பெண் போலீஸாருக்கு ஐகோர்ட்டு சாட்டையடி!

விசாரணைக்கு அழைத்து வருபவர்களை பெண் போலீசார்
துன்புறுத்தக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு

விசாரணைக்காக அழைத்து வருபவர்களை பெண் போலீஸ்
நிலையத்தில் துன்புறுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அடித்ததாக புகார்

முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி ரோசையா என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து கையே உடைந்து போகும் அளவிற்கு தன்னை பெண் போலீஸ் அதிகாரிகள் அடித்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பிரச்சினை குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஒருவரை நியமித்து, விசாரித்து ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டுமென்று நீதிபதி ஆர்.ரகுபதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

கண்டனம்

இந்த மனு நீதிபதி ஆர்.ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மகளிர் போலீஸ் நிலையத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று சில விதிமுறைகளை வகுத்து இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:-

மகளிர் போலீஸ் நிலையங்கள் சமரச மையமாக செயல்பட
வேண்டும்.

வயதானவர்களையும், கைக்குழந்தையுடன் வரும் பெண்களையும், சிறுவர்களையும், கர்ப்பிணி பெண்களையும் அவர்களது வயது, உடல் நலம் வித்தியாசம் பார்க்காமல் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையங்களுக்கு வரவழைத்து கொடுமைப்படுத்துவதாகவும், அவர்களைத்
தாக்குவதாகவும் புகார்கள் வருகின்றன. தேவையில்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன. இந்த போக்கு மாற வேண்டும். இதன் மூலம் சட்டம் கொண்டு வந்த நோக்கமே பாதிக்கப்பட்டுவிட்டது.

சாதாரண பிரச்சினையை கூட மகளிர் போலீஸ் நிலையத்தில் பெரிதாக்கி விடுகிறார்கள்.

புகார் உண்மையானதுதானா என்பதை ஆராயாமலேயே மேல் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர். விசாரணை என்ற பெயரில் குடும்பத்தையே துன்புறுத்துகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவரை துன்புறுத்தும் நோக்கில் சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கைது நடவடிக்கைகளும் வாரத்தின் கடைசி நாளான வெள்ளியன்று மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இரண்டு நாட்கள் அவர்கள் ஜாமீனில் வரமுடியாது.

கணவன்-மனைவி பிரச்னைகளை போலீஸ் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அதனால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர வழி பிறக்கும். இத்தகைய வழக்குகளை பெண் போலீஸார்தான் திறமையாகக் கையாள்வர் என்று சட்டம் இயற்றுபவர்கள் கருதியுள்ளனர். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்கள்
எல்லாம் கணவன் மனைவி ஒன்று சேரவதற்கான சமரச மையங்களாக இருக்கும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடைமுறை அனுபவத்தைப் பார்த்தால், சிறிய சிறிய பிரனைகளுக்குக் கூட பெரிய அளவிலான குற்றம் என்று வர்ணம் பூசப்படுகிறது.

கணவனுக்கும் குடும்பத்தினருக்கும் எதிராக குற்றச் சாட்டுக்களைக் கூறுமாறு பெண்கள்ஊக்கப்படுத்தப் படுகின்றனர். இதனால் தேவையில்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்கி, குடும்பத்தினரையும் போலீஸ் நிலையங்களுக்கு இழுக்கின்றனர். இதனால் வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தின் நோக்கமே
பாழடிக்கப் படுகிறது.

அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் சட்ட விதிகள் மீரப்படுவதாக அடிக்கடி குற்றச் சாட்டுக்கள் வருவதால் அரசுக்கு கீழ்க்கண்ட பரிந்துரைகளை தெரிவிக்கிறேன்:-

  • வரதட்சணை சாவு, தற்கொலை போன்ற கடுமையான குற்றங்களை தவிர மற்ற புகார்களை வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் அனுமதி பெற்றுத்தான் பெண் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
  • வயதானவர்கள், உடம்புக்கு சரியில்லாதவர்கள், மைனர்கள் போன்றோரை பெண் போலீசார் கைது செய்யக்கூடாது.
  • இப்படிப்பட்டவர்களை கைது செய்யவேண்டுமென்றால் போலீஸ்
    சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்து அவர்களது அனுமதி பெற்றுத்தான் கைது செய்யவேண்டும்.
  • ஒருவர் தப்பி ஓடிவிடுவார் என்று இருந்தால் கூட, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதற்கான உத்தரவை கோர்ட்டில் பெற்றபின் அவரைக் கைது செய்யலாம்.
  • முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்.
  • விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வருபவர்களை பிரம்பால், கையால் தாக்க கூடாது. அதே சமயம், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு சீதன பொருட்களை உடனடியாக பெற்றுத் தந்துவிட வேண்டும்.
  • கோர்ட்டு நடவடிக்கை மற்றும் சட்டம் பற்றித் தெரிந்துகொள்ள பெண் போலீசாருக்கு தேவையான பயிற்சி முகாம் நடத்த வேண்டும். இதற்காக டி.ஜி.பி. தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
  • மகளிர் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு தனி சீருடை வழங்கலாம். புகார்தாரர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குழந்தையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரசு இல்லங்களில் தங்க அனுமதிக்கலாம்.


இவ்வாறு நீதிபதி தனது இடைக்கால உத்தரவில்
குறிப்பிட்டிருந்தார்.

செய்தி: தினமலர், தினத்தந்தி


வாலிபரின் கையை உடைத்த பெண் போலீஸ்

செய்தி: தினத்தந்தி - 5 ஜூலை, 2008

போலீஸ் நிலையத்தில் வாலிபர் கை உடைப்பு: பெண் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரை விசாரிக்க வேண்டும்போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கையே உடைந்து போகும் அளவுக்கு அடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பழகியதால் திருமணம்

சென்னை புதுப்பேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் குருவையா. இவர் மனைவி நரம்மா. இவர்களுடைய மகன் ரோமையா (வயது 24). இவர் வசிக்கு வீட்டருகே சுப்புலட்சுமி வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். இவரது மகள் ராதிகா (20).

ராதிகாவுடன் ரோமையா பழகி வருவதால், 2 பேருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து 27.9.07 அன்று 2 பேருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. அதன் பிறகு 5 நாட்கள் வேறொரு இடத்தில் 2 பேரும் குடும்பம் நடத்தினர்.

விவாகரத்து வழக்கு

பின்னர் ரோமையா, சென்னை குடும்பநல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். தனக்கு சிலர் கட்டாயத் திருமணம் செய்து விட்டதாக வழக்கில் கூறி இருந்தார். இந்த நிலையில் ரோமையா மீது சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ராதிகா வரதட்சணைக் கொடுமை புகார் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ரோமையா மனு
தாக்கல் செய்தார். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் 3 வாரங்கள் தொடர்ந்து அவர் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 6 நாட்கள் தொடர்ந்து ரோமையா கையெழுத்து போட்டு வந்தார்.

லத்தியால் அடி

இந்த நிலையில் ஐகோர்ட்டை மீண்டும் ரோமையா அணுகி, முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தும்படி கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். ரோமையா தரப்பில் வக்கீல் உதயபானு ஆஜரானார். முன்ஜாமீன் பெற்று 6 நாட்களுக்குள் நிபந்தனையை தளர்த்த முடியாது என்று நீதிபதி கூறினார்
.
நிபந்தனையின் அடிப்படையில் கையெழுத்து போடச் சென்ற போது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, ரோமையாவிடம் , ``இன்ஸ்பெக்டர் கட்டி வைத்த பெண்ணை நீ விவாகரத்து செய்யக் கூடாது'' என்று கூறி லத்தியால் அடித்ததாகவும், இதனால் உடைந்து போகும் அளவுக்கு கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரோமையா தரப்பில் கூறப்பட்டது.

கோர்ட்டில் விசாரணை

அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நவனீதம், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி ஆகியோரை கோர்ட்டுக்கு வரவழைத்து நீதிபதி விசாரணை நடத்தினார். வரதட்சணை கொடுமை வழக்கில், எப்.ஐ.ஆர். போடாமல் விசாரித்து வருவதாக இன்ஸ்பெக்டர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. எப்.ஐ.ஆர். போடாமல் விசாரணை நடத்துவதை நீதிபதி கண்டித்தார்.

மேலும் அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கும் குறையாத அதிகாரியை போலீஸ் கமிஷனர் நியமித்து, நவனீதம், விஜயகுமாரி ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதுதொடர்பாக அறிக்கை தயாரித்து, 7-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது

சட்டம் படுத்தும் பாடு



நன்றி: தினமலர்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது


மனைவியை பிரிப்பதாக கணவரிடமும், கணவரை சேர்த்து வைப்பதாக மனைவியிடமும் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு


சென்னை, ஜுலை.2-
சென்னையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.


கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது


சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சியாமளா. இவரது கணவர் பெயர் சதீஷ்குமார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவருக்கும், சியாமளாவுக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சதீஷ்குமார் லண்டனில் வேலை பார்க்கிறார். இனிதாக இல்லற வாழ்க்கை நடத்திய இவர்களுக்குள் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சதீஷ்குமார், இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்துள்ளதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், சியாமளா அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி (வயது 56) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். தினமும் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, ஜாமீன் நிபந்தனைப்படி கையெழுத்து போட்டு வருகிறார்.


லஞ்ச புகார்


இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, சதீஷ்குமாரிடமும், சியாமளாவிடமும் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. சதீஷ்குமாரை சேர்த்து வைப்பதாக சியாமளாவிடமும், சியாமளாவை பிரித்து வைப்பதாக சதீஷ்குமாரிடமும் பணம் கேட்டு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சியாமளாவிடம் ரூ.25 ஆயிரம் பணம் கேட்டு, பின்னர் ரூ.10 ஆயிரமாவது தரவேண்டுமென்று ராஜலட்சுமி மிரட்டியுள்ளார்.


இது தொடர்பாக சியாமளா, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு இயக்குனர் நடராஜன் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சூப்பிரண்டு ஆசியம்மாள், துணை சூப்பிரண்டு அலிபாஷா ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ் ஜோசப், வேதரத்தினம் ஆகியோர் இதுதொடர்பாக விசாரித்தார்கள்.


கைதானார்


நேற்று சியாமளாவிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சென்னை நகரில் இந்த ஆண்டு இதுவரை லஞ்ச புகாரில் 3 இன்ஸ்பெக்டர்களும், 2 சப்-இன்ஸ்பெக்டர்களும், 2 போலீஸ் ஏட்டுகளும் கைதாகியுள்ளனர்.


~ செய்தி: தினத்தந்தி. படம்: Times of India (02-07-2008)


மனைவி புகார் கொடுத்தால் போதும்; கணவன் கைது செய்யப்படுவான் என்னும் சட்ட நடைமுறை தொடர்ந்து இருக்கும் வரை இதுபோன்ற பல அராஜகங்களை வரும் நாட்களில் எதிர் பார்க்கலாம்.


ஆண்களே, இப்ப்டியும் ஒரு திருமணம் உங்களுக்குத் தேவையா!!

கோபம் கொண்டு கணவன் பேசாவிட்டாலும் சட்டம் பாயும்

"மருமகளுக்கு மாமியார் சாப்பாடு தரவில்லை என்றால் கூட அதை வன்முறையாகக் கருதி, வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் மாமியார் மீது நடவடிக்கை எடுக்கலாம்,'' என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். சமூக நலத்துறை மற்றும் அண்ணா மேலாண்மை மையம் சார்பில், "குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டம்' பயிற்சி துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. அண்ணா மேலாண்மை மையத்தின் இயக்குனர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்றார். சமூக நலத்துறையின் இயக்குனர் மணிவாசன் பேசுகையில், "குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டத்தை தமிழக அரசு 2006ம் ஆண்டு கொண்டு வந்தது.

மனைவியை கணவர் அடித்தார் என்பதும் வன்முறை தான். மனதளவில் மனைவியை துன்புறுத்துவதும் வன்முறை தான். மாமனார், மாமியார் கொடுமையிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இச்சட்டம் வழிகாட்டுகிறது,'' என்றார்.

மாநில மகளிர் ஆணையத் தலைவி ராமாத்தாள் பேசுகையில், "மனைவியை அடிப்பதும், உதைப்பதும் வன்முறை தான். அதேபோல மனைவியிடம் கோபப்பட்டு அவருடன் நான்கு நாட்கள் பேசாமல், சாப்பிடாமல் சில கணவர்கள் இருப்பார்கள். இதுவும் வன்முறையாக எடுத்துக் கொள்ளப்படும்,'' என்றார்.

மனைவியிடம் கோபம் கொண்டு கணவன் பேசாமல் இருந்தால் அது வன்முறை. உடனே கணவனை கைது செய்யலாம். ஆனால் கண்வன் மீது கோபம் கொண்டு மனைவி பேசாமல் இருந்தாலோ உணவு இட மறுத்தாலோ அது குற்றமேயில்லை. என்ன நியாயமடா இது!

மனைவி ஈமெயில் அனுப்பினால் கணவன் கைது!

கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ஸ்வாதி என்பவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இவருக்கும் ஸ்ரீநிவாஸ் என்பவருக்கும் சென்ற ஃபெப்ரவரியில் திருமணம் நடந்து இருவரும் அமேரிக்காவில் வசிக்கின்றனர். கணவர் இம்மாதம் 12-ம் தேதி விசாகப்பட்டினத்திற்கு தன் உறவினர் ஒருவரின் மரணத்தின் காரணமாக வந்திருக்கிறார். உடனே அவருடைய மனைவி ஸ்வாதி போலீஸுக்கு ஒரு ஈமெயிலில் கணவர் வரதட்சிணை கொடுமை செய்ததாக புகார் கொடுத்தார். உடனே போலீசார் அந்த கணவரையும் அவரது தந்தை மற்றும் குடும்பத்தினரையும் இரவு 8 மணிக்கு கைது செய்துவிட்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பெண் கொடுத்துள்ள புகாரில் அவர் அமேரிக்காவில் கொடுமை செய்யப்பட்டதாகவும் ,அங்கு கடுமையாக தாக்கப் பட்டதாகவும், தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகவும், இன்னும் என்னென்ன எழுதினால் சட்டத்தின் அத்தனை பிரிவையும் போட்டுத் தாக்க முடியுமோ எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார். ஆனால் இவையெல்லாம் நடந்ததாகச் சொல்லப்படுகிற அமெரிக்காவில் ஒரு புகாரும் கொடுக்கவில்லை. உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்க மண்ணில் நடந்து அங்கு புகார் கொடுத்திருந்தால் அங்கு கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் பொய் புகார்களை இந்தியாவில் தானே கொடுக்க முடியும்!

ஆகையினால் இந்திய இளைஞர்களே, உங்களுக்கு இப்படியொரு திருமணம்தான் தேவையா?

சிந்தியுங்கள்!

இந்து திருமண சட்டம் குடும்பங்களை உடைக்கிறது - சுப்ரீம் கோர்ட் நீதிபதி!

புதுடெல்லி: இந்து திருமண சட்டம், குடும்பங்களை வலுப்படுத்துவதற்கு பதிலாக குடும்பங்களை உடைக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வேதனையுடன் கூறினார்.இந்து திருமண சட்டம் 1955-ம் ஆண்டு இயற்றப்பட்டதாகும். 2003-ம் ஆண்டு வரை இந்த சட்டத்தில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள விவாகரத்து தொடர்பான விதிகள் ஆங்கிலேய சட்டத்தில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.
இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் சமீபகாலமாக கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் குவிந்து வருகின்றன. இது பற்றி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவிக்கையில் இந்து திருமண சட்டம் குடும்ப அமைப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்தவர் கவுரவ் நாக்பால். இவருடைய மனைவி சுமேதா வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பசாயத் சில கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:


குடும்பங்களை உடைக்கும் சட்டம்

குடும்பங்களை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்து திருமண சட்டம். ஆனால் தற்போது அந்த சட்டம் நேர் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்பங்களை இணைப்பதற்கு பதிலாக உடைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுகிறது. இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து கேட்டு கோர்ட்டுகளில் வழக்குகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. திருமணம் ஆகும்போதே விவாகரத்துக்கான முன் எச்சரிக்கை
மனுவையும் தாக்கல் செய்து விடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு பாதிப்பு


கணவனும், மனைவியும் விவாகரத்து கேட்டு பிரிந்து விடுகிறார்கள். ஆனால் இந்த பிரிவால் மோசமாக பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள்தான். அதிலும் பெண் குழந்தையாக இருந்து விட்டால் அதன் எதிர்காலம் அதிகம் பாதிக்கும். அந்த பெண் குழந்தை, திருமணத்தின் போது பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். எனவே குழந்தைகளின் நலனை நினைத்தாவது தம்பதிகள் தங்களுடைய சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். தங்களை விட தங்கள் குழந்தையின் எதிர்காலம்தான் முக்கியம் என்று உணர வேண்டும்.

முன்னோர்கள், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை வீட்டின் நான்கு சுவர்களுக்கும் தீர்த்துக்கொள்வார்கள். தற்போது இருப்பதைப் போன்ற சிக்கல்களை அவர்கள் சந்தித்தது இல்லை. தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு தொழுநோயோ, மனநிலை பாதிப்போ இருந்தால் விவாகரத்து வழங்கலாம் என்று இந்து திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியை பல தம்பதிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள்.


இவ்வாறு நீதிபதி பசாயத் கூறினார்