tag:blogger.com,1999:blog-2478809881162523304.post3078820959836719070..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: தேவை ஒரு கள்ளக்காதல் பாதுகாப்பு இயக்கம்!இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-61092865949797718412009-10-09T15:06:23.887+05:302009-10-09T15:06:23.887+05:30இன்னொரு கள்ளக்காதல் கொலை:
அரூர் அருகே கள்ளக்காதலை...இன்னொரு கள்ளக்காதல் கொலை:<br /><br />அரூர் அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவன் வெட்டிக்கொலை<br />தாய் - மகன் கைது<br /><br />அரூர்,செப்.29- 2009<br /><br />அரூர் அருகே கள்ளக் காதலை கண்டித்த கூலித்தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாய், மகனை போலீ சார் கைது செய்தனர்.<br /><br />இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-<br /><br />கூலித்தொழிலாளி<br /><br />தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வீரப்பநாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ராமு(வயது 42) கூலித் தொழிலாளி. இவரது மனைவி காஞ்சனா(38). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ராமுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காஞ்னாவுக்கும் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த முனுசாமி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.<br /><br />இந்த தொடர்பை ராமு கண்டித்து வந்துள்ளார். இருந்தும் அவர்கள் 2 பேரும் கள்ளத் தொடர்பை கைவிட வில்லை. இதனால் கணவன்-மனை விக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதே போல நேற்று முன் தினம் ராமு குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத் திரமடைந்த மனைவி கஞ்சனா மகன் கார்த்திக்(15) 2 பேரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் ராமு மயங்கி விழுந்தார். இதை கண்ட 2 பேரும் அங்கிருந்து தப்பி யோடிவிட்டனர்.<br /><br />பரிதாப சாவு<br /><br />அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ராமுவை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் வெள்ளைசாமி மற் றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.<br /><br />மேலும் இது தொடர்பாக ராமு மனைவி காஞ்சனா, அவரது மகன் கார்த்திக் 2 பேரையும் இன்ஸ்பெக்டர் வெள்ளைசாமி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த கொலையில் கள்ளக் காதலன் முனுசாமிக்கு தொடர்பு உண்டா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இ.பி.கோ 498Ahttps://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.com