வீட்டை விட்டு துரத்தியதாக கணவர் உள்பட 8 பேர் மீது இளம்பெண் போலீசில் புகார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
சாத்தூர் அருகே உள்ள ஊத் துப்பட்டியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள ஒரு புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், சோரம்பட்டியைச்சேர்ந்த கார் டிரைவர் துரைப்பாண்டி என்பவருக் கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 30 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் துரைப்பாண்டிக்கு 11/2 பவுனில் பிரேஸ்லெட், மோதிரம் ஆகியவை கொடுத்தனர். எங்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதனிடையே எனது கண வர் துரைப்பாண்டிக்கும், சிவகாசியில் உள்ள ஒரு வங்கி மானேஜரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனை நான் தட்டிக்கேட்டேன்.
இதனால் ஆத்திரமடைந்த எனது கணவர் துரைப்பாண்டி, மாமனார் மாரியப்பன், மாமியார் முனியம்மாள் கொழுந்தனார் பூபாண்டி, உறவினர்கள் குணசேகரன், பாண்டிகனி, போலீஸ்காரர் தமிழரசன், வங்கி மானேஜரின் மனைவி ஆகியோர் என்னை சித்ரவதை செய்து வீட்டை விட்டு துரத்தினர். எனவே அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டு உள்ளது.
மனுவை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு, புகார் மீது நடவடிக்கை எடுக்கசாத் தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் கணவர் துரைப்பாண்டி உள்பட புகார் கூறப்பட்ட 8 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் பெயரும் புகாரில் இருக்கப் போகிறது ஜாக்கிறதை!
குறிச்சொற்கள் 498a, harassment, law, misuse, ஆண்பாவம், கள்ளக்காதல், செக்ஸ், பொய் வழக்கு, வெறி
கள்ளக் காதலனை கைப்பிடிப்பதற்காக கணவரை கொன்ற புதுப்பெண்
பெங்களூர், ஏப்.16- 2009
திருமணம் ஆன 5 மாதங்களில், கணவரை கொன்ற புதுப்பெண் கைது செய்யப்பட்டார். கல்லூரி காதலனை கைப்பிடிப்பதற்காக அவர் கணவரை கொலை செய்தது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர், ராமசாமி பாளையம் நஞ்சுண்டப்பா கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் உமேஷ்கிருஷ்ணன் (வயது 26). கம்ப்னிட்டர் என்ஜினீயர். இவர் பெங்களூரில் ஒரு கால் சென்டரில் வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி பெயர், ஹனிமேரி.
உமேஷ் கிருஷ்ணன் ஈரோட்டை சேர்ந்தவர். இவரது தந்தை ரெயில்வே துறையில் வேலை செய்து வருகிறார். உமேஷ்கிருஷ்ணன்-ஹனிமேரி திருமணம், கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. அதன் பிறகு 2 பேரும் பெங்களூரில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் மார்ச் மாதம் 2-ந்தேதி அதிகாலையில் மர்ம மனிதர்கள் வீட்டிற்கு நுழைந்து உமேஷ்கிருஷ்ணனை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து தப்பி விட்டதாக பக்கத்து வீட்டில் வசித்தவர்களிடம் ஹனிமேரி பதற்றத்துடன் கூறினார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது உமேஷ்கிருஷ்ணன் கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய முகம் முழுவதும் செல்லோ டேப் ஒட்டப்பட்டிருந்தது.
தகவல் கிடைத்ததும் பெங்களூர், பானஸ்வாடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், ஹனிமேரி புகாரில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது செல்போன் நம்பரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி ஹனிமேரியை கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-
கல்லூரி காதல்
ஹனிமேரி, கோயம்புத்தூரில் படிக்கும்போது அவருக்கு முத்துகுமார் என்ற என்ஜினீயருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முத்து குமார், திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர். கடந்த 2006-ம் ஆண்டு கோயம்புத்தூரில் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த போது ஹனிமேரி-முத்து குமார் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்தது.
இதற்கிடையே, முத்துகுமார் என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார். இந்தநேரத்தில்தான், ஹனிமேரிக்கும் உமேஷ்கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
ஹனிமேரியின் தந்தையும் உமேஷ்கிருஷ்ணனின் தந்தையும் நண்பர்கள். 2 பேரும் ரெயில்வே துறையில் வேலை செய்து வந்ததால் நட்பு அடிப்படையில் 2 குடும்பத்தினரும் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் ஹனிமேரி தனது காதல் விவகாரத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.
ஹனிமேரி-உமேஷ் தம்பதி திருமணம் முடிந்ததும் பெங்களூருக்கு தனிக்குடித்தனம் வந்தார்கள். பெங்களூர் பானஸ்வாடி போலீஸ் சரகத்தில் உள்ள நஞ்சுண்டப்பா கார்டன் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் வசித்தனர்.
திருமணம் ஆன பிறகும் ஹனிமேரிக்கு தனது காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்தார். பெற்றோர் பார்த்து திருமணம் செய்துவைத்த கணவனோடு வாழ அவரது மனம் இணங்கவில்லை. உமேஷ், கால்சென்டர் வேலைக்கு சென்றதும் ஹனிமேரி குஜராத்தில் உள்ள முத்துகுமாருடன் செல்போனில் பேசுவது வழக்கம்.
அப்போது, 2 பேரும் தங்களது காதல் நாட்களை மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்கள். இதனால் ஹனிமேரியின் மனம், கணவனை விட்டு காதலனை நாடத்தொடங்கியது. இதன்விளைவு ஹனிமேரிக்கு காதலனுடன் வாழ வேண்டும் என்று விரும்பத்தொடங்கினார். இதனால் ஹனிமேரி காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்ட ரகசிய திட்டத்தை தீட்டினார்.
முத்துகுமார் அந்த ரகசிய திட்டம் பற்றி அவருடன் வேலைபார்க்கும் சஜ்ஜன் என்பவரிடம் கூறினார். சஜ்ஜன் அவருடைய நண்பரான சந்தன் என்பவரிடம் கூறி, ஆலோசனை கேட்டுள்ளார். அதன் பிறகு பிபின் குமார் மற்றும் பாஸ்கல் ஆகிய 2 பேர் பெங்களூருக்கு வந்து ஹனிமேரியை சந்தித்து முத்துகுமார்தான் தங்களை அனுப்பினார் என்று கூறினர்.
பிபின்குமார், பாஸ்கல் ஆகிய 2 பேரும் ஹனிமேரி தங்கியிருந்த வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் யார் வசிக்கிறார்கள் என்பது பற்றி நோட்டம் விட்டு குஜராத் சென்று முத்துகுமாரிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உமேசை எப்படி கொலை செய்வது என்று ஆலோசனை நடத்தினார்கள்.
சம்பவத்தன்று அதிகாலை பிபின்குமார் மற்றும் பாஸ்கல் ஆகிய 2 பேரும் உமேஷ் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர். அவர்களது வருகையை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த ஹனிமேரி இரவு கதவை பூட்டாமல் சாத்தியே வைத்திருந்தார். இதனால், எந்த சத்தமும் இல்லாமல் அவர்கள் 2 பேரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அப்போது உமேஷ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். உடனே, அவர்கள் 2 பேரும் உமேசின் கை கால்களை கட்டிப்போட்டு முகத்தில் செல்லோ டேப் கொண்டு அழுத்தமாக ஒட்டி விட்டனர். இதனால் மூச்சு திணறி உமேஷ் பரிதாபமாக இறந்தார்.
அதன் பிறகு, ஹனிமேரியிடம் இருந்து தங்கச்சங்கிலி மற்றும் 2 செல்போன்களை வாங்கிக்கொண்டு அவர்கள் 2 பேரும் குஜராத் சென்று முத்துகுமாரிடம் தகவலை தெரிவித்தனர். பிபின்குமார் மற்றும் பாஸ்கல் ஆகிய 2 பேரும் தப்பி சென்ற பிறகு, ஹனிமேரி வெளியே வந்து அக்கம் பக்கத்து வீட்டினரிடம் கொள்ளையர்கள் அவரது கணவரை கொலை செய்துவிட்டு நகைகளை பறித்துச்சென்றதாக நாடகம் ஆடியது விசாரணையில் அம்பலம் ஆனது.
இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கடந்த 11-ந் தேதி பிபின் குமாரை சென்னையில் கைது செய்தார்கள். ஹனிமேரி, பெங்களூரில் உள்ள அவரது மாமா வீட்டில் இருந்த போது கைது செய்யப்பட்டார்.
இவர்கள் 2 பேரும் போலீசாரிடம் சிக்கி விட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட முத்துகுமார், சந்தன், பாஸ்கர் மற்றும் சஜ்ஜன் ஆகிய 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள். கொலை செய்தபின் ஹனிமேரி-முத்துகுமார் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பூஜாவின் தெய்வீகக் காதல்
முன்பு ஜெயகாந்தன் எழுதிய கதையொன்றில் இது போன்ற பதிவிரதை சொல்வாள், “அவன் பூட்டான்; இவன் வண்ட்டான்” என்று. அதுபோல் உள்ளாடை மாற்றுவதுபோன்று கணவனை மாற்றும் காரிகைகள் நிறைந்த உலகமடா இது. அவள் இருந்தும் கெடுப்பாள்; செத்தும் கெடுப்பாள்!
இந்த உன்னதக் காதல் கதையைப் படியுங்கள். அந்தக் கணவன் கதை ஒரு பரிதாபம். இந்தக் காதலன் கதை ஒரு கந்தல். வாழ்க பெண்ணியம். வளர்க பெண்கள் விடுதலை! வீழ்க ஆண்குலம்!
பூந்தமல்லி, ஏப்.19- 2009. காதலன் கை விட்டதால் துணை நடிகை பூஜா (தெனாவெட்டு, அதிசயமணல் மாதா உள்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.) தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையொட்டி அவருடைய காதலனை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த போரூர் காரம்பாக்கம் பொன்னி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் ஷேர்-ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி காமாட்சி (45). இவர்களுடைய மகள்தான் துணை நடிகை பூஜா (25).
இவருக்கும் திலீப் குமார் (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெயலட்சுமி (3) என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பூஜாவுக்கும், திலீப் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு (இதற்க்குக் காரணம் மனைவியினுடைய பழைய காதலுடன் அவள் தொடர்ந்த கள்ளத் தொடர்பு) 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். மேலும் திலீப் குமார் மனைவி வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டார். (நெலைமைய்யா!)
இந்த நிலையில் பூஜாவின் பழைய காதலன் நீலாங்கரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகன் (25) அடிக்கடி பூஜாவை சந்தித்து தனது காதலை புதுப்பித்தார்.
உல்லாசமாக இருப்பதற்குப் பெயர் கற்பழிப்பா?
நான்கு நாட்கள் ஒரு பிளஸ் டூ படிக்கும் பையனுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, அவன் கற்பழித்தான் என்று புகார் கொடுக்கிறாள் ஒரு பெண்ணரசி. அதையும் ஏற்றுக்கொண்டு காவல் துறை அந்தப் பையனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.
உல்லாசம் அனுபவித்தது இருவரும். ஆனால் கைது மட்டும் அந்தப் பையனை! என்னய்யா முட்டாள்தனமான சட்டங்கள் இந்த நாட்டிலே!
இந்தச் செய்தியைப் படியுங்களேன்:-
கற்பழிப்பு வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது
அம்பத்தூர், ஏப்.18- கற்பழிப்பு வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அம்பத்தூர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சுதாராணி. இவர் அரசு பொதுத்துறை நிறுவனமான தொலை பேசித் துறையில் வேலை செய்றீது வருகிறார். இவர்களுடைய மகள் கீதா (வயது 17-பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற கீதா இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாராணி அம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகிலா வழக்குப்பதிவு செய்து மாயமான கீதாவை வலை வீசி தேடினார்.
இந்த நிலையில் மாயமான கீதா அம்பத்தூர் பஸ் நிலையத்தில் அழுதபடி நின்று கொண்டிருந்தார். ரோந்து பணியில் இருந்த போலீசார் விசாரித்தபோது காணாமல் போன கீதா என்பது தெரிய வந்தது. அவரிடம் மாயமான சம்பவம் குறித்து போலீசார் துருவித் துருவி கேட்டனர். அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே உள்ள மதனபள்ளி எங்களது சொந்த ஊர். அங்கிருந்தபோது எனது தந்தை ரவி இறந்து விட்டார். அவரது வேலை வாரிசு அடிப்படையில் எனது தாய்க்கு கிடைத்தது. அவர் அம்பத்தூரில் வீடெடுத்து தங்கி இருந்தார். நான் மதனபள்ளியில் எனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தேன்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அசோக்குமாருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை காதலிக்க தொடங்கினேன். இருவரும் உயிருக்கு உயிராக நேசித்தோம். இதற்கு எங்கள் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
உல்லாசம்
இதையடுத்து என்னை அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இருப்பினும் நானும் அசோக்குமாரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். இதற்கிடையே கடந்த 13-ந் தேதி சென்னை வந்த அசோக்குமார், உடனடியாக என்னை கோயம்பேடு வரச் சொன்னார். அதன்படி நானும் கோயம்பேடு பஸ் நிலையம் சென்று அங்கிருந்து இருவரும் மதனபள்ளிக்கு சென்றோம். அங்கு எனது சக மாணவி அனிதா வீட்டிற்கு சென்று தங்கினேன். அங்கு வைத்து என்னை கட்டாயப்படுத்தி அசோக்க்குமார் உல்லாசமாக இருந்தார். இப்படி 4 நாள்கள் உல்லாசமாக இருந்தார். இதற்கிடையே என்னைக் காணவில்லை என்று எனது தாயார் அம்பத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் என்னை தேட தொடங்கினார்கள்.
இதனால் பயந்து போன அசோக்குமார் என்னை சென்னை அழைத்து வந்து அம்பத்தூர் பஸ் நிலையத்தில் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இவ்வாறு கீதா கூறினார். கைது இதை தொடர்ந்து உஷாரான போலீசார் விரைந்து செயல்பட்டு அம்பத்தூர் கனரா வங்கி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அசோக்குமாரை மடக்கிப் பிடித்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் ஜமால், கற்பழிப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை (19) கைது செய்தார். 24 வயது பூர்த்தி ஆனவுடன் தான் புழல் மத்திய சிறையில் அடைக்கமுடியும். கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அசோக்குமாருக்கு 19 வயது ஆவதால் சைதாப்பேட்டை கிளை சிறையில் (சப்-ஜெயில்) அடைக்கப்பட்டார்.
குறிச்சொற்கள் lust, அராஜகம், ஆண்பாவம், கள்ளக்காதல், செக்ஸ், பொய் வழக்கு, வெறி
தந்தைகள் ஜாக்கிறதை!
இதுநாள்வரை கணவன்மார்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள், உடன் பிறப்புக்கள் மட்டும்தான் கண்ணியமற்ற இளம் பெண்களின் கைகளில் சிக்கி, பொய் வழக்குகளில் மாட்டி விடப்பட்டு சீழிந்து கொண்டிருந்தனர். ஆனால் இந்தப் பிரச்னை தற்போது இந்த சாராருடன் நிற்காமல் அடுத்த பரிமாணம் எடுத்துவிட்டது!
”ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து” தற்போது இந்தப் பெண்கள் தங்களுடைய தந்தையர்கள் மேலும் பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யத் துணிந்து விட்டனர். இதற்கு செய்தித் தாள்களும், ஊடகங்களும், பெண்ணியவாதிகளும் துணை போகின்றனர்.
முந்தைய பதிவு ஒன்றில் தன்னுடைய ஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்ததால் பெற்றோரைப் படுகொலை செய்த இளம் பெண்ணைப் பற்றிப் படித்தோம். இப்போது ஒருபடி மேலே போய், தான் கேட்டபோது பணம் கொடுக்க மறுத்தாலோ, அல்லது தன் உடன்பிறந்த சகோதரனுக்கு ஏதாவது உதவி செய்தாலோ, அல்லது தான் யாரையோ இழுத்துக் கொண்டு ஓடுவதற்கு மறுப்பு சொன்னாலோ, உடனே, “என் தந்தை என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். பல ஆண்டுகள் என்னை அடைத்து வைத்து வன்புணர்ந்தான்” என்று வாய் கூசாமல் பொய் புகார் ஜோடிப்பதில் இந்தப் பெண்கள் இறங்கியிருக்கிறார்கள். உடனே பெண்ணியவாதிகள் “ஓ”வென்று காது கிழியக் கூச்சலிடுவார்கள். ஊடகங்கள் அந்தப் பெண்ணின் “கண்ணீர்க் கதையை” மீண்டும் மீண்டும் வெளியிட்டு மேலும் பல பெண்கள் இத்தகைய அட்வென்சரில் இறங்க ஊக்குவிக்கும்.
ஆகையால் பெண்ணைப் பெற்றவர்களே, ஜாக்கிறதை!
இதோ, இந்தச் செய்தியை வாசியுங்கள்:-
தாராபுரம், ஏப்.18- கொடைக்கானலில் சாமியாரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கல்லூரி மாணவி, தாராபுரம் போலீசில் சரணடைந்தார். "என்னை யாரும் கடத்தவில்லை. வீட்டில் என் தந்தை என்னை கொடுமை படுத்தியதால்தான் நான் வீட்டைவிட்டு வெளியே வந்து சாமியார் அசோகிஜியுடன் இருக்கிறேன்.'' என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் புளியமரத்து செட் என்னும் இடத்தில் ஷீரடி சாய்பாபாவுக்கு ஒரு கோவில் கட்டி, அதன் அருகில் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் அசோக்ஜி. இவர் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் மந்திரம் மூலம் விபூதி வரவழைத்து ஜோதிடம் சொல்லி வந்தார். இந்தநிலையில், கொடைக்கானல் ஏரிச்சாலையில் பெட்டிக்கடை நடத்தி வரும் செல்வம் என்பவர் அசோக்ஜியின் சீடர் ஆனார். இளம்பெண் மாயம் அதனால் செல்வம் வீட்டுக்கு சாமியார் அசோக்ஜி அடிக்கடி வருவது வழக்கம். அப்போது, கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வரும் செல்வத்தின் மகள் ராகசுதா (வயது 19)வுடன் அசோக்ஜிக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில்,
``என் மகள் ராகசுதாவை சாமியார் அசோக்ஜி கடத்திச் சென்று விட்டார். என் மகளை கண்டுபிடித்து தர வேண்டும்'' என்று செல்வம் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். தனிப்படை போலீசார், தலைமறைவான அசோக்ஜி, மாணவி ராகசுதா இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், மாணவி ராகசுதா நேற்று முன்தினம் காலையில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தார். மாஜிஸ்திரேட்டு சந்திரனிடம் (பொறுப்பு) கோர்ட்டில் சரணடைவதாக கூறி மனு கொடுத்தார். மனுவை பெற்ற மாஜிஸ்திரேட்டு சந்திரன் (பொறுப்பு), இந்த சரண்டர் மனுவில் கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்த நகல் இணைக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளதா, இல்லையா என்றும் தெரியவில்லை. எனவே இளம்பெண் ராகசுதாவின் சரண்டரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை மாணவி ராகசுதா, வக்கீல் சேகர் மூலம் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மறைமலை முன் சரணடைந்தார். "என் தந்தையால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். என்னை யாரும் கடத்தவில்லை. என் தந்தையின் தொந்தரவை தாங்க முடியாமல் தான் வீட்டைவிட்டு வெளியே வந்தேன்'' என்று, போலீஸ் துணை சூப்பிரண்டிடம் கூறினார்.
"இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொடைக்கானல் போலீசில் உள்ளதாலும், கொடைக்கானல் சரக போலீஸ்தான் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்பதாலும் நாங்கள் பாதுகாப்பு வழங்கமுடியாது'' என்று தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தெரிவித்தார்.
பின்னர் ராகசுதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் குடும்பத்துக்கும் அசோக்ஜிக்கும் கடந்த 16 வருடமாக பழக்கம் உண்டு. இதன் காரணமாக அவர் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வருவார். அதுபோன்று நாங்களும் அடிக்கடி அவரது வீட்டுக்கு செல்வோம்.
என் தந்தை, "பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது; ஆண் பிள்ளைகள்தான் படிக்க வேண்டும்'' என்ற கொள்கை உடையவர். இதன் காரணமாக என்னை 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கக் கூடாது என்று கூறினார்.
இந்த நிலையில், அசோக்ஜி பலருக்கு உதவி செய்து வந்தார். அதனால் எனது படிப்புக்கு உதவி செய்யுமாறு அவரிடம் கேட்டேன். அதனால் அவர் என்னை படிக்க வைத்தார்.
நான் 12-ம் வகுப்பு முடித்த பின்பு பி.சி.ஏ. படிக்க விரும்பினேன். எனது விருப்பத்தை தந்தையிடம் கூறினேன். அவர் `நீ படிக்கவே கூடாது' என்று சொல்லி என்னை துன்புறுத்தினார்.
படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், நான் அசோக்ஜியிடம் சென்று என்னை பி.சி.ஏ. படிக்க வைக்குமாறு கூறினேன். அவரும் நான் பி.சி.ஏ. படிக்க அனைத்து உதவிகளும் செய்தார். தற்போது நான் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.
எனது படிப்புக்கு அசோக்ஜி உதவி செய்து வருவதும், நான் படித்து வருவதும் என் தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் கடந்த வாரம் நான் படித்து வரும் கல்லூரிக்கு வந்து, மாணவிகள் முன் என்னை அடித்து உதைத்தார். இது எனக்கு பெரிய அவமானமாக இருந்தது.
வீட்டுக்கு சென்ற நான் பெற்றோரிடம் இருக்க பிடிக்காமல், வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டேன். என்னை அசோக்ஜி கடத்தி சென்று திருமணம் செய்துவிட்டதாக என் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். என்னை அசோக்ஜி கடத்தவும் இல்லை; திருமணம் செய்யவும் இல்லை. வீட்டில் என் தந்தை என்னை கொடுமை படுத்தியதால்தான் நான் வீட்டைவிட்டு வெளியே வந்து இருக்கிறேன்.
இனிமேல் நான் எனது வீட்டுக்கு செல்ல மாட்டேன். ஏதாவது ஒரு காப்பகத்தில் தங்கியிருந்து பி.சி.ஏ. படிப்பை முடித்து விட்டு, பின்னர் ஐ.ஏ.எஸ். படிக்க உள்ளேன். இவ்வாறு இளம்பெண் ராகசுதா கூறினார்.
இந்தநிலையில், தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த கொடைக்கானல் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரனிடம், மாணவி ராகசுதாவை கொடைக்கானல் அழைத்து செல்கிறீர்களா என்று கேட்டதற்கு, அவர் கூறியதாவது:-
"ராகசுதா மீது எந்த வழக்கும் பதிவு செய்ய வில்லை. எனவே நாங்கள் அவரை கொடைக்கானல் அழைத்து செல்லவில்லை. அவர் தாராபுரம் போலீசில் சரண் அடைந்துள்ளார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. ராகசுதாவை கடத்தி சென்ற சாமியார் அசோக்ஜி இங்கு வந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்தான் இங்கு வந்தோம். ஆனால் சாமியார் இங்கு இல்லை என்பதால் நாங்கள் அவரை தீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் கூறினார்.
இளம்பெண் ராகசுதா, தாராபுரத்தில் உள்ள வக்கீல் மூலம் கொடைக்கானல் வக்கீலிடம் ஒப்படைக்கப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தெரிகிறது.
குறிச்சொற்கள் father, harassment, husbands, parents, குடும்பம், கொலைவெறி, பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
லாரி டிரைவரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி
ராசிபுரம் அருகே லாரி டிரைவரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றதாக அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வட்டூர் குட்டகாரனூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). லாரி டிரைவர். இவரது மனைவி அமிர்தவள்ளி (32). இவர்களுக்கு அழகரசன் (17) என்ற மகன் உள்ளான். கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத் தன்று குடிபோதையில் கணேசன் வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைதொடர்ந்து கணேசன் தூங்கி விட்டார்.
நள்ளிரவு நேரத்தில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த கணேசன் தன் மீது பெட்ரோல் ஊற்றப்படுவதை அறிந்து , திடுக்கிட்டு எழும்ப முயற்சி செய்தார்.
அப்போது அவரது கை, கால்கள் படுத்திருந்த கட்டிலோடு கட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அருகில் இருந்த மனைவி அவர் மீது தீ வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
வலி தாங்க முடியாமல் கணேசன் எழுப்பிய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் உயிருக்கு போராடிய கணேசனை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனின் மனைவி அமிர்தவள்ளி, மகன் அழகரசன் ஆகியோரை கவூது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டப் பந்தய வீராங்கனை!
மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் ஓட்டம்!
அம்பத்தூர், ஏப்.16- 2009. தினத்தந்தி
சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அபிராமபுரத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் விஜயலட்சுமி (வயது17). இவருக்கும் திருத்தணியை சேர்ந்த கிரி என்பவருக்கும் மே மாதம் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தநிலையில் விஜய லட்சுமியின் பெற்றோர் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்தனர். அப்போது விஜயலட்சுமி வீட்டிலிருந்த தனது தங்கை உமாமகேஸ்வரியிடம் வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது `நிச்சயம் செய்த மாப்பிள்ளை பிடிக்காததால் விஜயலட்சுமி வீட்டை விட்டு ஓடியதாக தெரிய வந்தது. விஜயலட்சுமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
------------
இதுபோல் பல ஓட்டங்களை நீங்கள் இனிமேல் எதிர்பார்க்கலாம். திருமணத்திற்குப் பிறகும், காலணாக் காசு பெறாத சில்லறைக் காரணங்களுக்குக்கூட கோபித்துக் கொண்டு ஓடி விடுவார்கள் மனைவிமார்கள். அதைத் தட்டிக் கேட்க கணவனுக்கோ அவனது பெற்றோருக்கோ உரிமையே கிடையாது. அப்படி ஏதேனும் கேள்வி கேட்டால், ஒரு கிழிந்த காகிதத்தை எடுத்து, “என்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார்கள்” என்று கிறுக்கி காவல் நிலையத்திற்கு அனுப்பினால் உடனே கணவனையும் அவனது பேற்றோரையும், உடன் பிறப்புக்களையும் கைது செய்து விடுவார்கள்.
ரேணுகா சவுத்திரியும் அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியும் இந்தியாவில் திருமணம் என்பதையே ஆண்களைப் பொருத்தவரை ஒரு பாம்புப் புற்றாக மாற்றிவிட்டனர்.
ஆண் குழந்தைகளைப் பெற்றவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது!
குறிச்சொற்கள் 498a, lust, கள்ளக்காதல், பொய் வழக்கு, வரதட்சணை, வெறி