அலைய வைத்ததாக கரூர் பெண் போலீசார் மீது மாநில மனித உரிமை கமிஷனில் புகார் கூறப்பட்டுள்ளது.


சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ராதா என்பவர் சார்பில் வக்கீல்கள் எஸ்.ஜெயக்குமார், வி.எஸ்.சுந்தர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

எனது சகோதரருக்கும் ஜான்சி என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 2ம் தேதி
சகோதரருடன் தகராறு செய்து விட்டு, ஜான்சி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
எங்கள் குடும்பம் மீது கரூர் போலீசில் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தனர். சேலம்
ஆத்துஷரில் கணவனுடன் வசித்து வந்த எனது சகோதரி சரஸ்வதி நிறைமாத கர்ப்பிணி. அவரை
வலுக்கட்டாயமாக கரூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து சட்டவிரோத காவலில்
வைத்தனர். அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்கவில்லை. இதனால் வாந்தி எடுத்து மயங்கி
விழுந்தார். கர்ப்பிணியாக இருந்த போதிலும் கருணை காட்டாமல் மனிதாபிமானமற்ற முறையில்
போலீசார் நடந்து கொண்டனர்.இதையடுத்து வக்கீல்கள் எஸ்.ஜெயக்குமார், வி.எஸ்.சுந்தர்
ஆகியோரை தொடர்பு கொண்டேன். அவர்கள் போலீஸ் உயர் அதிகாரி ராஜாவிடம் பேசினர். அவரது
தலையீட்டால் எனது சகோதரி விடுவிக்கப்பட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். எனது சகோதரியை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கரூர்
இன்ஸ்பெக்டர் ஷரீனா, கான்ஸ்டபிள்கள் பானுமதி, பரிமளம் உட்பட போலீசார் சித்ரவதை
செய்துள்ளனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

--------------------

செய்தி : தினமலர்

இப்படியும் சில குடும்பங்கள்

பொதுவாக இட உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே வாடகைக்கு
குடியிருப்பவர்கள் கோர்ட் உத்தரவுபடி வெளியேற்றப்படுவர். ஆனால், மிகவும் அரிதாக,
பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மகன் மற்றும் மருமகளை வீட்டிலிருந்து வெளியேற்ற
கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பையில் புறநகர் பகுதியான விலே பார்லியில் தங்கியிருக்கும் வயதான தம்பதிகளுக்கு ஒரு மகனும், மருமகளும் உள்ளனர். அவர்கள் தங்கி இருக்கும் வீடு வயதான தாய்க்கு சொந்தமானது. மகன் மற்றும் மருமகள் இடையே தினமும் சண்டை தான். ஒரு கட்டத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வயதான தம்பதியின் மகன் கோர்ட்டுக்கு சென்று விட்டார். அந்த வீட்டில் இருந்து மனைவியை வெளியேற்ற வேண்டும் என்ற மகனின் கோரிக்கையை கோர்ட் நிராகரித்து விட்டது. இதன் தொடர்ச்சியாக மாமியாருக்கும், மருமகளுக்கும் தினமும் மோதல் தான். ஒருவர் மீது மற்றொருவர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்து கொண்டனர். ஆனால், பிரச்னை தான் தீரவில்லை. இறுதியில் வயதான பெண், வக்கீல் நிதின் வாட்கார் என்பவர் உதவியுடன் செசன்ஸ் கோர்ட் கதவுகளை தட்டினார்.

"மகன் மற்றும் மருமகள் தினமும் போடும் சண்டையால் வயதான தம்பதியாகிய எங்களால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே, மகன் மற்றும் மருமகளை வீட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.வயதான தம்பதிகளில் பெண்ணுக்கு 76 வயதாகிறது; ஆணுக்கு 80 வயதாகிறது. அவர்கள் கோர்ட் கதவுகளை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களின் பெயர்களை வெளியிடவும் மறுப்பு தெரிக்கப் பட்டது. இந்த வழக்கை கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஆர்.பி. மாலிக் விசாரணை செய்தார். அந்த வீட்டில் இருந்து மகனும், மருமகளும் நான்கு வாரங்களுக்குள் வெளியேற வேண்டும் என்று இடைக்கால உத்தரவும் பிறப்பித்தார். கோர்ட் உத்தரவின் பேரில் மகனும், மருமகளும் வெளியேற்றப்படுவது மிகவும் அரிதான ஒன்று என்று வக்கீல்கள் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

கள்ளக்காதலனுடன் மனைவி சல்லாபம் கையும் - களவுமாக கணவனிடம் சிக்கினார்

சென்னையை அடுத்த சேலையூர் அருகே இருப்பது ராஜகீழ்ப்பாக்கம். இங்குள்ள சின்மயா காலனியைச் சேர்ந்தவர் அன்பழகன் (28). டியூசன் மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி மகாலட்சுமி (25) தி.நகரில் உள்ள ஒரு "கால் சென்ட்"டரில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் மூன்று வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு அன்பழகன் வீட்டிற்கு சென்றார். வீட்டின் முன்பக்க கதவு மூடியிருந்தது. "காலிங் பெல்" அடித்தும் கதவு திறக்காததையடுத்து மனைவியின் மொபைல் போனில் அன்பழகன் அழைத்தார். அப்போதும் கதவு திறக்கப்படவில்லை. வெகுநேரம் கழித்து மகாலட்சுமி கதவைத் திறந்தார். சந்தேகமடைந்த அன்பழகன் நேராக "பெட் ரூம்" செல்ல முயன்றார். அப்போது, வேகமாக சென்ற மகாலட்சுமி "பெட்ரூம்" கதவை மூடினார். மேலும் சந்தேகமடைந்த அன்பழகன், "பெட்ரூம்" கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டின் சுற்றுச் சுவரை தாவி ஒருவர் குதிப்பதை பார்த்தார். உடனே, அந்த நபரை துரத்தி பிடித்தார் அன்பழகன். மனைவியையும், அந்த நபரையும் சேலையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து புகார் கொடுத்தார். போலீசாரின் விசாரணையில் மகாலட்சுமியின் கள்ளக்காதலன் மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்த அப்துல் அமீது என்பவரின் மகன் ரப்பானி (29) என்பதும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்ததும் தெரியவந்தது. மகாலட்சுமி பணிபுரியும் "கால்சென்ட்"டரில் ரப்பானியும் பணிபுரிந்து வருவதும். ஒன்றரை வருடமாக இருவருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மகாலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். "நான் ரப்பானியுடன் தான் வாழ்வேன். எனது பெண் குழந்தையும் ரப்பானிக்கு பிறந்தது தான்" என்று போலீசாரிடம் வாதிட்டார். அதைக் கேட்ட மறு நிமிடமே, "மனைவி வேண்டாம்" என்று அன்பழகன் போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.

அன்பழகன், அவரது மனைவி மகாலட்சுமி மற்றும் கள்ளக்காதலன் ரப்பானி ஆகிய மூன்று பேரும் மேடவாக்கத்திலுள்ள ஒரே கல்லுரியில் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரியில் படிக்கும் போது அன்பழகனுக்கும், மகாலட்சுமிக்கும் காதல் ஏற்பட்டு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். மகாலட்சுமி வேலைபார்த்த அதே "கால்சென்ட்"டரில் ரப்பானிக்கும் பணி கிடைத்துள்ளது. மகாலட்சுமியும், ரப்பானியும் ஏற்கனவே நண்பர்கள் என்பதால் நெருங்கி பழகியுள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செய்தி: "தினமலர்"